விடுதலை

விடுதலை, சமன் நாஹல், தமிழில் பிரேமா நந்தகுமார், சாகித்திய அகாதெமி, பக். 384, விலை 200ரூ. புகழ்பெற்ற எழுத்தாளர் சமன் நாஹல், ‘ஆஸாதி’ என்ற பெயரில் எழுதிய நாவலின் தமிழ் வடிவம். சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த தேசப் பிரிவினையின்போதும் உருவான அரசியல் மாற்றங்களைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் இந்த நாவல், சாகித்திய அகாதெமி விருது பெற்றது. நாட்டை பிளவுபடுத்தியதால் விளைந்த ரணங்களையும் வேதனைகளையும் கதையினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் லாலா கன்ஷிராம் என்ற தானிய […]

Read more

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும், ம.பொ.சிவஞானம், சந்தியா பதிப்பகம், பக். 160, விலை 130ரூ. அந்நிய ஏகாதிப்த்தியத்திடமிருந்து இந்தியா விடுதலை பெற்றது ஒரு மகத்தான வரலாறு. சுதேசமன்னர்களின் எதிர்ப்புப் போராட்டம், பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த இந்திய வீரர்களின் கலகம், காங்கிரஸ் மகாசபையின் தோற்றம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வின் உடனடி வெளிப்பாடாக, நாட்டின் பல இடங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தலைதூக்கின. பகத்சிங், வாஞ்சிநாதன் போன்றோர் இதற்கு உதாரணங்கள். ஆனால் அவை முளையிலேயே கொடூரமாக நசுக்கப்ட்டன. இந்த நேரத்தில்தான் அகிம்சையை ஆயுதமாகக் கொண்ட காந்தியின் இந்திய […]

Read more

இந்து தர்மத்தின் மேன்மையான வாழ்க்கை முறைகள்

இந்து தர்மத்தின் மேன்மையான வாழ்க்கை முறைகள், ஆற்காடு ஸ்ரீநாத், டாக்டர் பாலசந்தர், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. பிரம்மம், மனிதன், ஆன்மிகம், தியானம், பக்தியோகம் உள்பட 14 தலைப்புகளில் இந்து தர்மத்தின் மேன்மையான தகவல்கள் தொகுக்கப்பட்ட நூல். படித்து கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், விலை 100ரூ. தம் முயற்சியால் பெரும் பொருள் ஈட்டி, அப்பொருளைக் கல்வி வளர்ச்சி மற்றும் […]

Read more

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், ஆர்.பொன்னம்மாள், கிரி டிரேடிங்ஸ், விலை 50ரூ. சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, முருகன் அவருக்கு அருளிய நிகழ்வுகள், சண்முக கவசத்தின் சக்தி போன்ற விவரங்களும், சுவாமிகளால் அரளப்பட்ட பரிபூரண பஞ்சாமிர்தவண்ணம், வேற்குழவிவேட்கை, பகைகடிதல் போன்ற பொருளுடனும், சஸ்திரகமல ரத பந்தங்களும் குமாரஸ்தவமும் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- தன்னம்பிக்கை முழக்கம், முனைவர் பெ. ஆறுமுகம், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ஆராய்ச்சி என்பது முடிவே இல்லாத மானுடத் தேடல். அறியாமையாலும், அறிவியல் தெளிவின்மையாலும், மனித வஞ்சகத்தாலும் மூடிக்கிடக்கும் […]

Read more

வளமான வாழ்வு பெற மந்திரங்கள்

வளமான வாழ்வு பெற மந்திரங்கள், ஆபஸ்தம்பன், அழகு பதிப்பகம், விலை 45ரூ. வாணிபம், தொழில் விவசாயம், வழக்குகளில் வெற்றி பெற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பலன்களையும் பெறுவதற்கு துணை நிற்கும் 112 மந்திரங்கள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.     —- யோக வாசிஷ்டம் ஞானத்தின் நுழைவாயில், சிவராமகிருஷ்ண சர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆத்ம தத்துவத்தை விரிவாகச் சொல்லும் நூல். சிறு சிறு கதைகள் மூலம் மிகப்பெரிய ரகசியங்களை தெளிவாக விளக்கப்பட்டுள்ளதால் ஆர்வமாக படித்தால் எளிதில் விளங்கும் வகையில் […]

Read more

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. அகில இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனத்தை மகாத்மா காந்தியடிகள் நிறுவி அதற்குசெயலாளராக டாக்டர் ஜே.சி. குமரப்பாவை நியமித்தார். தமிழகத்தில் பிறந்த இவர், நாட்டுக்காக உழைத்த அறிஞர்களில் ஒருவர். காந்திய பொருளியலுக்கு உருவமும், உள்ளடக்கமும் கொடுத்தவர். அவருக்கு ‘கிராமக் கைத்தொழிலின் டாக்டர்’ என்று காந்தியடிகளே பட்டம் அளித்தார். உலகம் முழுவதும் புவி வெப்பமடைதலைக் குறைத்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற […]

Read more

தீரன் திப்பு சுல்தான்

தீரன் திப்பு சுல்தான், குன்றில்குமார், சங்கர்பதிப்பகம், விலை 190ரூ. வெள்யைர் ஆட்சியை எதிர்த்துப் போர் புரிந்த மன்னர்களில் முக்கியமானவர் திப்பு சுல்தான். மனித நேயம் படைத்தவர். மத நல்லிணக்கம் கொண்டவர். எதிரிகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய பெண்ணையே மணந்து, தன் நன்றியறிதலைக் காட்டியவர். பகையரசு, குடும்பப் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற தன் படைத் தலைவனையே சுட்டுக்கொன்ற நீதிமான். அந்த மாவீரனின் வரலாற்றை வேகமும், விறுவிறுப்பும் கலந்த நடையில் எழுதியுள்ளார், குன்றில் குமார். படிக்கும்போது, காட்சிகள் திரைப்படம் போல நம் மனக்கண் முன் ஓடுகின்றன. […]

Read more

சங்க காலத்து தமிழ் நாணயங்கள்

சங்க காலத்து தமிழ் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, விலை 400ரூ. ‘தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சங்ககால தமிழ் நாணயங்கள் மற்றும் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கிலநூலை, நாணவியல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்துள்ள தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதி உள்ளார். இந்த நூலை படித்தால் பழங்கால நாணயங்கள் மட்டும் அல்லாமல் பண்டைய காலங்களிலும் நாணய புழக்கத்தை கையாண்டு உள்ள தமிழர்களின் பெருமையை நன்கு அறிய முடிகிறது. அபூர்வமான நாணயங்களின் படங்களும் இடம் பெற்றிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. ஆராய்ச்சியாளர்கள் […]

Read more

லால்பகதூர் சாஸ்திரி

லால்பகதூர் சாஸ்திரி, அனில் சாஸ்திரி – பவான் சாஸ்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், புத்தக உலகம், விலை 245ரூ. சமுதாயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறு. அவரது குழந்தைப் பருவ நிகழ்வுகளையும், தனி மனித வாழ்வு, பொது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் இந்த நூலில் அனில் சாஸ்திரி – பவான் சாஸ்திரி ஆகியோர் சுவைபட தொகுத்து வழங்கியுள்ளனர். இந்த நூலைத் தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன் மொழிபெயர்த்துள்ளார். கடுமையான உழைப்பு, அறிவுத் திறத்தால் சாஸ்திரி […]

Read more

பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம்

பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம், ஜெகவீர பாண்டியனார், தோழமை வெளியீடு, விலை 500ரூ. பாஞ்சாலங்குறிச்சி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஆவர். அவர்கள் இருவரும் சிற்றரசர்களாக இருந்தபோதிலும் பேரரசரும் போற்றும்வகையில் வீரம் செறிந்தவர்கள். இந்த நூலில் முதல் பாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றையும், இரண்டாம்பாகத்தில் ஊமைத்துரையின் வரலாற்றையும் ஜெகவீர பாண்டியனார் விரிவான முறையில் எழுதியுள்ளார். இதன் மூலம் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் வீரம் செறிந்த வாழ்க்கை மற்றும் அவர்களது தேசப்பற்று, தெய்வப்பற்றை அறிந்து கொள்ள முடிகிறது. உயிர் துறக்க […]

Read more
1 6 7 8 9