பிராணாயாமம்

பிராணாயாமம், வேணு சீனிவாசன், குறிஞ்சி, விலைரூ.160. நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் பிராணாயாமம் என்ற மூச்சுப்பயிற்சி செய்முறையை எளிமையாக விளக்கும் நுால். பிறவி வேண்டும் என்ற தலைப்பில் துவங்கி, நோய் நீக்கும் பிராணாயாமம் என்ற தலைப்பு வரை, 31 கட்டுரைகள் உள்ளன. மிக எளிய முறையில், மூச்சு பயிற்சி செய்யும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சித்தர்களின் பாடல்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. ஆசிரியர் நேரில் அமர்ந்து விளக்குவது போல் உள்ளது. முத்திரைகள் பற்றியும் ஒரு அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக கருத்தை […]

Read more

பாரதி பாடிய மணக்குள விநாயகர்

பாரதி பாடிய மணக்குள விநாயகர், சொ. சேதுபதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. மகாகவி பாரதியார் எல்லாத் தெய்வங்களையும் பாடியிருந்தாலும், அவர் முழுமுதல் பரம்பொருள் நிலையில் வைத்துப் போற்றியது விநாயகக் கடவுளையே என்பதை அவர் பாடிய “விநாயகர் நான்மணி மாலை’ நூல் தெற்றென உணர்த்துகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற சொற்றொடர்களான “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்’, “தவமே புரியும் வகையறியேன்’, “அச்சமில்லை அமுங்குதலில்லை’ “நமக்குத் தொழில் கவிதை’, “பேசாப் பொருளை பேசநான் துணிந்தேன்’, “அன்பிற் சிறந்த தவமில்லை’, “கவலைப் படுதலே கருநரகு’ போன்றவை […]

Read more

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள்

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள், கி.ஸ்ரீதரன், நாம் தமிழர் பதிப்பகம், பக்152, விலை ரூ.160. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றிய நூலாசிரியர், கல்வெட்டுகள், அரிய சிற்பங்கள், நினைவு கற்கள், மைல்கல், கோயில்கள், செப்பேடுகள் ஆகிய வரலாற்று ஆதாரங்கள் கூறும் அரிய தகவல்களை இந்நூலின் மூலம் நமக்கு தொகுத்து அளித்துள்ளார். மதுரை – திண்டுக்கல் சாலையில் உள்ள வடுகபட்டி என்ற ஊரில் உதயசந்திரன் என்பவருடைய குடும்ப நிலத்தில் கிடைத்த கல்வெட்டு தொடர்பான தகவலுடன் தொடங்கும் இந்நூல், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி […]

Read more

பறவைகள்

பறவைகள், மாலினி அரவிந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. பத்து சிறுகதைகள், இரண்டு சிறுவர்கதைகள், ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். வார, மாத இதழ்களில் வெளிவந்து பரிசு பெற்றுவை. மனிதர்களின் பிரச்னைகள், மன அவலங்கள், சமூக குறைபாடுகள், உறவு முரண்பாடுகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகின்றன; மனதை உருக்குகின்றன. கனடா நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்க வாய்ப்புகள் இருந்தும், தமிழ் பெண்கள் ஆர்வமில்லாமல் இருப்பது பற்றி கட்டுரை வழியாக ஆதங்கப்படுகிறார். பெண் மனம், அவர்கள் உலகம் எப்படியானது என்பதை கூறும் நுால். – […]

Read more

மனம் செய்யும் மாய வித்தை

மனம் செய்யும் மாய வித்தை, ரவி வல்லூரி, தமிழில் சுசர்ல வெங்கடரமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. பலவிதமான பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும் என்றும், மனதை கூர்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்வதன் மூலம், மனம் தானாகவே வலிமை பெற்றுவிடுகிறது என்பதையும் விளக்கும் இந்த நூல், ஆரோக்கியத்துடனும், மனதிடத்துடனும் வாழ்வதற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது. பிராணாயாமத்தின் சக்தியைக் கூறும் அதேசமயம், யூடியூப் மூலம் வெளிவரும் போலிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. போதையில் இருந்து மீள்வதற்கான வழிகள், […]

Read more

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.100. இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது சிந்துவெளி நாகரிக கண்டுபிடிப்பு. அதன் தொன்மையையும், பண்பட்ட வாழ்க்கை முறையையும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த பழமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய நுால் இது. இந்த நுாலில், ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிந்து எனும் புதிர் என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, வரலாற்றின் ரயில்பாதை, முதல் முத்திரை, முதல் பானை ஓடு என கட்டுரைகளில் தலைப்புக்கு ஏற்ப தகவல்கள் […]

Read more

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.100. இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது சிந்துவெளி நாகரிக கண்டுபிடிப்பு. அதன் தொன்மையையும், பண்பட்ட வாழ்க்கை முறையையும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த பழமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய நுால் இது. இந்த நுாலில், ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிந்து எனும் புதிர் என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, வரலாற்றின் ரயில்பாதை, முதல் முத்திரை, முதல் பானை ஓடு என கட்டுரைகளில் தலைப்புக்கு ஏற்ப தகவல்கள் […]

Read more

நினைவில் வாழும் குழந்தை கவிஞர்

நினைவில் வாழும் குழந்தை கவிஞர், தேவி.நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம், விலைரூ.180. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு நுாற்றாண்டு துவக்க விழாவையொட்டி வெளியிடப்பட்டு உள்ள நுால். கவிஞரின் மகளே தொகுத்து உள்ளார். மறுபதிப்பாக வந்துள்ளது. இந்த தொகுப்பு நுால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து கருத்துரை மற்றும் வாழ்த்துரைகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் அழ.வள்ளியப்பா கலந்து கொண்ட நிகழ்வுகளின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பகுதியில் 81 கட்டுரைகள் இடம் பெற்றுஉள்ளன. அனைத்தும் கவிஞரின் […]

Read more

பெண் வாசனை

பெண் வாசனை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.260. பழமொழிகளில் பெண்கள் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், விடுகதைகளில் எவ்வாறு எல்லாம் இடம்பெற்றிருக்கின்றனர் என்பதையும், வாய்மொழிக் கதைகளில் இடம்பெற்றுள்ள தன்மையையும் எடுத்துரைக்கும் நுால். பொம்பளை சிரிச்சா போச்சு, பெண்புத்தி பின்புத்தி, உண்டி சுருங்கல் பெண்டிருக்கு அழகு, பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா? போன்ற பழமொழிகளையும், வேறு பலவற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார். விடுகதைகளை விளக்கும் இடத்தில் மேலோட்டமாகப் புரியும் பொருளையும், உள்ளார்ந்து உணர்த்தப்படும் பொருளையும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் உருவாக்கத்தில் உருவாகும் இந்த […]

Read more

குறளைப் பாடுவோம் -தொகுதி – 2

குறளைப் பாடுவோம் -தொகுதி – 2, பழனியப்பா பிரதர்ஸ், கவிஞர் செல்லகணபதி, விலைரூ.110. திருக்குறள் கருத்துகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் அறவாழ்வு மலரும்; பொருள் தலைக்கும்; இன்பம் பெருகும். குறளைப் பாடுவோம் இரண்டாம் தொகுதியில் அதிகாரத்துக்கு ஐந்து குறள்கள் வீதம் 20 அதிகாரங்களின், 100 குறட்பாக்களுக்குப் பாடல் உரை எழுதியிருக்கிறார். செய்த உதவியை மறத்தல் கூடாது; தீமையை அப்பொழுதே மறந்துவிடல் வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறார். அந்த நல்ல பழக்கத்தைக் குழந்தைகள் கற்றுக் கொள்ளத் துாண்டுகிறார். குழந்தைகளுக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்து புரிந்து பாடப்பட்டுள்ளது. எளிய […]

Read more
1 6 7 8 9 10 88