மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை, ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.400, விலை ரூ.350. மதுரைக்காஞ்சி நூலை ஆய்வு நோக்கில் எழுதியுள்ள நூலாசிரியர், தமிழரின் தொன்மை வாழ்க்கை முறைகளையும் இன்றைய நவீன வாழ்க்கையையும் ஒப்பிட்டும் எடுத்துக்கூறியுள்ளார். அதற்காகவே மனித இன வரலாற்றையும் நூலின் முதல் கட்டுரையான மதுரைக்காஞ்சி- நகர்மயமாதலின் பனுவலில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார். அன்றைய காலத்திலிருந்த மதுரையின் அமைப்பு, நகரில் வாழ்ந்த மக்களின் தொழில், அற வாழ்க்கைக்கு ஆலோசனை கூறும் அவை, நகரின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார் மதுரை […]

Read more

ஜீவன் லீலா

ஜீவன் லீலா: அருவிகளின் லீலைகள், காகா கலேல்கர், தமிழில்: பி.எம்.கிருஷ்ணசாமி, சாகித்ய அகாடமி, விலை: ரூ.385. இந்திய நீர்நிலைகளின் அழகும் ஆழமும் காந்தியுடன் நெருங்கிப் பழகியவரும் குஜராத்தி, மராத்தி, இந்தி மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இந்தியா முழுவதும் ஓயாமல் பயணித்த சஞ்சாரியுமான காகா கலேல்கர் தன் பயண அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் முக்கியமான நதிகள், ஆறுகள், அருவிகள், ஏரிகள், கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றி காலேல்கர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘ஜீவன் லீலா’ என்னும் நூலாக குஜராத்தி மொழியில் சாகித்ய […]

Read more

பொற்றைக்காடு

பொற்றைக்காடு,  முள்ளஞ்சேரி மு.வேலையன், காவ்யா, பக்.361, விலை  ரூ.360. குமரி மாவட்டத்தில் உள்ள முள்ளஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிவாழ்க்கை இருந்தது என்பதை அசைபோடும் நூல். அந்தப் பகுதிகளில் இருந்த உணவுமுறைகள், விளைபொருள்கள், மக்களின் பழக்க, வழக்கங்கள், தொழில்கள், கடைகள், சந்தைகள், கள், சாராயப் பழக்கங்கள் என அன்றைய வாழ்வைப் பற்றிய தகவல்கள் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. ‘நுனி வீட்டுக்கு; நடு மாட்டுக்கு; அடி வயலுக்கு என பயன்பட்டு வந்த நெல் விவசாயம் 1970 ஆம் ஆண்டில் பசுமைப்புரட்சி வந்தவுடன் […]

Read more

இணையச் சிறையின் பணயக் கைதிகள்

இணையச் சிறையின் பணயக் கைதிகள், டாக்டர் மோகன வெங்கடாசலபதி, இந்து தமிழ் திசை, விலை 160ரூ. இணையமும் ஸ்மார்ட்போன்களும் நம்முடைய வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதோடு, மனநலத்தையும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இணையத்தால் மனத்துக்கு ஏற்படும் சிக்கலைப் புரிந்துகொள்ளும் விதமாக ‘சைபர் சைகாலஜி’ எனும் உளவியல் பிரிவே உருவாகியிருக்கிறது. மனிதனும் கணினியும் தொடர்புகொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர் வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் பற்றியும் விளக்கும் ‘சைபர் சைகாலஜி’ பற்றியும் டாக்டர் மோகன வெங்கடாசலபதி எழுதியுள்ளார். நன்றி: தமிழ் […]

Read more

ஆயிரம் காந்திகள்

ஆயிரம் காந்திகள் , சுனில் கிருஷ்ணன், நன்னூல் பதிப்பகம்,பக்.148, விலை ரூ.120; காந்தியின் மறைவுக்குப் பிறகு காந்தியக் கொள்கைகளும் அழிந்துவிடும் என்கிற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் எதிர்காலத்திலும் காந்தியம் நிலைத்து நிற்கும் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. சுந்தர்லால் பகுகுணா, ஜே.சி.குமரப்பா, பேக்கர், பாபா ஆம்தே உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த ஆளுமைகள் பெரும் சோதனை, மனப்போராட்டங்களுக்கு இடையே காந்தியடிகள் வலியுறுத்திய சத்தியம், அகிம்சைகளை எவ்வாறு கைக்கொண்டனர் என்பதை வரலாற்று நிகழ்வுகளுடன் இந்நூல் விளக்குகிறது. நிலையான பொருளாதாரச் சூழல் என்பது இயற்கைக்கு மாறாக இயங்க […]

Read more

தமிழ்க் கவிதையியல்

தமிழ்க் கவிதையியல், தொகுப்பாசிரியர்: இரா.சம்பத், சாகித்திய அகாதெமி, பக்.608, விலை ரூ.440. சாகித்திய அகாதெமி சார்பில் “தமிழ்க் கவிதையியலும் யாப்பும்’ என்ற பொருண்மையில் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கில் வ.ஞானசுந்தரம், தமிழவன், செ.வை.சண்முகம், தி.இராஜரெத்தினம், ப.திருஞானசம்பந்தம் போன்ற ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்பட்ட 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  செய்யுள் இயற்றுவதற்கு அடிப்படையான யாப்பிலக்கணத்தை தமிழ், கன்னடம் ஆகிய இரு திராவிட மொழிகளுடன் ஒப்பிடுகிறது ஒரு கட்டுரை. யாப்பின் அடிப்படையில் கவிதை எழுதுவதற்கு சொல் வளம் அவசியம். அந்தச் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு நிகண்டுகளைக் கற்பதும் அவசியம். […]

Read more

பாரதியின் தசாவதாரம்

பாரதியின் தசாவதாரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு-2021), நெல்லை சு.முத்து, கங்கை புத்தக நிலையம், பக்.212, விலை ரூ.160. பாரதியாரை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அதற்குக் காரணம் பாரதியின் பன்முகத்தன்மை. ஆன்மிக வாதிகளுக்கு அவர் எழுதிய கவிதைகள் பிடிக்கும். தேசபக்தி உடையவர்களுக்கும் பாரதி ஒரு முன்மாதிரி. புரட்சிகர சிந்தனை உடையவர்களுக்கும் பிடித்தமான கவிதைகளைப் பாரதி படைத்திருக்கிறார். பாரதியின் வழித்தோன்றல்களாக பல படைப்பாளிகள் தமிழில் தோன்றி தடம் பதித்துச் சென்றிருக்கின்றனர். புரட்சிகர சிந்தனைக்கு பாரதிதாசன், தேசபக்திக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, சக்தி வழிபாட்டுக்கு ச.து.சுப்ரமணிய யோகியார், […]

Read more

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும்

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும், பொறியாளர் ஏ.சி.காமராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230 கங்கையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழிப்பாதை ஏற்படுத்த முன்னோடித் திட்டமாக உருவாக்க எடுத்த உழைப்பை எடுத்துரைக்கும் நுால். முயற்சிக்கு இடையே சந்தித்த அரசியல் தலைவர்கள் பற்றியும், அவர்களது நேர்மைத் திறம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். காமராஜர், ராமகிருஷ்ண ஹெக்டே, அப்துல் கலாம், தமிழக முதல்வர்கள் என்று பலருடன் கொண்டிருந்த தொடர்புகளையும், அவர்களிடம் எடுத்துரைத்த தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான திட்டங்களையும் எளிய தமிழில் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை […]

Read more

சுதந்திர போராட்ட தியாகி தியாகராஜன் வரலாறு

சுதந்திர போராட்ட தியாகி தியாகராஜன் வரலாறு, தியாக சத்தியமூர்த்தி, சிவகாமி பதிப்பகம், விலைரூ.250 இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் கோவில்களும் போராட்ட மையங்களாக விளங்கியுள்ளன. விடுதலை தாகத்தால் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய தியாகி தியாகராஜன் வாழ்க்கை வரலாற்றை, தொல்லியல் அறிஞர் தியாக சத்தியமூர்த்தி ஆங்கிலத்தில் தொகுப்பு நுாலாகப் படைத்துள்ளார். தமிழில், வகுளா வரதராஜன் மொழி பெயர்த்துள்ளார். எளிய நடையில், நேரடியாக பேசுவது போல் அமைந்துள்ளது. தியாகி தியாகராஜனின் 88 ஆண்டு கால வாழ்க்கையை அவர் எழுதிய குறிப்புகளில் இருந்து, […]

Read more

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், விலைரூ.150 இலக்கியம் பற்றிய சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல கட்டுரைகள் விவாதத்துக்கு ஏற்றவை. தமிழர்களின் சிந்தனை வளம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இலக்கிய வட்டம் இதழில், 60 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளன. தமிழர் மூளையில் தர்க்கப்பூர்வ சிந்தனையை துாண்டும் வகையில் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது.மரபு வழியில் தேங்கிவிட்ட ஒரு சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை மற்றும் கவலை தொனிக்க எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்பதில் துவங்கி, ஷேக்ஸ்பியரும் கம்பனும் […]

Read more
1 4 5 6 7 8 88