வள்ளுவர் முப்பால் அறத்துப்பால்

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால், உரையும் உரைவும், உரையாசிரியர் தி.முருகரத்தனம், தமிழ்ச்சோலை வெளியீடு, பக். 145, விலை 100ரூ. உலகம் போற்றும் அறநூலாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். நாட்டின் தேசிய நூலாக அறிவிப்பதற்குத்தகுதியுடைய திருக்குறளை, பலரும் தத்தம் போக்கில் வெளியிடுகின்றனர். இந்நூலை வெளியிட்டுள்ள இந்த உரையாசிரியர், முதல் நாற்பது குறட்பாக்களை (பாயிரம்) வள்ளுவர் இயற்றவில்லை என கருதுகிறார். திருக்குறளை முப்பால் என்றுதான் கூற வேண்டும் என்றெண்ணும் ஆசிரியர், காரணம் கூறாமல் தம் விருப்பப்படி குறட்பாக்களை புதிய முறையில் வரிசைப்படுத்தி எண்கள் கொடுத்துள்ளார். இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு […]

Read more

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?, நோசன் பிரஸ், சென்னை, விலை 350ரூ. 40 ஆண்டுகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியை அலிஸ் கே. ஜோஸ்ன் வாழ்க்கை வரலாற்று நூல். ஒரு சாதாரணப் பெண் கூச்சமும், மிரட்சியும் மிக்க ஒரு சாதுப்பெண் எவ்வாறு இறையருளால் மன உரம் பெற்றாள் என்பதைக் கூறுவதே நூலாசிரியரின் நோக்கம். சுயநலத்தோடும், வன்முறையோடும் தீயவற்றைச் சொல்லிலும், செயலிலும் மறைவாகவும், வெளிப்படையாகவும் வெட்கமின்றி வெளிப்படுத்தும் மனிதர்களிடையே நன்மையில் நாட்டம் கொண்டு குற்றங்குறைகளை நீக்கி வாழ முயற்சிப்போர் பலர் உள்ளனர். அவவ்கையில் நல்ல ஆசிரியையாக வாழ்ந்து […]

Read more

உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 170ரூ. சுமார் 460கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் இருந்து தெறித்து வந்த ஒரு அக்கினிப் பிழம்புதான் பிறகு பூமியாக மாறியது. அதன்பின் ஜீவராசிகள் தோன்றின. காட்டிமிராண்டியாக வாழ்ந்த மனிதன், பல ஆண்டுகளுக்குப்பின் படிப்படியாக கற்கால மனிதனாக மாறினான். உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. பூமியின் வரலாற்றை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.   —- நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி, செந்தமிழ்க்கிழார், […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், முனைவர் வ.சுப. மாணிக்கம், மல்லிகா, சென்னை, விலை 200ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்துக்கு நூலாசிரியர் வ.சுப.மாணிக்கம் அளித்த அகத்திணை குறித்த ஆய்வு நூல். அகத்திணை என்பது தமிழர் கண்ட காதல்நெறி, தமிழ் மொழி ஒன்றிலே காணப்படும் காதல் இலக்கியம் ஞாலமக்கட்கெல்லாம் உரிய காதல் வாழ்க்கை. ஆதலின் அகத்திணையறிவு பெண்ணுக்கும் ஆணுக்கும் இன்றியமையாக் கல்வியாகும். இதில் அகத்திணை ஆராய்ச்சி, அகத்திணைப் பாகுபாடு, அகத்திணை தோற்றம், அகத்திணைக் குறிக்கோள், அகத்திணைப்பாட்டு, அகத்திணைப் புலவர்கள், அகத்திணைக் கல்வி என்னும் தலைப்பின்கீழ் ஆய்வு செய்துள்ளார் முனைவர் வ.சுப. […]

Read more

வேலை பெறத் தயாராகுங்கள்

வேலை பெறத் தயாராகுங்கள், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, விலை 150ரூ. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நமது நாட்டில் படித்த இளைஞர்களுக்கு தடைக்கல்லாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது. அறிவும், திறமையும் உள்ள மாணவர்களுக்கு உகந்த வேலை இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அதைப் பெற இயலவில்லை. இதைப் போக்கும் வகையில் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி எம். கருணாகரன், தினத்தந்தி இளைஞர் மலரில் எழுதிய கட்டுரைகள் இப்போது நூலாக வெளிவந்துள்ளது. வேலை பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள […]

Read more

இன்றைய செய்தி அன்றைய இலக்கியம்

இன்றைய செய்தி அன்றைய இலக்கியம், முனைவர் வெ. நல்லதம்பி, மங்கை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. இன்றைய செய்தியையும், அந்றைய இலக்கியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட 60 கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியத்தில் காட்டப்பெற்றவை இன்று உண்மையிலேயே நடந்துள்ளன என்பதை நூலாசிரியர் ஒப்புமைபடுத்தி வெளிப்படுத்தியதை பார்க்கையில் மனதை மனங்களின் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டே வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க கால இலக்கியங்களை நவீன காலச் செய்திகளுடன் இணைத்திருக்கும் விதமும், எளிய சொற்களை பாமரர்களுக்கும் புரியும்வண்ணம் பயன்படுத்தி இந்நூலை படைத்திருக்கிறார் […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், ஏ.ஆர். இராஜமணி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 104, விலை 50ரூ. திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்கிற திருலோக சீதாராம் அகத்திய முனிவரைப்போல் குள்ளமான உருவம் தாங்கியவர். பளிச்சென்று குங்குமப் பொட்டும் வெற்றிலைச் செல்லமுமாக எந்த நேரமும் உலா வந்தவர். கந்தர்வ கானம் என்னும் கவிதைப் படைப்பால் புகழ்பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளருமான அவர் சிவாஜி இதழின் ஆசிரியர். அவருடைய சித்தார்த்தன் மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும், பரப்பியும், பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தாக […]

Read more

பகதூர்கான் திப்பு சுல்தான்

பகதூர்கான் திப்பு சுல்தான், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 120ரூ. இந்தியாவில் தனது அரசை ஸ்தாபிக்க விரும்பும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர்கள், மைசூர் அரசின் மன்னர்கள் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும்தான். மராட்டியப் படைகளும், ஹைதராபாத் நிஜாம் படைகளும் ஆங்கிலப் படைகளுடன் கைகோர்த்துக் கொண்டபோதும் திப்பு சுல்தான் சமரசமாகப் போகாமல், தனது பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிவரை போராடுகிறான். திப்பு சுல்தானின் செயலின் விளைவுகள் இந்தியத்துவத்திலிருந்து விலகி மேனாட்டு நிலைக்கு உயர்வுடையதாக […]

Read more

கோழிப்பாட்டி

கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ. சமகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்களை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாயிலாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே கற்பனை அல்ல. நெஞ்சை உலுக்கும் நிஜங்கள். ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடிக்கும்போதும் சோகத்தால் மனம் கனத்துப் போகிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோழிப்பாட்டி கதையில் கொள்ளி வைக்க ஆம்புளப்புள்ள வேணும் என்று மார்தட்டும் கோழிப்பாட்டி, அதே ஆம்புளப்புள்ளைகளால் துன்புறுத்தப்படும்போது தானே தனக்குக் கொள்ளி […]

Read more

பாரதிதாசன் யாப்பியல்

பாரதிதாசன் யாப்பியல், ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 120ரூ. எட்டயபுரத்துக் கவிஞரின் அடியொற்றி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இரண்டாவது பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால் படைப்புகளின் எண்ணிக்கை என எடுத்துக்கொண்டால் பாரதியை விட அதிக படைப்புகளைத் தந்தவர் அவர். ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து, வண்ணம் என விதவிதமான யாப்பு வகைகளை தமது கவிதை இலக்கியங்களில் எழிலுறக் கையாண்டவர் அவர். மரபை அடியொற்றி மட்டுமின்றி, அதில் புதுமைகளைப் புகுத்தும் விதத்திலும் அந்தந்தச் சூழலுக்கு […]

Read more
1 2 3 4 8