அருகர்களின் பாதை

அருகர்களின் பாதை, ஜெயமோகன், கிழக்குப் பதிப்பகம், பக். 272, விலை 250ரூ. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத் தலங்களை தேடிச் செல்லும் ஒரு பயணம் இது. ஜெயமோகன் தனது நண்பர்கள் ஆறுபேருடன் ஈரோடு முதல் ராஜஸ்தான் வரை ஆறு மாநிலங்கள் வழியாக இதற்காகப் பயணப்பட்டிருக்கிறார். அறநிலைகளை சமணர்கள், இந்தியாவில்அமைத்திருந்தனர். அந்த சங்கிலி இன்றும் அறுபடாமல் அப்படியே இருப்பதை ஜெயமோகன் இப்பயணத்தின் வழி கண்டறிந்துள்ளார். பயணத்தின்போது தினமும் அவர் இணைய தளத்தில் எழுதியதன் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள், வைரமூர்த்தி, சுபா பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. மாணவர்களுக்கு பொது அறிவு வளரும் விதத்தில் எழுதப்பட்டுள்ள 33 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குடியரசு தினம், உழைப்பாளர் தினம், உழவர் திருநாள், உலக தண்ணீர் தினம், சுதந்திரதின விழா போன்ற முக்கிய நாட்கள் பற்றிய செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது. பூலித்தேவன், வேலு நாச்சியார், வேலுத்தம்பி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர தீரத்தை எடுத்துச் சொல்வது சிறப்பு. அன்னை தெரசா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லிகுப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், பக். 192, விலை 150ரூ. சாணக்கியரைப் பற்றி கூறுவதோடு அவரது நீதிநெறி அறிவுரைகளையும் சேர்த்துத் தந்துள்ளார் இந்நூலாசிரியர். மக்களை நல்வழிப்படத்த மன்னன் அவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்ற ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தவே சாணக்கியர் ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலைப் படைத்துள்ளார். இதை சாணக்கியர் வரலாற்றையும் அவரது அர்த்த சாஸ்திர அறிவுரைகளையும் கொண்டு நூலாசிரியர் விளக்கியுள்ளது சிறப்பு. சாணக்கியர் வரலாற்றில் அவர் ‘கிங் மேக்கராக’ இருந்திருப்பது தெரிய வருகிறது. அர்த்த சாஸ்திரம் […]

Read more

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு, தஞ்சை நா. எத்திராஜ், இராமு நிலையம், பக். 412, விலை 180ரூ. காந்தி, காமராஜர் போன்ற அரசியல் மேதைகள், பாரதியார், திரு.வி.க. உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், கரிகால் சோழன், சிவாஜி போன்ற நாடாண்டவர்கள், புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் என்று பலரின் இளமைக்கால வரலாறு மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: குமுதம்.

Read more

கூடிவாழ்வோம்

கூடிவாழ்வோம், கண்ணன் கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 223, விலை 150ரூ. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை ‘கலைக்கூடம்’ என்ற மூன்று பத்துமாடிக் கட்டிடங்களில் வசிக்கும் ஃபிளாட் வாசிகளை வைத்து சொல்லியிருப்பது புதிய உத்தி. ‘காவியம்’, ‘ஓவியம்’, ‘இலக்கியம்’ என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு மனிதர்கள் கண்ணப்பன் முதல் பேத்தி தேவிகா, சாந்தா அம்மாள், சோமசுந்தரம், தாமரை, பார்வதி, ஆறுமுகம், சண்முகநாதன், குற்றாலிங்கம் என்று அத்தனை பேரும் நம் அக்கம் பக்கம் வாழும் நிஜ மனிதர்களின் வார்ப்புகள். ‘கலைக் கூடத்தை’ நிர்வகிப்பதில் எழும் […]

Read more

அழுவதற்கா பிறந்தோம்?

அழுவதற்கா பிறந்தோம்?, புலவர் மு. சொக்கப்பன், உமா பதிப்பகம், பக். 104, விலை 100ரூ. புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மிகுந்த இக்கால கட்டத்தில் மரபுக் கவிதைகள் வாயிலாக கோலோச்சியிருக்கிறார் இக்கவிஞர். மரபுக் கவிதைகள் என்றாலும் பெண் சிசுக்கொலை, பெண்மை, புதுச்சட்டம் போன்ற புத்துலக கருத்துக்கள்தான் அதிகம். அதுவும் சொல்ல வந்ததை எழுச்சியுடன் வெண்பா வடிவிலும் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்த வடிவிலும் படிக்கப் படிக்க உற்சாகம் தரும் வகையில் உள்ளது. ‘துன்பத்தில் துவளாதிரு, உச்சத்தில் மமதை தவிர், மக்களில் பலருக்கு வாழ்வில்லை என்பது விதியெனில் அதை […]

Read more

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை, தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், அட்டமா, பக். 72, விலை 40ரூ. கவலைகளை மறந்து சிரிக்கும் மனிதனுக்குத்தான் பல்வேறு வெற்றிகள் சாத்தியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த நோயற்ற வாழ்வுக்கு அடிகோலுவது மனமகிழ்ச்சிதான். இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் ஜோக்ஸ் இடம் பெறுகின்றன. அதைப் படிப்போர் மன நிம்மதியும் உற்சாகமும் அடைவது உறுதி. அப்படி மக்களை மகிழ்விக்கும் ஜோக்குகளை எழுதி அனுப்புவோர் எப்படி இருப்பார்கள், அவர்களின் பணி என்ன, அவர்கள் செய்து வரும் செயல்கள் எவை […]

Read more

தண்ணீர் அஞ்சலி

தண்ணீர் அஞ்சலி, தில்பாரதி, காகிதம் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. குழந்தையின் கண்ணில் தூசி உறுத்தியது அம்மாவுக்கு இப்படி நிறைய ஹைக்கூ கவிதைகள் நூல் முழுக்க உள்ளன. தாய்மை உணர்வை ஹைக்கூவில் நமக்கு உணர்த்திய கவிஞர், உலக நடப்புகள் அனைத்தையும் தம் ஹைக்கூ கவிதை வழியே நமக்கு காட்சிப்படுத்தி விடுகிறார். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வளம் மிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும்

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. மனிதனுக்கு வரக்கூடிய மாரடைப்பு, மூளை அடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை உணவு, உடற்பயிற்சி, பழக்க வழக்கங்கள் மூலம் எவ்வாறு நோய்வரும் முன் தடுக்க முடியும் என்பதை எடுத்துக் கூறுகிறார் நூலாசிரியர். நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நூல் இது. -இரா. மணிகண்டன் நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை, பி.எல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக்.143, விலை 60ரூ. பாரதியின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க. , டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ., வையாபுரிப்பிள்ளை, ம.பொ.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனகலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதிபற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப்பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு விழா நினைவாக மறுமுறை […]

Read more
1 18 19 20 21 22 57