பாடங்கள் படிப்பினைகள்

பாடங்கள் படிப்பினைகள், டாக்டர் எஸ். ஜீவராஜன், ஆனந்த நிலையம், சென்னை, பக். 19, விலை 90ரூ. இந்த நூலின் நூலாசிரியர் டாக்டர் எஸ். ஜீவராஜன் பாலியல் நிபுணர். மருத்துவம் தொடர்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனால் அவரின் இந்தப் புத்தகம் அவரது வழக்கமான படைப்புகளில் இருந்து சிறிது வித்தியாசப்பட்டுள்ளது. தன் வாழ்வில் சந்தித்த, படித்த சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்துள்ளார். சளித் தொல்லையில் மூச்சுத் திணறி அழுதபடியே இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உடுக்கை அடிப்பவரை அழைத்து வந்து பூஜை செய்தனர் அதன் […]

Read more

அடையாளங்கள்

அடையாளங்கள், சேது, தமிழில் குறிஞ்சிவேலன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 496, விலை 290ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-6.html இரண்டு கனவுகளுக்கு நடுவே விரிகிறது நாவல். நீது கனவு காண்கிறாள். அதில் அவளுடைய அம்மா பிரியம்வதா நீண்ட மணற்பரப்பில் ஒரு குன்றின் அருகே தனியாக அமர்ந்து தியானத்தில் இருக்கிறாள். தன்னைத் தேடி கண்டடையும் மகளிடம், தன் தியானத்தை கலைக்க வேண்டாம் போய்விடு என்கிறாள். நாவலின் இறுதியில் ஒரு பனிப்பரப்பில் அவள் தியானம் தொடர்கிறது. பிரியம்வதா ஒரு தனியார் சிமென்ட் […]

Read more

ம.கோ. களஞ்சியம்

ம.கோ. களஞ்சியம் (பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் படைப்புகள்), உஷா மகாதேவன் பதிப்பாசிரியர், காவ்யா, சென்னை, பக். 816, விலை 800ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-335-7.html ம.கோ. பாலகிருஷ்ண ஐயரின் படைப்புகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார் அவரின் மகன் வழிப்பெயர்த்தி உஷா மகாதேவன். திருச்சி லால்குடியில் 1878இல் பிறந்த ம.கோபாலகிருஷ்ண ஐயர், 49 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும், இலக்கிய வாழ்வாக வாழ்ந்தவர். மதுரை தமிழ்ச் சங்கத்தை பாண்டியத்துரைத் தேவர் தொடங்கும் முன்னரே ம.கோ. மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். வங்கக் […]

Read more

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் சங்கர சரவணன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 480, விலை 195ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-243-9.html பொது அறிவுக் களஞ்சியம் வரிசையில் விகடன் பிரசுரம் வெளியிடும் மூன்றாவது நூல். பள்ளிகளில் நாம் அனைவரும் படித்த ஒரு பாடத்தை மீண்டும் ஏன் புத்தக வடிவில் படிக்க வேண்டும் என்ற கேள்விக்கு புத்தகத்தின் முகப்பிலேயே விடை இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவோருக்காக இந்தப் புத்தகம் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. […]

Read more

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம், பகீரதன், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம், பக். 261, விலை 250ரூ. சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் வாழ்வை விவரிக்கும் நூல். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் அடியொற்றி நடந்த வேதரத்தினம் பிள்ளை, பின்னர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார். அவருடன் பழகியவர்களின் அனுபவத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது நோய்வாய்ப்பட்ட நிலையிலும் பேரவைக் கூட்டங்களில் அவர் தவறாமல் பங்கெடுத்ததை பொள்ளாச்சி நா. மகாலிங்கம் குறிப்பிடுகிறார். அகில இந்திய அளவில் சர்தார் எனும் பட்டம் பட்டேலுக்குப் பிறகு வேதரத்தினம் […]

Read more

மகான் ஷைகு சாஅதி

மகான் ஷைகு சாஅதி, ஆர்.பி.எம். கனி, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 184, விலை 100ரூ. இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ அறிஞர்கள் தங்கள் ஞானத்தால் இந்த உலகிற்கு ஒளியூட்டியுள்ளனர். உதாரணமாக இஸ்லாத்தில் பற்று கொண்ட பக்தாத்தை சார்ந்த முகைதீன் அப்துல்காதல் ஜிலானி, உமர் கய்யாம், இந்தியாவில் புகழ்பெற்ற சூபி ஞானி நிஜாமுதீன் அவுலியா போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் ஷைகு சாஅதி 12ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் பிறந்த ஒப்பற்ற நீதி அறிஞர், கவிஞரான அவர் கஜல் கவிதைகளில் உள்ள உணர்ச்சி பிரவாகத்தை விட நீதி […]

Read more

என் ஆசிரியப்பிரான்

என் ஆசிரியப்பிரான், கி.வா. ஜகந்நாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோவை, பக். 192, விலை 145ரூ. தமிழின் மிகச் சிறந்த தன் வரலாற்று நூலான உ.வே. சாமிநாதையரின் என் சரித்திரம் நூலின் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க வகையில், அந்நூலில் இடம் பெறாத அவர் வாழ்வில் நிகழ்ந்த பல முக்கிய சம்பவங்களைச் சுவையாகவும் சுருக்கமாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் உ.வே.சா.வின் மாணாக்கரான கி.வா. ஜகந்நாதன். ஒவ்வொரு சம்பவத்தையும் படிக்கும்போதும் பழந்தமிழ இலக்கியங்களைத் தேடியெடுத்துப் பதிப்பில் உ.வே.சா.வுக்கு இருந்த அளப்பரிய ஆர்வமும், அந்தப் பணியில் அவருக்கு நேர்ந்த இன்னல்களும், […]

Read more

கடைத்தெருக் கதைகள்

கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆ. மாதவன் தமிழ்ச் சிறுகதை உலகில் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர். இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, அன்றைய சிற்றிதழ்களில் வெளியானவை. மறுபதிப்பு காண்பதும் இவை வெளியான சிற்றிதழ்களும் இத்தொகுப்பின் சிறப்புக்கு சாட்சியங்கள். திருவனந்தபுரத்தில் அங்காடி வீதியில் கடை வைத்திருந்தவர் பார்க்க நேர்ந்த மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையில் நேர்ந்த, நேர்ந்திருக்கக்கூடிய, நேர்ந்திருக்க வேண்டிய சம்பவங்களின் நீட்சிதான் இந்தச் சிறுகதைகள். கடைத்தெருவில் சிற்றேவல் செய்தும், […]

Read more

பாரதிதாசன் யாப்பியல்

பாரதிதாசன் யாப்பியல், ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 120ரூ. எட்டயபுரத்துக் கவிஞரின் அடியொற்றி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இரண்டாவது பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால் படைப்புகளின் எண்ணிக்கை என எடுத்துக்கொண்டால் பாரதியை விட அதிக படைப்புகளைத் தந்தவர் அவர். ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து, வண்ணம் என விதவிதமான யாப்பு வகைகளை தமது கவிதை இலக்கியங்களில் எழிலுறக் கையாண்டவர் அவர். மரபை அடியொற்றி மட்டுமின்றி, அதில் புதுமைகளைப் புகுத்தும் விதத்திலும் அந்தந்தச் சூழலுக்கு […]

Read more

கோழிப்பாட்டி

கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ. சமகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்களை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாயிலாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே கற்பனை அல்ல. நெஞ்சை உலுக்கும் நிஜங்கள். ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடிக்கும்போதும் சோகத்தால் மனம் கனத்துப் போகிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோழிப்பாட்டி கதையில் கொள்ளி வைக்க ஆம்புளப்புள்ள வேணும் என்று மார்தட்டும் கோழிப்பாட்டி, அதே ஆம்புளப்புள்ளைகளால் துன்புறுத்தப்படும்போது தானே தனக்குக் கொள்ளி […]

Read more
1 138 139 140 141 142 180