உள்ளம் கவர்ந்த உலகச் சிறுகதைகள்

உள்ளம் கவர்ந்த உலகச் சிறுகதைகள், தமிழில் கவுதம் சஞ்சய், சஞ்சீவியார் பதிப்பகம், பக். 178, விலை 110ரூ. பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் கவுதம் சஞ்சய். மேலை நாட்டு சிறு கதைகள் சிலவற்றை எளிய, இனிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இரக்க குணம் உள்ள ஒரு பெண்ணை சித்தரிக்கும் ஜான்ஸ்டீன் பெக்கின், ‘மலர்ச்செடி’ திகில் உணர்வை எழுப்பும், எட்கர் ஆலன் போவின், ‘மர்ம மாளிகையின் வீழ்ச்சி…’ ஒருவர், ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டால், அங்கு ஆவிகள் உலவும் என்ற […]

Read more

டர்மரின் 384

டர்மரின் 384, சுதாகர் கஸ்தூரி, கிழக்குப் பதிப்பகம், பக். 88, விலை 80ரூ. ஒரு நாவலை எடுத்தவுடன், அதை ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் என்ற மனநிலை வர வேண்டும். அவ்வகையில் சுதாகர் கஸ்தூரி எழுதிய, ‘டர்மரின் 384’ என்ற குறுநாவல், 24 தலைப்புகளில் விரிந்து செல்கிறது. அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டிகள், புகழ், பெருமை, பணத்திற்காக விலை போக கூடிய அறிவாற்றல் இது மட்டுமல்லாமல், நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் இவற்றை கதைக் […]

Read more

பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் வி. நடராஜன், அ. பன்னீர்செல்வம், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. ஆறாம் பதிப்பைக் கண்டிருக்கும் இந்த நூல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், 2016 – 2017ம் ஆண்டு வெளியிட்ட, பி.எட்., புதிய பாடத்திட்டத்தின்படி அமைந்திருக்கிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பொருள் அறிவியல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெரிதும் உதவும் நூல். –மயிலை கேசி. நன்றி: தினமலர், 2/7/2017.

Read more

நூலக வளர்ச்சியில் இந்தியா

நூலக வளர்ச்சியில் இந்தியா, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.104, விலை 55ரூ. நூலகராக பணியாற்றும், இந்நூலாசிரியர் தம் ஆய்வின் போது கிடைத்த நூலகம் பற்றிய தகவல்களை தொகுத்து இந்நூலை படைத்துள்ளார். சங்க காலம் துவங்கி, இன்றைய நிலை வரை சுவடி நூலகங்கள், அரசு, தனியார், மடாலயம், பள்ளி, கல்லூரி, பொது நூலகங்கள் என, பல வகை நூலகங்களின் செயல்பாடுகளை விவரித்துள்ளார். சரபோஜி மன்னர், 1820ல் தஞ்சையில் உருவாக்கிய, சரசுவதி மகால் நூலகம், 1890ல், கன்னிமாரா உருவாக்கிய சென்னை கன்னிமாரா நூலகம், 1903ல் கர்சன் பிரபு […]

Read more

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள்

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள், மண்னை சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 50ரூ. அறிஞர் அண்ணாதுரை ஆற்றல் மிகு பேச்சாளர். மேடையில், ‘மைக்’கின் முன்னே வந்து, அண்ணா பேச ஆரம்பித்தால், பண்டிதர் முதல், பாமரர் வரை மயங்குவர். அவரது பேச்சை கேட்க, சில சமயங்களில் கட்டணம் வைத்தனர். அப்படி இருந்தும் மக்கள் பணம் கட்டி, பெருமளவில் பேச்சைக் கேட்க வந்தனர். மேடையில் பேசும் போதும், ஏடுகளில் கட்டுரைகள் எழுதும் போதும், சொல்ல வந்த கருத்தை எளிதில் விளக்குவதற்காக […]

Read more

கடல் மரங்கள்

கடல் மரங்கள், ஆர்.முத்துமணி, முதற்சங்கு பதிப்பகம், பக். 88, விலை 70ரூ. பத்து மலையாள கதைகள் எளிய நடையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி வேற்றுமையோ, நாடு பேதமோ கதைகளுக்கு இல்லை என்ற நம்பிக்கையை இந்நூல் உணர்த்துகிறது. நன்றி: தினமலர், 2/7/2017.

Read more

இந்தக் கணத்தில் வாழுங்கள்

இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், பக். 144, விலை 90ரூ. எதையாவது உபதேசிப்பதற்காகவோ, ஏதாவது ஒன்றை உங்களுக்குள் திணிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. உங்களை நீங்களே உணர்ந்துகொள்வதற்கு ஒரு கண்ணாடியாக உதவுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ‘கடிகாரங்களின் துடிப்புகள் பொதுநலம் காண்கிறது. மனிதர்களின் துடிப்புகள் சயநலம் காண்கிறது’ என்ற கவிதை வரி, நிதானமற்ற மானுட சமுதாயத்தின் இன்றைய நிலையைக் கூறுகிறது. நன்றி: […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 304, விலை 150ரூ. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   ஆங்கில மருத்துவம், சா. அனந்தகுமார், நிவேதிதா பதிப்பகம்,  பக். 96, விலை 80ரூ. உடல் மருத்துவம், நோய்கள், மருந்து முறைகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள், முதல்மருத்துவத் தகவல்கள், மருத்துவ நோபல் பரிசு உள்ளிட்டவை அடங்கிய […]

Read more

கம்பனில் இசைத்தமிழ்

கம்பனில் இசைத்தமிழ், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், உமா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. இயற்பா – இசைப்பா இவற்றிற்குள்ள வேறுபாடு, இசைத்தமிழ் மரபு போன்றவற்றை விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். இசைத்தமிழ் மரபு என்னும் வித்து, தொல்காப்பிய காலத்திற்கு முன் விதைக்கப்பட்டு, சங்க காலத்தில் ஆழமாக வேரூன்றி, காப்பிய காலத்தில் முகிழ்ந்து வளர்ந்தோங்கி, கம்பராமாயணத்தில் மலர்ச்சோலையாக மணம் பரப்புகிறது என கூறுகிறார். இன்றைய இசையியலில் வழங்கி வருகிற தாளங்களுக்கான மூலவேர்கள் சங்க இலக்கியங்களில் வெகுவாக காணப்படுகின்றன. பண்டைக்கால இசைத்தமிழ் நூல்களில், 108 தாளங்களும், […]

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், இரா. இளங்குமரனார், தமிழ்ப்பேராயம் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், பக். 384, விலை 200ரூ. தமிழ்மொழியில் மிகப்பழமையான இலக்கணநூலான தொல்காப்பியத்துள் விளங்கும் கலைச்சொற்களும், அவற்றுக்கு அடியாக விளங்கும் சொற்களும் அகரவரிசையில் தொகுக்கப்பட்டு, பொருள் அளிக்கப் பெற்றுள்ளதாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழில் எழுத்து, சொற்களைக் கற்றவர் யாவரும் அறியும் வகையில், தொல்காப்பியம் எளிய நூலாக இருப்பினும், அதில் உள்ள கலைச்சொற்களை அறிந்து கொண்டால், அதை நன்கு உணர்ந்து கற்க இயலும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நூலில் தொல்காப்பியத்தில் விளங்கும் கலைச்சொற்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டு […]

Read more
1 115 116 117 118 119 240