நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75. புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more

திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள், தேவகாந்தன், ஆதி பதிப்பகம், விலை: ரூ.120. புலம்பெயர்ந்து, தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளரும் இதழாளருமான தேவகாந்தனின் ஈழத்து நினைவுகளின் சில பக்கங்கள் நூலாகியிருக்கின்றன. பெரிதும், பிள்ளைப் பிராயத்து நினைவுகள். புழுதியைக் கிளப்பியபடி நாளைக்கு மூன்று முறை கிராமத்துக்கு வந்து செல்லும் பேருந்து, பலிக்காமல் போன ஆரூடங்கள், நெஞ்சின் ஆழத்தில் பதிந்துவிட்ட நம்பிக்கைகள், யூரியாவின் வருகைக்கு முன்பிருந்த எரு பயன்பாடு, மிக அரிதாய் ஒரு வீட்டில் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலியின் வர்த்தக சேவை, ‘ஓ… ரசிக்கும்சீ.. மானேவா…’ என்று சொல் பிரிந்து […]

Read more

சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்

சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்,  நா.கவிதா,  ஏ.எம்.புக் ஹவுஸ்,  பக்.290,   விலைரூ.270. “மக்கள் இலக்கியம்’ என்று கூறப்படும் சிற்றிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த சமுதாயச் சூழலை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் உள்ளன என பலரும் குறிப்பிடப்பட்டு வரும் சூழலில், அவற்றின் எண்ணிக்கை 300-க்கும் மேற்பட்டதாக உள்ளது என தனது கருத்தை முன்வைக்கும் நூலாசிரியர், அவற்றில் சமுதாயவியல் நோக்கத்துக்கு துணை புரியும் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம், சதகம் ஆகிய நான்கு சிற்றிலக்கிய வடிவங்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். “குறைந்த எண்ணிக்கையுடைய பாடல்களைக் கொண்டும், […]

Read more

நா.வானமாமலை நுாற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

நா.வானமாமலை நுாற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள், இரா.காமராசு, சாகித்ய அகடமி, விலைரூ.315. சாகித்ய அகாடமி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்குப் பெரும்பாங்காற்றிய ஆளுமைகளுக்கு நுாற்றாண்டு நினைவு விழாக்களை நடத்தியது. அந்த வகையில் பேராசிரியர் நா.வானமாமலை நுாற்றாண்டு விழாவையொட்டி நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு நுால். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.அரசு, நா.வா.,வின் ஒட்டுமொத்த பங்களிப்புகள் குறித்த நுட்பமான மதிப்பீட்டையும், தமிழாய்வுகளில் அவரது இடத்தையும், ‘பேராசிரியர் நா.வானமாமலையின் அரை நுாற்றாண்டு காலப்பயணம்’ என்ற கட்டுரையில் முன்வைக்கிறார். பெரியார் பல்கலைக் கழகத்தின் […]

Read more

முதன்மைப் பெண்கள் 30 பேர்

முதன்மைப் பெண்கள் 30 பேர், சரவணன் பார்த்தசாரதி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை: ரூ.90, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த லூசி தொடங்கி, குவாடமாலாவின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பூர்வகுடிப் பெண் ரிகொபெர்தா மிஞ்சு, கரோனா பெருந்தொற்றிலிருந்து தன் நாட்டு மக்களைப் பெரிதும் காப்பாற்றிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உள்ளிட்ட சம கால ஆளுமைகள் வரை மனிதகுல வரலாற்றில் உலகை வடிவமைத்த 30 பெண்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும், ஜி.ராஜா, மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.480. தாவரவியல் பேராசிரியரும் சென்னையில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டி.ராஜா சுற்றுச்சூழல் ஆர்வலரும்கூட. தன் வாழ்க்கை அனுபவங்களையும் சுற்றுச்சூழல் குறித்தும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609     இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.500 இரண்டாம் உலக யுத்தத்தை கண்முன் நிறுத்தும் நுால். வரலாற்று பின்னணியுடன் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. யுத்தம் துவங்குவதற்கு முன், ஐரோப்பிய நாடுகளில் நிலவிய நெருக்கடிச் சூழலுடன் துவங்குகிறது. எட்டு பெரிய அத்தியாயங்களில், துணைத் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. இரண்டாம் அத்தியாயம், போர் துவக்க நிகழ்வை தெரிவிக்கிறது. போரின் போக்கு, ஏற்ற இறக்கங்கள், நாடுகளின் போர் தந்திரம், ஆயுதப்பயன்பாடு, அவற்றால் ஏற்பட்ட விளைவு என, போரின் துயர வரலாற்றை மிக நுட்பமாக படம் பிடிக்கிறது. போரின் […]

Read more

திருப்பி அனுப்பும் வானம்!

திருப்பி அனுப்பும் வானம்!, முனைவர் மு.அப்துல் சமது, நேஷனல் பப்ளிஷர்ஸ், விலைரூ.125 உலக நலன், சமூக நலன், தனிமனிதச் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள நுால். நபிகளின் கருத்துகளை மையமாகக் கொண்டது. உலகை நன்னெறிக்கண் செலுத்த வேண்டும் என்ற பண்பட்ட உள்ளத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் காணமுடிகிறது. மனித வளமேம்பாட்டுக்குரிய செய்திகளைத் தருகிறது. மனிதர்கள் இறைநெறி நின்று, அறநெறி காத்து, வாழ்வியலைச் செந்நெறிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு குரான் சொல்லியுள்ள கோட்பாடுகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. நவீன அறிவியலோடு திருமறை வழி நின்று கருத்துகளை விளக்குகிறது. […]

Read more

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள்

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள், க.ஜெய்சங்கர், அகநி, விலைரூ.120. பல்வேறு கருத்துகள் அடங்கிய 12 கட்டுரைகளின் தொகுப்பு நுால். மெய்ப்பொருள் நாயனார் கட்டுரை மூலம் திருக்கோவிலுார் அரசாண்ட குறுநில மன்னர் என்றும், சைவம் பரப்பிய பெருமையையும் அறிய முடிகிறது. நுால் இரு வகைப்படும். ஒன்று நடப்பு காலத்திற்கு ஏற்றது. அடுத்தது காலம் கடந்தும் நிற்பது. உதாரணங்களுடன் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். செய்யுள் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பதையும் ஒரு கட்டுரை காட்டுகிறது. இலக்கண அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர் படிக்க ஏற்ற […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக்.1040, விலை ரூ.1000. தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புராண விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள், சிற்றாறுகள், கால்வாய்கள், கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை […]

Read more
1 5 6 7 8 9 88