பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்(சமூக நாவல்), தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 150ரூ. ஒரு முழுமையான திரைப்படத்திற்கு தேவைப்படும் குடும்ப நிகழ்வுகள், காதல், வீரம், தியாகம், சோகம், அரசியல் செல்வாக்கும், பணபலமும் நிறைந்த ஆதிக்க சக்தி, இறுதியாக சுப நிகழ்வுகள் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு சமூக நாவல். கதாநாயகி பூவரசி ஒரு டாக்டர். தன்னையும், உடன்பிறப்புகளையும் தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் மறைந்து விடுவதால் அவர்களை ஆளாக்க தன்னை தியாகம் செய்கிறாள். அவளை தன் வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறான் […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், நூல் கிடைக்கும் இடம் கண்மணி கிரியேடிவ் வேவ்ஸ், சென்னை, தனிப் பிரதி 225ரூ, ஐந்து தொகுதிகளுக்கும் விலை 800ரூ. எழுத்தாளர் சவீதா எழுதிய 18 நாவல்கள், 5 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. காதல், கிரைம், குடும்பம் என்று எதை மையமாக வைத்து எழுதினாலும் கதைப்போக்கிலும், எழுத்து நடையிலும் வித்தியாசங்களை விதைப்பதால், கூறியது கூறல் என்ற குறைபாடு எழவில்லை. ஒவ்வொரு நாவலிலும் காணப்படும் நகைச்சுவை, நவீன உவமைகள், நடையில் வேகம், எழுத்தில் லாவகம் வாசகர்களை வசியப்படுத்தும். துள்ளலும், துடிப்பு மிகுந்த நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த […]

Read more

இரட்சணிய யாத்திரகம்

இரட்சணிய யாத்திரகம், பாரி நிலையம், சென்னை, விலை 500ரூ. கிறிஸ்தவ கம்பர் என்று அழைக்கப்படுகிற சிறப்பை பெற்றவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை. பிறப்பிலே வைணவராக இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய இவர் படைத்த இட்சணிய யாத்திரம் கிறிஸ்தவ இலக்கியங்களில் உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது. 3766 பாடல்களை கொண்டு, ஜான் பனியன் எழுதிய திருப்பயணிகள் முன்னேற்றம், சாமுவேல் பவுல் ஐயரின் மோட்சப் பிரயாணம், பைபிள் ஆகிய 3 நூல்களின் வழி நூலாக அழகு தமிழ் காப்பியமாக, இயேசு பிரானுக்கு மணி மகுடமாக […]

Read more

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 135ரூ. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு வார இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல்களுக்கு வடிகால் இல்லாமல் பெரும்பாலோர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாக, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதையோடு ஒன்றச் செய்யும்வகையில், சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விறுவிறுப்பான நடையில் சிறுகதைகளை படைத்திருக்கிறார் நூலாசிரியர் தமிழ்மகன். நன்றி: தினத்தந்தி, 28/1/2015.   —- ஸ்புட்னிக் முதல் மங்கள்யான்வரை, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், […]

Read more

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 240ரூ. பாமரர்களையும் படிக்க வைத்த பத்திரிகை உலக முடிசூடா மன்னர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைவிலங்கு போடப்பட்ட ஒரே அரசியல் தலைவர். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை சந்தித்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சிமிக்க நடையில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி. ஆதித்னாருடன் […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது 2 குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதனால் 2 நகரங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். இப்படி பலத்த சேதம் அடைந்த ஜப்பான் கடுமையாக உழைத்து, இன்று பொருளாதாரத்தில் உலகில் மிக முன்னேறிய நாடாக விளங்குகிறது. இந்த நூலின் ஆசிரியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பான் சென்று திரும்பியவர். ஜப்பானின் சிறப்புகளை இந்நூலில் அழகிய […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் அனைத்திலும் அறிஞர் அண்ணாவின் உரை முழக்கத்தைக் கேட்டு மக்கள் போற்றினர், புகழ்ந்தனர், வியந்தனர், பாராட்டினர். தனக்கு சரியென்று தோன்றுவதைக் கூறவோ, எழுதவோ தந்தை பெரியார் எப்போதும் தயங்கியதில்லை.மூதறிஞர் ராஜாஜி சுயமான சிந்தனையாளர். இந்த மூவரும் உதிர்த்த முத்துக்களை ஒருங்கே தொகுத்து ஒரு கருத்துக் களஞ்சியமாக தொகுத்தளித்திருக்கிறார் பி.எல். முத்தையா. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.   —- விநய பத்திரிகா, முனைவர் மா. கோவிந்தராசன், வானதி பதிப்பகம், […]

Read more

மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம், டாக்டர் பி.எஸ். லலிதா, மயிலை முத்துக்கள் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. டாக்டர் பி.எஸ். லலிதா கால்நடை மருத்துவத் துறைப் பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் மருந்தில்லா மருத்துவம் என்ற சிகிச்சை முறையில் நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ரெய்கி, அக்குபஞ்சர், அக்குபிரஷர் ஆகிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடித்து சிகிச்சை அளிப்பவர் இவர். சர்வதேச அளவில் புகழ்பெற்றவரான இவர் எழுதியிருக்கும் இந்நூல் மருந்தில்லா மருத்துவம். ரெய்கி சிகிச்சையின் அடிப்படை அம்சங்களை இந்நூலில் விளக்குகிறார். அத்துடன் தன்னிடம் […]

Read more

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, தமிழில் எஸ். ராஜலட்சமி, அவ்வை இல்லம், ராஜலட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை, சென்னை, விலை 150ரூ. சாதனையாளரின் சுயசரிதை இந்தியாவின் முதல் பெண் மருத்துவப் பட்டதாரி, சட்டமன்ற உறுப்னிர் என்ற பெருமைகளை அடைந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்த சுயசரிதை பல்லாண்டுகள் கழித்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆங்கில ஆட்சியில் தமிழகம் இருந்த நிலை, இங்கே கொண்டுவரப்பட்ட முக்கியமான பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் உரிமை சட்டங்கள் ஆகியவற்றுக்கான பின்புலம், மகளிர் உரிமை இயக்கங்கள் ஆகியவற்றைப் […]

Read more

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள், சந்திரா, பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நீலத்தின் காதல் காதல், காத்திருப்பு, தனிமை, பயணம், கோபம் உள்ளிட்ட பல உணர்வு சார்ந்த அனுபவங்களைத் தேக்கி வெளியாகியிருக்கிறது வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் என்கிற இந்த கவிதை நூல். காதலைப் பிரயாதீர் என்ற தலைப்பில் இருக்கும் ஒரு கவிதை மட்டுமேகூட இந்த தொகுப்பை இன்னொரு உயரத்துக்குக் கொண்டு செல்ல போதுமானது என்று சொல்லலாம். மழையடிக்கும் பொழுதுகள் காதலைச் சொல்லும் தூத கணங்கள் அன்பர்களே உங்கள் காதல் முறிவினை அப்போது நிகழ்த்தாதீர்கள் […]

Read more
1 6 7 8 9