தனித்தலையும் செம்போத்து

தனித்தலையும் செம்போத்து, செந்தி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 65ரூ. வடிகாலற்ற காமத்தை உணர்த்தும் கவிதைகள் செந்தியின் தனித்தலையும் செம்போத்து தொகுப்பு நகரமயமாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக செங்குளத்தை இரண்டாகப் பிரித்து வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை குட்டைகள் அரிதான வெளியில் கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப் பெரும் களிப்பூட்டியிருக்கால் என்ற கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள் கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற […]

Read more

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள், தமிழில்-சா.தேவதாஸ், கருத்து பட்டறை,  மதுரை 6, விலை 380ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-2.html பாப்லோ நெரூடாவின் பெயர் தமிழ் வாசகருக்கு நன்கு பரிச்சயமானது. அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளியாகிக் கவனம் பெற்றுள்ளன. நெரூடா, பாரதிக்கு நிகரான மகாகவி. இடதுசாரிகளின் வெற்றியைப் பாரதி யுகப் புரட்சி என வருணித்துள்ளான். நெரூடா அந்த இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். நெரூடாவின் அரசியல் நிலைப்பாட்டால் அவர் வாழ்க்கை எப்போதும் நெருக்கடியிலேயே இருந்துள்ளது. இம்மாதிரியான தன் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் […]

Read more

காணாமல் போன கவிதைகள்

காணாமல் போன கவிதைகள், நெப்போலியன், தங்கதாய் வெளியீடு, புதுக்கோட்டை, விலை 40ரூ. நெப்போலியன் கவிதைகளைச் சமூக அக்கறை, கரிசனம் என்று சொல்ல முடியும். நெப்போலியன் காணாமல் போன கவிதைகள் தொகுப்பில் சுருக்கமாகவும் நேரிடையாகவும் பேசுகிறார். மனதில் பட்டதை மட்டும் இவர் எழுதவில்லை. சமூகத்திற்கு எவை தேவையோ, எவற்றைச் சொல்ல வேண்டுமோ அவற்றைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். வடிவ ரீதியான பரிசோதனைக்காக நெப்போலியன் கவிதைகளை எழுதவில்லை. மாறாக முற்றிலும் நகரமயமான வாழ்வின் நெருக்கடிகள், நவீன வாழ்வின் அபத்தங்கள் போன்றவையே கவிதைகள் ஆகியிருக்கின்றன. தான் பார்த்ததை, அனுபவித்ததை, வாழ்ந்ததை […]

Read more

சடையன் குளம்

சடையன் குளம், ஸ்ரீதர கணேசன், கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 250ரூ. ஒரு தலித் குடும்பத்தின் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதென்றாலும் அது சாதிய மோதலின் வரலாறாகத்தான் எழுத முடிகிறது. மானுட மறுப்புக்கான எதிர்வினைதான் நாவலின் அடித்தளம். தலித் சமூகத்தின் நல்லையாவுக்கும் தொடிச்சுக்கும் அவர்கள் மண வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் மறுக்கப்படுவதில் தொடங்கும் அவலம் நாவலின் கடைசிவரை செல்கிறது. தலித்துகளும், அருந்ததியர்களும் வேலை வாய்ப்புகளுக்காகப் பணிந்தாக வேண்டும். சாதியம் தன் பரப்பை விரித்துக்கொள்வதை ஸ்ரீதர கணேசனின் நாவல் தன் போக்கில் வலுவாகச் சொல்கிறது. மேல் சாதியின் கருணையாலோ […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா வெளியீடு, சென்னை, பக். 172, விலை 180ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html இமையத்தின் கதையுலகம் தரும் வாழ்வின் சித்திரங்கள் இமையம் என்னும் கலைஞனின் இருப்பைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன. இமையத்தின் கவிதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு ஆளாக இயலாது என்பது அவரது படைப்புகளின் மதிப்பைக் கூட்டுகின்றன. அனுபவங்கள் கலை நோக்குடனும் செய்நேர்த்தியுடனும் மறுஆக்கம் செய்யப்படும்போது நிகழும் மாயம் இது. வஞ்சிக்கப்பட்டதன் ஆத்திரமும் பழிவாங்கும் வன்மமும் மனித மனங்களை ஆக்கிரமித்துக் […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி, சென்னை, விலை 270ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-201-0.html பெற்றெடுத்த பிள்ளைகளில் இருவரைக் களத்தில் பலிகொடுத்துவிட்டு, பேரப்பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அடிக்கடி இடம்பெயர்ந்து, கடைசியில் அயல்மண்ணில் மனம் கூசி நிற்கும் அறுபதைக் கடந்த ஓர் அம்மாவின் கதையைச் சொல்கிறார் தமிழ்க் கவி. குழந்தைகளை மட்டும் தூக்கிக் கொண்டு முதியவர்களையும், ஆடு, மாடுகளையும் அப்படியே கைவிட்டுச் செல்ல நேரும் துயரம். உணவுப் பொருட்களையும், எரிபொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல். கைகால்களை நீட்டிப் […]

Read more

சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், சென்னை, விலை 120ரூ. மந்திரச் சிமிழில் வெளிப்பட்ட கனல் ஓர் எழுத்தாளர் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிவுசெய்வது அரசியல் அறம் சார்ந்த சிறப்பம்சம். அது எழுத்தாளரைக் கூர்மைப்படுத்தும் ஓர் அறமும் ஆகும். அதே சமயம் அரசியல் ஆதாரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு இது ஒரு கெட்ட கனவு. இன்று தூய படைப்பாளி என்று தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் அரசியல் சாயல் படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். அர்ஷியா அந்த பாவனைகளைக் களைந்து தன்னைப் பாதிக்கும் பல […]

Read more

கடலில் வசிக்கும் பறவை

கடலில் வசிக்கும் பறவை, நிலாரசிகன், புது எழுத்து வெளியீடு, காவிரிப்பட்டிணம் 635 112, விலை 60ரூ. யதார்த்தமும் மிகுபுனைவும் நிலா ரசிகன் நிலாவை மட்டும் ரசிப்பவர் அல்ல. பிரபஞ்சம் மொத்தத்தையும் மொழியில் ரசிக்க எத்தனிக்கிறார். 90களுக்குப் பிறகு தேவதைக் கதைகளாகவும், உருவக் கதைகளாகவும் கவிதைகளில் எழுதிப் பார்க்கும் போக்கு வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நிலா ரசிகனின் கவிதைகளைச் சொல்லலாம். கடலில் சிக்கும் பறவை தொகுப்பில் நிலா, எண்ணற்ற குட்டிக்கதைகளை உருவாக்குகிறார். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் நவீனக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் தனது […]

Read more

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன், ஜெசி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், நன்கொடை 200ரூ. தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்கள் இழிந்தோர், அடியோர், இழிசனர், இழிபிறப்பாளர், துடியர், பறையர், புலையன், புலைத்தி, வண்ணார், வெட்டியான் எனப் பேசுகின்றன. பறை அடித்து அறுவடை செய்தோரைக் கடைசியர் என்கிறது சங்ககாலப் பாடல். கி.மு. 170க்கும் 150க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட மநு தர்மம் இந்தியாவின் நால் வர்ண சமூகத்தில் புதிதாக 5வது பிரிவாகப் பஞ்சமர்களை உருவாக்கியது என்கிறார் அம்பேத்கர். ஆதாம் என்பவர் 1840ல் எழுதிய நூலில் […]

Read more

அகம் புறம் அந்தப்புறம்

அகம் புறம் அந்தப்புறம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 999ரூ. விரிந்துகொண்டே செல்லும் ராஜபாட்டைகள் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html குமுதம் ரிப்போட்டர் வார இதழில் முகில் எழுதிய தொடரின் தொகுப்பு நூலே அகம் புறம் அந்தப்புரம். கனத்த மேலட்டையுடன் கூடிய 1032 பக்கங்கள். பார்த்தாலே பிரமிப்பு ஏற்படுத்தும் இந்த நூலை வாசிக்கத் தொடங்கினாலோ பிரமிப்பு அடங்குவதே இல்லை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் நமக்குத் தெரிந்த, தெரியாத அரசர்களின் ஆளுமைகளின் செய்திகளை வேறொரு புதிய கோணத்தில் கதையாக […]

Read more
1 30 31 32 33 34 36