ஜென் சதை ஜென் எலும்புகள்

ஜென் சதை ஜென் எலும்புகள், பால் ரெப்ஸ், நியோஜென் சென்ஸகி, தமிழில் சேஷையா ரவி, அடையாளம், பக். 192, விலை 160ரூ. அமெரிக்கரான பால் ரெப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற புத்த ஞானி நியோஜென் சென்ஸகி ஆகியோரால் தொகுக்கப்பட்ட படைப்புகளின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. மூல படைப்பில் உள்ள கருத்துகளைச் சேதமின்றி தமிழில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. நம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான உரையாடல்கள், நகைச்சுவை சம்பவங்கள், அனுபவ வழிகாட்டுதல்கள் 101 ஜென் கதைகளில் இடம்பெற்றுள்ளன. மறுபிறப்பு, […]

Read more

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ. களப்பிரர் காலத்தை ஏன் தமிழகத்தின் இருண்டகாலமாகக் கருதுகிறோம் என்ற கேள்வியை மையமாக்கியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. களப்பிரர்கள் சமண சமயத்தவர் அல்ல; பெளத்தர்கள் என பல இலக்கியச் சான்றுகள் மூலம் நிலை நிறுத்தியுள்ளார் நூலாசிரியர். அதேசமயம், வைதீக மதத்துக்கு அவர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும் வாதிடுகிறார். ஆனால், “களப்பிரரும் சமயங்களும்’‘ எனும் கட்டுரையில் சமண, பெளத்த சமயப் பிரசாரம் களப்பிரர் காலத்தில் தழைத்து வளர்ந்ததையும், சைவ, வைணவ சமய […]

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு.அருணாசலம் பிள்ளை, பதிப்பாசிரியர் ஆறு. அழகப்பன், முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அன்ன சத்திரம் கட்டுவதைவிட கல்விக்கூடம் அமைப்பது புண்ணியம் தருவது என்று கூறுவர். ஆனால், அன்ன சத்திரமும் கட்டி, கல்விக்கூடங்களையும் அமைத்து, மருத்துவசாலைகளையும் ஏற்படுத்தி, தமிழிசைக்கென சங்கம் நிறுவி, கோயில்களை உருவாக்கி குடமுழுக்கும் செய்வித்து, அரசாங்கப் பணியலமர்ந்து மக்கள் பணியும் மேற்கொண்ட ஒருவர் உண்டென்றால் அவர் அரசர் அண்ணாமலை செட்டியாராகத்தான் இருக்க முடியும். அவருடைய வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தனித்தனியே […]

Read more

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் பகுதி 1

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் பகுதி 1, தமிழில் குறிஞ்சிவேலன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், பக். 656, விலை 410ரூ. கார்ட்டூனிஸ்ட், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைக் கதாசிரியர், ஓவியர் என பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன். அவருடைய ஐந்து நாவல்கள் இரு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. முதல் தொகுப்பில் மூன்று நாவல்களும், இரண்டாவது தொகுப்பில் இரு நாவல்களும் இடம்பெற்றுள்ளன. பங்களா கட்ட பூர்வீக வீட்டையும், நிலத்தையும் விற்கச் செல்லும் ஐஏஎஸ் அதிகாரி, அவற்றை விற்காமல் திரும்பும் கதை “சல்லி வேர்கள்‘’. சுதந்திரப் போராட்ட […]

Read more

வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள்

வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள், டாக்டர் மு. நீலகண்டன், கனிஷ்கா புத்தக இல்லம், விலை 130ரூ. வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அவருடைய சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விரிவாகவும் கூறும் நூல். வள்ளலார் எப்படி இருப்பார், அவருடைய நடை – உடை – பாவனைகள் எப்படி என்பதையும் ஆசிரியர் வர்ணித்துள்ளார். வள்ளலாரின் கருத்துக்கள், வைரங்களாக ஜொலிக்கின்றன. அவற்றில் ஒன்று ‘இறந்தவர்களை எரிக்கக்கூடாது, இறந்தவுடன் எந்தச் சடங்கும் செய்யக்கூடாது. அவர் எந்த ஆடையில் இருந்தாரோ அப்படியே அடக்கம் செய்துவிட வேண்டும். யாரும் அழவோ, துயரப்படவோ […]

Read more

வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள்

வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள், வானதி பதிப்பகம், விலை 450ரூ. முக்காலமும் உணர்ந்தவர்கள் சித்தர்கள், தவவலிமையினால் இறைவனின் இன்னருளைப் பெற்றவர்கள். அட்டமா சித்திகளைக் கைவரப்பெற்று அரிய செயல்களைப் புரிந்தவர்கள். பொதுவாகச் சித்தர்கள் எண்ணிக்கையில் 18பேர் என்பார்கள். அது உண்மையல்ல, நூறுக்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அதன் அடிப்படையில் மா.ந.திருஞான சம்பந்தன் ஏற்கனவே ‘சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்’ என்ற நூலில் 81 சித்தர்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்த நூலில் பூண்டி மகான், மல்லையா சித்தர், கொடுவிலார் பட்டி சித்தர், பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீரெட்டியப்பட்டி சுவாமிகள் […]

Read more

‘இந்து’ தேசியம்

‘இந்து’ தேசியம், தொ. பரமசிவன், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஒற்றைக் கலாச்சாரத்துக்கு எதிராக… தொ. பரமசிவனின் இந்த நூல், கடந்த நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச் சமூகம் சந்தித்த தத்துவப் போராட்டத்தை மீளாய்வு செய்கிறது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரான ஒற்றைக் கலாச் சாரத்தையும் அதன் பின்னணியில் உள்ள சக்திகளையும் எடுத்து இழைஇழையாக அலசும் கட்டுரைகள், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வாழ்நாள் போராட்டங்களின் அடிநாதத்தை வலுவாக எடுத்துக்கூறுகின்றன. இன்றைய சமூக, அரசியல் சூழ்நிலையைத் தமிழ்ச் சமூக மரபின் பின்னணியில் அலசி ஆராயும் இந்நூல் […]

Read more

வெள்ளத் தாண்டவம்

வெள்ளத் தாண்டவம், வரலாற்று மகா காவியம், நீதிபதி மு. புகழேந்தி, செல்லம் & கோ புத்தகப் பதிப்பாளர், பக். 300, விலை 300ரூ. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை நகரிலும், சுற்றுப்புறங்களிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட நிகழ்ச்சியாகும். இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் கண்டு மனம் நொந்த நீதிபதியும், கவிஞருமான மூ.புகழேந்தி, அந்த நிகழ்ச்சியை கவிதை வடிவில் கண்ணீர்க் காவியமாகவே வடித்துத் தந்துள்ளார். ஒரு துயர நிகழ்ச்சியை காவியமாக வடித்துள்ள நீதிபதி புகழேந்தி பாராட்டுக்கு உரியவர். பல சம்பவங்களை […]

Read more

திரைப்பட இசைப்பாடல்கள்

திரைப்பட இசைப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. திருச்சி தியாகராஜன், எம்.கே. ஆத்மநாதன் ஆகியோர் சினிமாவுக்காக எழுதிய பாடல்களை கவிஞர் பொன்.செல்வமுத்து தொகுத்துள்ளார். இரண்டு சிறந்த கவிஞர்களின் பாடல்களுடன், அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்களுடைய பாடல்கள், இடம்பெற்ற படங்கள் முதலிய விவரங்களுடன் புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   பஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி, சாகித்திய அகாடமி, விலை 335ரூ. தனது எளிமையான எழுத்துக்களின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக திகழ்ந்தவர் வைக்கம் முஹம்மது பஷீர். அவரது […]

Read more

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள்

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள், முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ், மணிமேகலைப்பிரசுரம், விலை 160ரூ. இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லோராலும் படித்து மகிழ முடியாது. எனவே ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்துடன், இலக்கியத்தில் உள்ள சிறந்த கருத்துக்களை தொகுத்துத் தந்துள்ளார் முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ். சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் என்ற தலைப்புக்கேற்ற சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.

Read more
1 2 3 4 5 9