சங்கப் பனுவல்கள் – தொகுப்பு மரபு – திணை மரபு

சங்கப் பனுவல்கள் – தொகுப்பு மரபு – திணை மரபு, சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், பக்.136, விலை ரூ.135. ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுபவை கி.மு.550 முதல் கி.பி.600 வரை படைக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. பல்வேறு காலங்களின் பல்வேறு வாழ்நிலைகளைச் சித்திரிக்கும் இந்தப் பாடல்களில் கூறப்படுபவை, தொடக்க காலத்தில் படைக்கப்பட்ட பாடல்களிலிருந்து கடைசியில் படைக்கப்பட்ட பாடல் வரை ஒன்றாகவே இருக்க வாய்ப்பில்லை. மேலும் அவற்றிற்கு உரையெழுதியவர்கள், பதிப்பித்தவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தின், அவர்களின் கருத்துநிலையில் இருந்துதான் சங்க […]

Read more

சிந்தித்த வேளையில்…

சிந்தித்த வேளையில்…, சி.சைலேந்திரபாபு, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.232, விலை ரூ.200. மனம், மாணவர், இளைஞர், பெற்றோர், அறிவியல், ஆசிரியர், வாழ்க்கை, போராட்டம், கல்வி, விளையாட்டு, பொது ஆகிய 11 பிரிவுகளில், மண்ணில் எவ்வாறு நல்லவிதமாக வாழ வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது. ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இவற்றையெல்லாம் இனிமேல் கடைப்பிடிப்பேன் என சபதம் செய்து கொள்பவர்களில் எத்தனை பேர் தொடர்ந்து அவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது? தொடர்ந்து கடைப்பிடிக்க எப்படித் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்? என்பது நூலின் முதல் பிரிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பிரிவில், […]

Read more

அவள்

அவள் – பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியப் பார்வை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள இந்நூல் உரையாடலுக்கான நூலாகும். பல்வேறு சமயங்களில் உள்ள பெண்களைச் சிறுமைப்படுத்தும் போதனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நபிகள் காலத்தில் பெண்களுக்கு அரசியல் முதல் ஆன்மீகம் வரையில் சமத்துவ உரிமைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் நூலாசிரியர். பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் கட்டுப்பாடுகள் என்ற வாதத்தை எதிரொலிக்கும் […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தனது வாழ்நாள் முழுவதும் வேர்ச் சொல் ஆராய்ச்சிலேயே மூழ்கிக் கிடந்தவர் தேவேநேயப் பாவாணர். தமிழ் மொழியில் ஒவ்வொரு வேர்ச்சொல்லும் எவ்வாறு திரிகின்றன என்பதை தனது பல ஆண்டுகால ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தொகுத்துத் தந்து இருக்கிறார். சில தமிழ்ச் சொற்களை வேறு மொழிகள் எடுத்துக் கொண்டாலும், அவை மூலத்தினாலும், தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும் என்பதை நேர்த்தியாக விளக்கி இருக்கிறார். தமிழ் ஆய்வாளர்களுக்கும், புலவர்களுக்கும் இந்த நூல் […]

Read more

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், அழகர் நம்பி,  சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.504, விலை ரூ. 450. சாணக்கியர் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்‘ நூல், அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றிப் பொதுவாகப் பேசினாலும், ஓர் அரசனின் கடமைகளில் தொடங்கி, கீழ்மட்ட அரசு அலுவலர்களின் பணிகள் வரை தெளிவாக விவரிக்கிறது. அரசனின் பாதுகாப்பு, அரச ஊழியம், வாரிசு முறை, அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள், கருவூல அதிகாரிகள், வேளாண்மை, காடு வளர்ப்பு, சட்டமும் நீதியும், மண வாழ்க்கை, குற்றப் புலனாய்வு, பாலியல் குற்றங்கள், ராணுவ அமைப்பு போன்ற எல்லாப் பிரிவுகள் […]

Read more

திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்

திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்,  கீழப்பாவூர் ஆ.சண்முகையா, ராஜ கோகிலா அறக்கட்டளை, பக். 150, விலை ரூ.100. திருமூலர் அருளிய திருமந்திரம் சிவபெருமானைப் போற்றிப்பாடும் வகையில் தோத்திர நூலாகவும், சைவ சித்தாந்தங்களைக் கூறுவதில் சாத்திர நூலாகவும், யோகங்களை விரித்துரைப்பதில் யோக நூலாகவும் திகழ்கிறது. ஏழு தந்திரங்களைக் கொண்ட இந்நூலின் இரண்டாம் தந்திரம் பற்றிய பாடல்களுக்கு வெறும் விளக்கம் மட்டும் தராமல், சங்க இலக்கியங்கள், பன்னிரு திருமுறைகள், திருக்குறள் முதலியவற்றோடு ஒப்பிட்டுக் கூறி, சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் […]

Read more

பழைய யானைக் கடை

பழைய யானைக் கடை (சங்கம் முதல் சமகாலக் கவிதைகள் வரை),  இசை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.168, விலை ரூ. 195. சங்க காலம் முதல் சமகாலக் கவிதைகள் வரை உள்ள கவிதைகளில் ‘விளையாட்டு‘ (நகைச்சுவை) எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. தனிப்பாடல் திரட்டில்தான் முதன் முதலாக நிறைய நகைச்சுவை, பகடி, சிலேடை, அங்கதச் சுவையுடைய பாடல்கள் உள்ளன. தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்றாக நகை (சிரிப்பு) இடம்பெறுகிறது. ‘அங்கதம்‘ பற்றிய இலக்கணத்தையும் அது குறிப்பிடுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களில் நகைச்சுவைப் […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழ் நாடக உலகில் முடிசூடா மன்னராக விளங்கியவர் டி.கே.சண்முகம். இளைஞரான அவர்,அவ்வை மூதாட்டிய நடித்து “அவ்வை சண்முகம்” என்று போற்றப்பட்டார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், எம்.எஸ்.திரவுபதி உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் இவரது நாடகக் குழுவில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் புகழ் பெற்றனர். அவ்வை சண்மகத்தின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் டி.கே.எஸ்.கலைவாணன் சிறப்பாக எழுதியுள்ளார். டி.கே.சண்முகத்தின் ஆற்றலைப் புகழ்ந்து, தலைவர்களும், தமிழறிஞர்களும் தெரிவித்த கருத்துக்களும் இந்த நூலில் […]

Read more

ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்

ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்,  சுப.உதயகுமாரன், வல்லமை, பக்.95, விலை ரூ.90. சமூகத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? வீடுதான் மனித வாழ்வின் அடித்தளமாக அமைகிறது. அனைத்து வீடுகளையும் சேர்த்துதான் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புகிறோம். அன்பையும், அறத்தையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் இடங்களாக வீட்டை மாற்ற வேண்டும். அப்போதுதான் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இன்றைய வீடு எப்படி இருக்கிறது? வீட்டில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ள, […]

Read more

ஞான மூலம்

ஞான மூலம், அண்ணன் ஜெயகாந்தனுடன் இளமைப்பருவம்,  த.நடராஜன், வேமன் பதிப்பகம், பக்.160; விலைரூ.100. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் தம்பி எழுதிய நூல். இளமைக் காலத்திலிருந்து ஜெயகாந்தனுடனான தனது அனுபவங்களை இந்நூலில் அவர் பதிவு செய்துள்ளார். சிறுவயதிலேயே சண்டை போடும் குணம் ஜெயகாந்தனுக்கு இயல்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தனது தம்பியை (நூலாசிரியரை) நாய் கடித்துவிட்டதைத் தெரிந்து கொண்ட ஜெயகாந்தன், அந்த நாயை வளர்ப்பவருடன் சண்டைக்குப் போயிருக்கிறார். ‘நாயைக் கட்டிப் போட்டு வ ளர்க்க வேண்டும்; ரோட்டுல போறவங்க, வர்றவங்க எல்லாரையும் கடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தீங்களா?‘ என்று கோபத்துடன் சண்டைக்குப் […]

Read more
1 62 63 64 65 66 88