மரணத்தின் மீது உருளும் சக்கரம்

மரணத்தின் மீது உருளும் சக்கரம், தோப்பில் முஹம்மது மீரான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறு கதைகளின் தொகுப்பு. சில கதைகள், நூலாசிரியரின் அனுபவத்தை கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 13/11/2016.   —-   சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், முடிகொண்டான் வெங்கட்ராம சாஸ்திரிகள், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 65ரூ. எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியவர் சாணக்கியர். அவர்சொன்ன வழியில் இன்றைய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ கி.பி. 1741- ஆம் ஆண்டுகளில் குளச்சலில் மார்த்தாண்ட வர்மா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதில் ஆரம்பித்து கி.பி. 1859ஆம் ஆண்டு வரையிலான இந்தியச் சுதந்திரப்போர் குறித்த பல்வேறு தகவல்களை நூலாசிரியர் தேதி வாரியாகத் தொகுத்தளித்துள்ளார். இந்திய சுதந்திரப் பெரும்போரில் பங்கேற்ற முஸ்லிம் மன்னர்கள், சிப்பாய்கள், தளபதிகள், இளவரசர்கள், மௌலவிகள், அரசிகள் உள்ளிட்டோர் குறித்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட சரித்திரச் சான்றுகளை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்நூல். கி.பி. 1831ஆம் ஆண்டு முதல் கி.பி. […]

Read more

குர்ஆன் போதனைகள்

குர்ஆன் போதனைகள், சையித் இப்ராஹிம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 576, விலை 275ரூ. குர்ஆனில் கூறப்பட்டுள்ள வசனங்களை முஸ்லிம்களும், முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் எளிதில் அறிந்துகொள்வதற்கு உதவும் நூல். குர்ஆனில் பல அத்தியாயங்களில் உள்ள வசனங்கள் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. குர்ஆனின் தெய்வீகத் தன்மை குறித்தும், அனைத்து துறைகளிலும் வழிகாட்டக்கூடிய கருத்தகள் குறித்தும் தொகுத்து பொருள்வாரியாகப் பிரித்து அளக்கப்பட்டுள்ளது. அறிவியல், வாழ்வியல், சட்டஇயல், ஒழுக்கம், ஆண்-பெண் வாழ்க்கை முறை, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய நல்லுரைகள் தற்போதைய […]

Read more

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 350ரூ. இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் நிலவி வரும் தவறான புரிதல்களைப் போக்கும் வகையிலும், இஸ்லாம் மார்க்கத்தை பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாகூர் ரூமி எழுதியுள்ள நூல். இஸ்லாம் என்றால் என்ன? திருக்குர்ஆனும், ஹதீதும், இஸ்லாத்தின் தோற்றம், முஸ்லிம்களின் கடமைகளும் நம்பிக்கைகளும் போன்ற தலைப்புகள்ல் இஸ்லாம் குறித்த எதார்த்த நிலையை எளிமையாக தெளிவுபடுத்துகிறார். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? திருக்குர்ஆன் அருளப்பட்ட வேதமா? எழுதப்பட்ட புத்தகமா? ஜிஹாத் என்பது […]

Read more

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ. இந்திய விடுதலைப் போரில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என மத பேதமின்றி எல்லோரும் பங்கேற்றனர். 1857-1859களில் இந்தியா முழுவதும் நடைபெற்ற சிப்பாய்களின் எழுச்சி, புரட்சி குறித்தும், இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றியும் அதில் பங்கேற்ற இஸ்லாமிய மன்னர்கள், படைத்தளபதிகள், சிப்பாய்கள், மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் பொதுமக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் இந்த நூலில் ஆசிரியர் செ. திவான் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இந்திய சுதந்திரப் போரில் தென்னகத்தின் பங்களிப்பு குறித்தும், […]

Read more

படிக்கத்திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும்

படிக்கத்திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும், டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், வி.சி.எஸ். சிராமன், சேலம், விலை 300ரூ. குழந்தைகள் அனைவருமே நிறைய மதிப்பெண்கள் வாங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் பாராட்டு வாங்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அனைவரது எண்ணங்களும் ஈடேறுவதில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 10 பேராவது படிக்கத் திணறுகிறார்கள். அப்படி படிப்பில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கென, அக்கறையெடுத்து, படிக்கத் திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும் என்ற இந்த நூலை மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறார் பிரபல மனநல மற்றும் குழந்தைகள் மருத்துவரான டாக்டர் எஸ்.எம். பகதூர் மொய்தீன். படிப்பில் குறைபாடுள்ள […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரண்டாம் பகுதி), சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 400, விலை 225ரூ. இந்தியாவில் முகலாய அரசு உருவாகி வலிமை பெற்றது. பாபரின் ஆட்சி முதல் அவுரங்கசீப் ஆட்சி வரையிலான காலம் ஆகும். இக்காலத்தில் முகலாய மன்னர்கள் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கலை, கட்டடக் கலை, ஆன்மிகச் சிந்தனை போன்றவற்றில் ஏற்படுத்திய பல்வேறு மாறுதல்களை இந்நூல் விரிவாகச் சொல்கிறது. அதைப்போல அவுரங்கசீப் காலத்துக்குப் பிந்தைய முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன. முகலாய மன்னர்களின் […]

Read more

இளவேனில் கட்டுரைகள்

இளவேனில் கட்டுரைகள், கார்க்கி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. எழுத்தாளர் இளவேனில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு, இளவேனில் எழுத்தில் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இளவேனில் எழுத்தில் ஆர்ப்பரிக்கும் அருவியையும், அமைதியான நதியையும் காணலாம். பாட்டாளிகளுக்காக பரிந்து பேசுவதையும், ஏழைகளுக்காக வரிந்து கட்டுவதையும் பார்க்கலாம். சமூகக் கொடுமைகளைச் சாடுகிறார். பொதுவுடைமை கருத்துகளுக்குப் பொலிவு தேடுகிறார். நன்றி: தினத்தந்தி, 20/7/2014.   —-   பெண்கள் திலகம் பாத்திமா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 35ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி, சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 336, விலை 190ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறி, இந்துக் கலாச்சாரத்துடன் ஒன்றாகக் கலந்து சகோதரத்துவத்துடன் அவர்கள் ஆட்சி செய்தது வரையான ஒரு நீண்ட வரலாற்றைக் கூறும் நூல். ஆங்கிலயர்கள் தங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம்களின் வரலாற்றைத் திரித்து எபதிதப்பான அபிப்ராய பேதங்களை உருவாக்கிவிட்டுச் சென்றனர். இதனால் இந்து முஸ்லிம் ஒற்றுமை குலைந்தது. அந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து உண்மையை விளக்கி, […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், சாதத் ஹசன் மண்ட்டோ, தொகுப்பும் மொழி பெயர்ப்பும், உதயசங்கர்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 98, பக். 174, விலை 145ரூ. உருது மொழி இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சாதத் ஹசன் மண்ட்டோவின் 13 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கொளுத்தப்பட்ட மதவெறித் தீயினால் நாடு பிரிவினைக்குள்ளானதும், அது மக்களுடைய […]

Read more
1 2 3