கடைத்தெருக் கதைகள்

கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆ. மாதவன் தமிழ்ச் சிறுகதை உலகில் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர். இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, அன்றைய சிற்றிதழ்களில் வெளியானவை. மறுபதிப்பு காண்பதும் இவை வெளியான சிற்றிதழ்களும் இத்தொகுப்பின் சிறப்புக்கு சாட்சியங்கள். திருவனந்தபுரத்தில் அங்காடி வீதியில் கடை வைத்திருந்தவர் பார்க்க நேர்ந்த மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையில் நேர்ந்த, நேர்ந்திருக்கக்கூடிய, நேர்ந்திருக்க வேண்டிய சம்பவங்களின் நீட்சிதான் இந்தச் சிறுகதைகள். கடைத்தெருவில் சிற்றேவல் செய்தும், […]

Read more

தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்கள்

தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்கள், மு. ஆதவன், புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 96, விலை 95ரூ. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மனக்குறை இருக்கும். அவற்றை தீர்க்க வல்லவை கோவில்கள் மட்டுமே. வீதிக்கு ஒரு கோவில் இருந்தாலும், சில கோவில்கள், குறிப்பிட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்ற வல்லதாக இருக்கும். தலையெழுத்து நன்கு இருக்க, திருமணம் ஆக, குழந்தை பிறக்க, பிள்ளைகள் நன்கு படிக்க, அவர்கள் பேச்சாற்றலுடன் திகழ, வாய் பேசாதோர் சரியாகப் பேச, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக என 16 பிரார்த்தனைத் தலங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் […]

Read more

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும்

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும், சி.வி. மலையன், மேகலா பதிப்பகம், பக். 280, விலை 150ரூ. இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் நடந்த சமீபகால சில நிகழ்வுகள் பற்றி, தினமலர் முதலான சில நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் கருவாகக் கொண்டு, அந்த நிகழ்வுகளோடு திருக்குறட்பாக்களை பொருத்திக் காட்டுகிறது இந்த நூல். மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சுவினை எனும் குறட்பாவுக்கு இந்து, முஸ்லிம் பெண்கள் முறையே முஸ்லிம், இந்து பெண்களின் கணவர்களுக்கு, தங்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நிகழ்வையும், பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் […]

Read more

ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர்

ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, விலை 300ரூ. இந்த நூலில் சொல்லப்பட்டு இருப்பது ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. ஆனால் அந்த வரலாற்றையே மர்ம நாவல்போல ஆக்கித்தந்து இருக்கிறார் ஆசிரியர். நாஜி என்ற பெயர், அதற்கான ஸ்வத்திக் சின்னம் ஆகியவை வந்தது எப்படி, அந்தக் கட்சி உருவான விதம் என்ன, இன்றைய அரசியல் பிரசார உத்திகளுக்கு ஹிட்லர் வழிகாட்டிய முறை, அவரது ஆளுமை, வக்கிர குணங்கள் என்று அனைத்தும் படித்து வியக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஜெர்மனியின் […]

Read more

இணையில்லா இந்திய அறிவியல்

இணையில்லா இந்திய அறிவியல், கணித மன்றம், சென்னை, விலை 120ரூ. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிவியல் சிந்தனைகள் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிரகங்களின் பெயர்களை, அவற்றின் அளவுக்கு ஏற்றவாறு பண்டைய இந்தியர்கள் அமைத்திருந்தனர். பிற்காலத்தில் கண்டறியப்பட்ட பல விஞ்ஞான தத்துவங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்திருகிறார்கள். இந்த உண்மைகளை பழம்பெரும் நூல்களில் இருந்து அறிய முடிகிறது என்கிறார் கணிதப் பேராசிரியர் இரா. சிவராமன். புதிய கருத்துக்களைக் கூறும் சிறந்த ஆராய்ச்சி நூல். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.   —- […]

Read more

மணிக்கொடி

மணிக்கொடி, சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 500ரூ. கல்கியின் பொன்விழாப் போட்யில் முதல் பரிசு பெற்ற நாவல் இது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனும் உயரிய கருத்துக்கு முழு வடிவம் கொடுத்து உருவான நாவல். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்று புதினத்தை படைத்திருக்கிறார் நேதிர்லதா கிரிஜா. இப்புதினம், விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் […]

Read more

நாகூர் குலாம் காதிறு நாவலர்

நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர். பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேருபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிப்பெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்தம் அளப்பரிய தமிழ்ப்பணிகளும், பெருங்குணங்களும் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் பல படைத்தவர். இவரது நாகூர்ப் புராணம் குறிப்பிடத்தக்கதொன்று. […]

Read more

உங்களின் முன் மாதிரி யார்?

உங்களின் முன் மாதிரி யார்?, பேரா. கு. நல்லதம்பி, விஜயா பதிப்பகம், கோவை. ஆசிரியர் பணி ஓர் அறம் என்ற நமக்குப் பரிச்சயமான தத்துவத்தை ஒரு புதிய கோணத்தில் புதிய வடிவத்தில் இந்த நூல் விவரிக்கிறது. அதே நேரத்தில் ஆசிரியரின் இலக்காகிய நன் மாணாக்கரையும் இணைத்துப் பேசுகிறது இந்த நூல். இருவரின் பரிணாம வளர்ச்சி பூரணத்துவம் பெறுவது எப்படி, எப்போது என்பதை ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். ஓர் அநை நூற்றாண்டுக்கும் முந்தைய கல்விக்கூடச் சூழலில், தமக்குக் கிடைத்த அனுபவங்களின் சாறு பிழிந்து, தம் ஆசிரியர்கள், மாணக்கர்களின் […]

Read more

தென்குமரியின் சரித்திரம்

தென்குமரியின் சரித்திரம், அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். நூலாசிரியர் அ.கா.பெருமாள் தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான பழைய அரிய புகைப்படங்களும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. தகவல்களில் பல, யூகங்கள், கதைகள் சார்ந்தவை. நாஞ்சில்நாடு பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. கதை சார்ந்த குறிப்பும் உள்ளது. பல […]

Read more

தி.க.சி.வின் நாட்குறிப்புகள்

தி.க.சி.வின் நாட்குறிப்புகள், சந்தியா பதிப்பகம், சென்னை. கம்யூ. இலக்கிய வட்டத்தின் பெயர் கலைஞர் கழகம் சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் தி.க.சி.யின் நாட்குறிப்புகள். அவர் 1948ம் ஆண்டு எழுதிய நாட்குறிப்பை தேடிப்பிடித்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம். ஒருவரின் டைரி அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி இருக்கும். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த தருவாயில் தி.க.சி. எழுதிய டைரி அவரை பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ இல்லை. நண்பர்களை பற்றியும், அவர் படித்த நூல்களைப் பற்றியும் மட்டுமே உள்ளது. ஓராண்டு மட்டுமே இந்த நாட்குறிப்பை […]

Read more
1 2 3 4 5 8