வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம் (ஆய்வுக்கோவை), எட்டுதொகுதிகள், பதிப்பாசிரியர்கள்-முனைவர் ந.வெங்கடேசன், முனைவர் தெ.மேகநாதன், முனைவர் இரா. சதாசிவம், வெளியீடு-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பக். 2038. தமிழ் இலக்கியத்தின் நாடளாவிய தன்மைக்கு எடுத்துக்காட்டு ஒம் நமோ நாராயணாய் எனும் எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில், எட்டுத் தொகுதிகளுடன் வெளியிடப்பட்ட நூல். நானூற்று நான்கு கட்டுரைகளுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூல், வைணவ இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல். வைணவ இலக்கியங்களான நாலாயிரத்திவ்ய பிரபந்தம், பாகவதம், ராமாயணம் முதலான இலக்கியங்களில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துகளையும், உணர்த்துப்பட்டுள்ள கருத்துகளையும் வெளிப்படுத்தும் […]

Read more

ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர், நா.மம்மது, சாகித்திய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. கருணாமிர்த சாகரம் தந்த கருணையாளர் தமிழ் இசை துறையில் மறக்க முடியாத ஒரு ஆளுமை, ஆபிரகாம் பண்டிதர். திருநெல்வேலி மாவட்டம். சாம்பவர் வடகரை ஊரில் பிறந்து, படித்து, திண்டுக்கலில் பணிபுரிந்து, தஞ்சையில் இறுதி வரை வசித்து, அங்கேயே மறைந்தவர். இசை மட்டுமின்றி, சித்த மருத்துவம், தமிழாசிரியர் பணி, விவசாயம், பாடகர், வீணை, வயலின் கலைஞர், கீர்த்தனை ஆசிரியர், ஓவியர், புகைப்படக் கலைஞர், பதிப்பாசிரியர், ஜோதிட பண்டிதர், கதாகாலட்சேப விற்பன்னர், இசை புரவலர் […]

Read more

முதல் கோணல்

முதல் கோணல், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 60ரூ. பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூல். அரசியல், சமூகம் சார்ந்த கருத்துக்கள் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. சமகால நிகழ்வுகள் குறித்த அபிப்ராயங்கள் மூலம் வாசகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் எளிமையான மொழியில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் நூல் இது. நன்றி: குங்குமம், 23/6/2017.   —- கட்டற்ற மென் பொருள் ஜிம்ப் 2.8, ஜெ. வீரநாதன், கோவை, விலை 190ரூ. போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் ஜிம்ப் 2.8. மென்பொருளை பயன்படுத்தும் விதம்குறித்து தெளிவாக விளக்கும் […]

Read more

முதற்கனல்

முதற்கனல், ஜெயமோகன், நற்றிணைப் பதிப்பகம், சென்னை, விலை 290ரூ. இதிகாசங்களையும் புராணங்களையும் தமிழ்நாட்டில் இந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் நிறையவே விமர்சனம் செய்தாயிற்று. இந்த 21வது நூற்றாண்டில் இந்தியாவின் ஆதி காவியமாகிய வால்மீகியின் ராமாயணம் தமிழில் புதிய மொழிபெயர்ப்பு பெற்றிருக்கிறது. வியாச மகாபாரதம், இன்றைய தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் இரு பெரும் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வருகிறது. பிரபஞ்சன் சில மாதங்களாக இதைத் தொடராகச் சிறப்பாக எழுதி வருகிறார். ஜெயமோகன் தன் இணையதளத்தில் தினம் ஓர் அத்தியாயமாக எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் நூலாக வெளிவந்து […]

Read more

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, திருத்திய முதல் பதிப்பு மே 2014, தமிழாக்கம் எஸ். வி. ராஜதுரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 550ரூ. மனித விடுதலைக்கான வழி சொல்லும் அறிக்கை மனித விடுதலைக்குத் தேவை வெறும் அரசியல் மாற்றமல்ல. ஒட்டு மொத்தமான சமுதாய மாற்றமே என்பதை 1848ம் ஆண்டிலேயே உலகுக்கு அறிவித்த அரசியல், தத்துவ, பொருளாதார, பண்பாட்டு ஆவணம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இந்த அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கம் தமிழில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈ.வே.ரா.வின் […]

Read more

குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?

குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?, ஜி.ஆர். இரவீந்திரநாத், சமூக மகத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், சென்னை, விலை 20ரூ. குஜராத் நலமா? குழந்தைகளின் நலம்தான் ஒரு நாட்டின் ஆரோக்கியத்தின் அளவுகோல். பிறந்து ஒரு வருடத்துக்குள் இறந்துபோகிற குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து ஒரு நாட்டின் மருத்துவ அக்கறையை மருத்துவ அறிஞர்கள் எடைபோடுகின்றனர். ஏதோ விதி முடிந்து போச்சு. செத்துபோச்சு என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சொல்ல முடியும்? அதென்னப்பா வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் விதி முடிய மாட்டேங்குது? என்று குறுக்குகேள்வி கேட்கும் […]

Read more

முதல் விடுதலைப் போர்

முதல் விடுதலைப் போர், முனைவர் கே.ராஜய்யன், கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ், ஜே. கோர்லே, தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன், நா. தர்மராஜன், பதிப்பாசிரியர் சின்னமருது தீனதயாளபாண்டியன், காவியன் பவுண்டேஷன், மதுரை, விலை 500ரூ. ஐரோப்பிய மேலாதிக்கம் துடைத்தொழிக்கப்படப் போவதால், நாம் கண்ணிரற்ற நிலைத்த மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறோம் என்று 1801ம் ஆண்டு மருதுபாண்டியர்கள் பிரகடனம் செய்தார்கள். அதே ஆண்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். ஆனால் 147 ஆண்டுகள் கழித்துத்தான் இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள். மருது பாண்டியருக்கு முன்பும் பின்பும் மரணித்த தியாகிகள் தொகை அதிகம். […]

Read more

நஞ்சுண்டகாடு

நஞ்சுண்டகாடு, குணா கவியழகன், அகல் வெளியீடு, சென்னை, விலை 135ரூ. உள்ளேயிருந்து ஒரு குரல் இலங்கையில் நடந்த போரில் இணைந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் அதற்காகக் கொடுத்த விலையின் மதிப்பு என்னவென்பதை விரிவாகச் சொல்லி அது சரிதானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு என்ற நாவல். பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்ட இந்நாவல் விடுதலைப்புலிகளின் அனுமதி மறுப்பு, அதன்பின்பு ஆசிரியரின் முள்வேலி முகாம் வாழ்க்கை ஆகியவற்றால் தடைப்பட்டுத் தற்போதுதான் அச்சேறியிருக்கிறது. காட்டு முகாமில் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களைப் பற்றிய விவரிப்பே இந்நாவல். கடுமையான […]

Read more

குறளறம்

குறளறம், திருவள்ளுவர் பதிப்பகம், விழுப்புரம், பக். 240, விலை 150ரூ. திருக்குறள் வெண்பாவால் ஆனது. அதை விருத்தப்பாவில் விளக்கம் அளித்து அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர். முயற்சியும் புதிது. அவர்தரும் கருத்துரைகளும் புதிது. வாழ்க்கை நிலையற்றது என்று வேதனைப்படுவோர் கூட இவரின் விளக்கத்தால்  உற்சாகம் அடையலாம். திருமூலர், வள்ளலார், வேதாத்ரி, மகரிஷி ஆகியோரின் தாக்கம் நூலில் அதிகம். 1330 குறளையும் எளிதாகப் படிக்க இந்நூலை ஒருமுறை வாசித்தால் போதுமானது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 13/8/2014.   —- வரலாற்றில் விழுப்புரம் […]

Read more

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள்

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள், எஸ். ஆர். விவேகானந்தம், கே.கே. முனியராஜ், வந்தவாசி, விலை 60ரூ. இறைநிலைக்குச் சென்ற மனிதர்கள் மனத்தின் போக்கில் சென்று அதன் பயணத்தை முழுமையாக உணர்ந்து, நல்லது கெட்டது அறிந்து, வாழ்வென்னும் நிலையாமையைப் புரிந்துகொண்டவர்கள் சித்தர்கள். சித்தர்களின் அற்புதங்கள் கேட்க கேட்கத் திகட்டாதவை. ஆனால் அவை மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மனிதனாகப் பிறந்தவர்கள் இறைநிலையை அடையும் வழிமுறைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றையும் சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அப்படியானவர்களில் பலர் அறியப்பட்டுள்ளனர். சிலர் அறியப்படவேயில்லை. ஆகவே, அருப்புக்கோட்டைப் பகுதியின் அறியப்படாத சித்தர்களை அறிமுகப்படுத்துவதை […]

Read more
1 2 3 4 5 6 8