தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும்

தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும், கி.இலக்குவன், அலைகள் வெளியீட்டகம், விலை 140ரூ. இந்தியாவின் தலை போல அமைந்து, 70 ஆண்டுகளாகத் தீராத தலைவலியாக இருக்கும் காஷ்மீர் பிரச்சினை பற்றி, ஆதி முதல் தற்போது 370 – வது பிரிவு ரத்து செய்யப்பட்டது வரையில் நடைபெற்ற வரலாற்றை இந்த நூல் விளக்கமாகத் தருகிறது. முதல் நூற்றாண்டு முதல் அங்கு நடைபெற்ற படையெடுப்புகளும், 1846 -ம் ஆண்டு டோக்ரா மன்னர் குலாப் சிங்கிடம் 75 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீர் மாநிலம் ஆங்கிலேயர்களால் விற்கப்பட்டது என்ற வியப்பான […]

Read more

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை, அரிமழம் ப.செல்லப்பா, ஜீவா பதிப்பகம், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களின் துணுக்குத் தோரணமாக இந்த நூல் விளங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள 365 கருத்துக்களில் ஆன்மிக செய்திகள், வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள், பிரபலமானவர்களின் வாக்கு, உண்ணும் உணவில் உள்ள சிறப்பு, நவபாஷாணம் என்றால் என்ன என்பவை போன்ற ஏராளமான பயன் உள்ள தகவல்கள் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு, பேரறிஞர் அண்ணா, அர்ஜித் பதிப்பகம், விலை 110ரூ. தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா எழுதிய சிறுகதைகளைத் தொகுப்புகளில் ஒன்றாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பரிசு என்ற தலைப்பு கொண்ட இந்தத் தொகுப்பில் அண்ணா எழுதிய 18 சிறுகதைகள் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் அண்ணாவின் சமூகக் கண்ணோட்டத்தைக் காண முடிகிறது. தவளையும் மனிதனும் என்ற கதை போன்ற சில கதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்து இருக்கின்றன. அண்ணாவின் எளிய நடை, புத்தகத்தில் உள்ள அனைத்துக் […]

Read more

அக்பர் பீர்பல் கதைகள்

அக்பர் பீர்பல் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், ஒவ்வொரு நூலும் விலை 160ரூ மன்னர் அக்பரின் அரசையில் இருந்த பீர்பல், தனது சமயோஜித புத்தியால் தீர்வு கண்ட பல சம்பவங்கள், கதைகள் ரூபமாக பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றன. அந்தக் கதைகளில் 53 கதைகளைத் தேர்ந்தெடுத்து, சிறுவர்கள் முதல் அனைவரும் ரசித்துப் படிக்கும் வகையில் ஆசிரியர் தந்து இருக்கிறார். இந்த நூலின் ஆகிரியர், முல்லாவின் குறும்புக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், நகைச்சுவைமன்னன் தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகிய நூல்களையும் […]

Read more

மணற்கேணி

மணற்கேணி, எச்.நாராயணசாமி(நானா), வானவில் புத்தக்களஞ்சியம், விலை 306ரூ. வித்தியாசமான அம்சங்களுடனும், மற்ற நூல்களில் இருந்து வேறுபட்டும் தயாராகியுள்ள இந்த நூல், பல விதமான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோரணம் போலக் காட்சி அளிக்கிறது. நூலாசிரியர் தான் கற்றரிந்த, தனது அனுபவத்தில் கிடைத்த மற்றும் தான் படித்த, பார்த்த பயனுள்ள தகவல்களைக் கேள்வி பதில் வடிவில் தந்து இருப்பது புதிய முயற்சி. வரலாறு, அறிவியல், காதல், காமம், முதுமை, தத்துவம், உளவியல், பத்திரிகை, மனதைத் தொட்ட பாடல்கள் போன்ற பல விஷயங்களை சுவைபடத் தொகுத்துத் தந்து […]

Read more

சங்கமி பெண்ணிய உரையாடல்கள்

சங்கமி பெண்ணிய உரையாடல்கள், ஊடறு றஞ்சி, புதிய மாதவி, காவ்யா வெளியீடு, விலை 400ரூ. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பிரபலமான பல பெண்களின் நேர்காணல் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஊடறு என்ற அமைப்பைச் சேர்ந்த றஞ்சி, இந்தியாவைச் சேர்ந்த புதிய மாதவி ஆகியோரால் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண்கள் தாங்கள் எதிர்நோக்கி இருக்கும் சவால்களையும் மனக்குமுறல்களையும் இந்த நேர்காணல்களில் அப்பட்டமாகக் கொட்டி இருக்கிறார்கள். பெண்களை நுகர்வுப் பொருளாகச் சித்தரிக்கும் ஆண்கள், ஓரினச் சேர்க்கை, பெண்களின் மது […]

Read more

தாயின் தாலாட்டு

தாயின் தாலாட்டு, அ.முத்துவேலன், அ.முத்துவேலன் வெளியீடு, விலை 90ரூ. மரபுக் கவிதைகளும் புதுக்கவிதைகளுமாக மொத்தம் 42 கவிதைகள் இடம் பெற்றுள்ள இந்த நூல், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சிறிய புத்தகமாக இருந்தாலும் சீரிய முறையில் அமைந்து இருக்கிறது. இதழியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பதால், தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வணக்கத்திற்கு அடுத்தபடியாக எழுத்தாணியைப் போற்றும் அழகிய கவிதை படைத்து இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து வந்து தமிழைப் போற்றி வளர்த்த அறிஞர்களைப் பாராட்டி இருக்கும் கவிஞர், கீழடி நாகரிகம், வைகை ஆற்றின் […]

Read more

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள், ம.அரங்கராசன், மணிவாசகர் பதிப்பகம், விலை 175ரூ. அநபாய சோழன் என்ற மன்னரிடம் முதல் அமைச்சராகப் பணியாற்றிய சேக்கிழார், சைவ சமயம் செழித்தோங்குவதற்காக இயற்றிய பெரிய புராணப் பாடல்களை அனைவரும் படித்து அறிந்துகொள்ளும் வகையில் எளிய உரை நடையில் இந்த நூலை ஆசிரியர் ஆக்கி இருக்கிறார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் குறித்தும் கூறப்படும் வரலாற்றுத் தகவல்கள் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் அதே சமயம் […]

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை வெளியீடு, விலை 300ரூ. தமிழகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஏராளமான நினைவுச் சின்னங்களில், பல முறை சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்களைத் தவிர்த்து, பலரும் சற்றேறக்குறைய மறந்துவிட்ட – சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சம்பவங்களை இந்த நூல் நினைவுபடுத்தி இருக்கிறது. தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் இருக்கிறது என்பது போன்ற வியப்பான தகவல்கள் இதில் காணக்கிடக்கின்றன. வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷின் கல்லறை, ஆங்கிலேயப் படையில் பணியாற்றிய பின்னர் ஆங்கிலேயர்களால் […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 400 ரூ. முன்னோர்களை வழிபடும் தெய்வவழிபாடு, தமிழகத்தில் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி தொகுக்கப்பட்ட இந்த நூல், குறிப்பாகத் திருநெல்வேலிப் பகுதியில் இறந்தோர் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது. நெல்லை மறவர் குலத்தைச் சேர்ந்த ஈனமுத்துப் பாண்டியன், மெச்சும் பெருமாள் பாண்டியன், சோனமுத்துப் பாண்டியன், சிவராமப் பாண்டியன், பாலம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களது வாழ்க்கை விவரம் தெய்வவழிபாட்டுப் பாடல்களாகப் பாடப்பட்டு இருக்கின்றன. இந்தப் பாடல்களையும் கதை மாந்தர்களின் வாழ்வில் நடைபெற்ற […]

Read more
1 13 14 15 16 17 223