சிறகை விரி, பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. பட்டிமன்றப் பேச்சாளராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பாரதி பாஸ்கர் எழுதி இருக்கும் இந்த நூல், இலைகளே தெரியாத அளவுக்கு, ருசியான பழங்கள் கொத்துக் கொத்தாக பழுத்துத் தொங்கும் மரம் போல சிறப்பாகக் காட்சி அளிக்கிறது. 31 தலைப்புகளில் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய சுவையான தகவல்களைக் கொடுக்கின்றன. இவற்றில் ஆன்மிகம் சற்றே தூக்கலாக இருக்கின்ற போதிலும், அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வகையில் அவை அமைந்து இருக்கின்றன. […]

Read more

64 யோகினிகள் மர்மங்கள்

64 யோகினிகள் மர்மங்கள், வேணுசீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலை 275ரூ.. சக்தி வழிபாட்டில் அம்பாளின் முக்கியமான பரிவார தேவதைகளாக இருப்பவர்கள் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும், மொத்தமாக 64 யோகினிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது என்றும் தகவல் தெரிவிக்கும் நூல், யோகினிகள் பற்றிய மர்மங்களை விளக்கும் ஆன்மிக ஆய்வு நூலாக விளங்குகிறது என்று கூறலாம். 64 யோகினிகள் எனப்படுபவர்கள் யார் யார்?, அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? பக்தர்களுக்கு அவர்கள் எவ்வாறு உதவி செய்கிறார்கள்? என்ற விவரமும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. யோகத்தல் திறன் பெற்ற ஆண்கள் […]

Read more

பகல் கனவு

பகல் கனவு, லா.ச.ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலை 130ரூ. பிரபல எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் எழுதிய சிறுகதைகளின் இந்தத் தொகுப்பு, கடலில் மூழ்கித் தேடிச் சேகரித்த முத்துக்களால் கோர்த்த மாலையாக ஜொலிக்கிறது. இவற்றில் உள்ள பெரும்பாலான கதைகளின் முக்கிய கதாபாத்திரம் தன்னை முன்னிலைப்படுத்திக் கூறுவதுபோல கதை அமைக்கப்பட்டு இருப்பதால், அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிக் குவியலில் நாம் கரைந்து விடுவது போன்ற பரவசம், அந்தக் கதையைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அனைத்துக் கதைகளின் நிகழ்வுகளும், ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்கனவே நடந்த, அல்லது நடக்க இருக்கின்ற சம்பவங்களால் கோர்க்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. இந்திய சுதந்திர வரலாற்றில் அதி முக்கிய இடம் பிடித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு, அதிக அளவில் சர்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாது என்பதை இந்த நூல் சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறது. நாட்டுக்காக சுபாஷ் சந்திரபோஸ் செய்த தியாகங்கள், வீரச் செயல்கள் ஆகியவற்றுடன், அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? அதில் உள்ள மர்மங்கள் என்ன என்பதையும், இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை […]

Read more

பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கை வரலாறு

பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கை வரலாறு, சாமி.சிதம்பரனார், வைகுந்த் பதிப்பகம், விலை 115ரூ. தந்தை ஈ.வே.ரா. பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரைத் தூற்றியவர்கள் கூட இப்போது போற்றுகிறார்கள் என்ற உன்னத நிலையைப் பெரியார் அடைந்தது எவ்வாறு என்பதைத் தற்கால சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள உதவும் வகையில் அவரது விரிவான வாழ்க்கை வரலாற்று நூலாக இது அமைந்து இருக்கிறது. அவர் மதப் புரட்சிக்காரராகவும், அரசியல் புரட்சிக்காரராகவும் இருக் கவேண்டிய அவசியம் ஏற்பட்டது எதனால் என்ற வரலாற்றுத் தகவல் இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. பெரியார் வாழ்வில் நடைபெற்ற […]

Read more

யாளி

யாளி, ச.வைரவ ராஜன், பாவைமதி வெளியீடு, விலை 180ரூ. வித்தியாசமான கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் ஏராளமான தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழகக் கோவில்களில் மட்டுமே காணப்படும் சிற்பங்களான யாளி என்ற மிருகம் இருந்தது உண்மையான என்ற ஆய்வு பல இலக்கியங்களின் மேற்கோள்கள் வழியாகக் கொடுக்கப்பட்டு இருப்பது புதுமையாக உள்ளது. மேலும் யானை, காகம், நாய், பேய் போன்றவைகள் குறித்தும் ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் தந்து இருப்பது சிந்திக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கு வண்ணங்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற தகவலும் வியக்க வைக்கிறது. […]

Read more

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை 120ரூ. காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் பூர்வ குடிமக்களான பழங்குடி இனத்தவர்கள், இந்திய வரலாற்றில் கவனிக்காமல் விடுபட்ட நிலையிலும், அவர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது. சாந்தல்கள் என்னும் பழங்குடி இன மக்கள் வில் அம்புகளை மட்டுமே ஆயுதங்களாக வைத்துக் கொண்டு நான்கு ஆண்டு காலம் ஆங்கிலேய படைகளை எதிர்த்துப் போராடினார்கள் என்ற வியப்பான தகவலை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டம், […]

Read more

மலர்க் கிரீடம்

மலர்க் கிரீடம், கண்மணி பதிப்பகம், விலை 70ரூ. எழுத்தாளரும், சினிமா கதை வசனகர்த்தாவுமாகிய கண்மணி ராஜா முகமது எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு, முழுக்க முழுக்க காதலைப் பற்றியே பாடுகிறார். “தூங்கும்போது கனவில் விழித்திருக்கையில் நினைவில் எப்படித்தான் இவர்கள் நம்மைப் பிரிப்பார்களோ? ஒரு வண்ண மயிலை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்கள் என மேனகா காந்திக்கு மெயில் அனுப்ப வேண்டும் நீரின்றி அமையாது உலகு குறள் நீயின்றி அமையாது உலகு என் குரல் என்பன போன்ற கவிதைகள் நெஞ்சைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, நவம்பர், 2019. இந்தப் […]

Read more

மண் மக்கள் தெய்வங்கள்

மண் மக்கள் தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், விலை 185ரூ. கிராமப்புற மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து இன்றைக்கும் காலம் தவறாமல் கொண்டாடப்படும் கிராம தெய்வ வழிபாட்டை, உளவியல் பூர்வமாக இந்த நூல் அணுகி இருக்கிறது. இருளர்கள், கோத்தர்கள், பளியர்கள், காடர்கள் போன்ற தமிழகப் பழங்குடி மக்களின் வழிபாடுகள், திருநங்கைகளின் மாதா வழிபாடு, திருவள்ளுவருக்கு அருகே 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் அபூர்வமான வழிபாடு ஆகியவை பற்றியும் இந்த நூலில் விரிவான தகவல்கள் உள்ளன. சில கோவில்களில் நடைபெற்ற அமானுஷ்யமான சம்பவங்கள் […]

Read more

ஈசனை உணரலாம் வாங்க

ஈசனை உணரலாம் வாங்க, ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை 110ரூ. மதுரை அருகே உள்ள புனிதத் தலமான சதுரகிரிக்குச் செல்பவர்களுக்குப் பயன் தரும் வழிகாட்டிப் புத்தகம் போல இந்த நூல் அமைந்து இருக்கிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கு குழந்தை வரம் அருளிய வல்லப சித்தர் என்பவரின் வாழ்க்கை விவரத்துடன் தொடங்கும் இந்த நூலில், சதுரகிரியில் எந்த எந்த சித்தர்கள் எங்கே வாழ்ந்தார்கள்? அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், அந்தச் சித்தர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் செல்வது எப்படி? என்ற அனைத்து விவரங்களும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. சதுரகிரியில் […]

Read more
1 16 17 18 19 20 223