கலைவாணி டீச்சர்

கலைவாணி டீச்சர், திருவாரூர் பாபு, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியான கலைவாணி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை எழுதியுள்ள திருவாரூர் பாபு, மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை ஒவ்வொரு கதையைப் படித்து முடித்தபோதும் உணர முடிகிறது. கதாபாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன. நெடுநேரம் அந்த கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டகலாமல் உயிர் பெற்று உலா வருகின்றன. புத்தக வடிவமைப்பு பிரமாதம். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- சென்னை வானொலிப் பொழிவுகள், ஏகம் பதிப்பகம், விலை 30ரூ. […]

Read more

நபித்தோழர்களின் சிறப்புகள்

நபித்தோழர்களின் சிறப்புகள் (முதல் பாகம்), ஜுபைர் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ. நபித்தோழர்களின் சிறப்புகள் குறித்து அரபி மொழியில் அஷ்ஷைகு முஸ்தபா அல்அதவி எழுதிய நூல் சிறப்புக்குரியது. அதைத் தமிழில் எம். அப்துல் ரஹ்மான் பாஜில் பாகவி அழகுற மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலில் கலீபாக்கள் அபூபக்கர் சித்தீக், உமர், உஸ்மான், அலி மற்றும் தல்ஹபா, ஜுபைர், அபூ உபைதா, அப்துல் ரஹ்மான் பின் அவ்ப் போன்ற நபித் தோழர்களின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- என்னோடு வந்துவிடு, ஸ்ம்ரித்திராம், சிவாலயம், விலை […]

Read more

கம்பரின் மறுபக்கம்

கம்பரின் மறுபக்கம், புலவர் ஆ. பழனி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. ராவணன் சிவபக்தன் அல்ல, சிலப்பதிகாரம் சமண நூல் அல்ல. வஞ்சி என்படுவது கரூர் அல்ல என்பன போன்ற பல புதிய மாற்றுக் கருத்துகளை சான்றுகளுடன் விளக்குகிறார், நூலாசிரியர் புலவர் ஆ. பழனி. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   ஒரு வரிச் செய்திகள், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, ஸ்ரீஅலமு புத்தகநிலையம், விலை 70ரூ. போட்டித் தேர்வுக்கு பயன்படும் செய்திகளை ஒரு வரிச் செய்திகளாக தொகுத்தளித்துள்ளார் கள்ளிப்பட்டி சு. […]

Read more

சிச்சிலி

சிச்சிலி, லீனா மணிமேகலை, நற்றிணை பதிப்பகம், விலை 100ரூ. லீனாவின் 100 காதல் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. கவிதை உலகின் எந்த நிலப்பரப்பையும் கடந்து வெளிவரக்கூடிய அசாத்திய திறமை கூடிய கவிதைகள். வாழ்வின் எந்த ரகசியங்களுக்குள்ளும் அகப்படாத காதலின் பக்கங்கள் வீரியமாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. அனுபவப்பட்ட, துரோகத்தில் இழைந்த, பிரியப்பட்ட காதலின் உணர்வுகளைப் படிக்க நேர்வதே ஒரு அனுபவம். இதுவரை நாம் கண்டுவந்த காதலின் பிதற்றலான பக்கங்கள் துறக்கப்பட்டு, ரத்தமும் சதையுமான உண்மை முன்வைக்கப்படுகிறது. படிக்கும்போது லீனாவோடு உரையாட முடிகிறது. அவரிடம் பாசாங்குகள் […]

Read more

புது வீடு கட்டலாமா

புது வீடு கட்டலாமா, சி.எச். கோபிநாத ராவ், பிராம்ப்ட் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. கட்டடக் கலை நிபுணரான இந்நூலாசிரியர், இத்துறை தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும், 5 நூல்களை அழகுத் தமிழிலும் எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்நூல். வீடு கட்டி, பிறர் மதிக்க நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற கனவு அனைவருக்குமே உண்டு என்றாலும், ஓரளவு பொருளாதார வசதி பெற்றவர்களுக்கே இது சாத்தியமாகும். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல், யாரிடம் சென்று விசாரிக்கலாம் என்பதும் புரியாமல் திணறும் நிலை […]

Read more

குருவியும் குரங்கும்(குழந்தைகளுக்கான புத்தகங்கள்)

குழந்தைகளுக்கான புத்தகங்கள், எஸ்.எஸ். பப்ளிகேஷன், விலை 25ரூ. ‘குருவியும் குரங்கும்’, ‘புத்திசாதுர்ய வாத்து’, ‘பேராசைக்கார நரி’, ‘புத்திசாலி முயல்’, ‘ஒட்டகமும் நண்பர்களும்’, ‘முட்டாள் ஆமை’, ‘சிங்கமும் சுண்டெலியும்’ ஆகிய தலைப்புகளில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வண்ணப்படங்களுடன் எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் விலை 25ரூ. நன்றி: தினத்தந்தி, 14/9/2016. —-   பூனை மீசை சிம்கார்டு கதைகள், இயக்குனர் ‘டூ’ ஸ்ரீராம், தமிழ் அறிவு பதிப்பகம், விலை 50ரூ. சிறிய வடிவம் கொண்ட சிம்கார்டு மூலம் உலகில் உள்ள மக்களை இணைக்க முடியும். அதே […]

Read more

எது தர்மம்

எது தர்மம், சுகி. சிவம், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. நமக்குப் பிறர் என்னென்ன நன்மைகளெல்லாம் செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நன்மைகளை நாம் பிறருக்குச் செய்வோம். நமக்குப் பிறர் என்னென்ன தீமைகளெல்லாம் செய்யக்கூடாது என்று நாம் கருதுகிறோமோ, அந்தத் தீமைகளை நாம் பிறருக்குச் செய்யாமல் இருப்போம். அவ்வளவுதான். இதற்குள்ளேயே எல்லாத் தர்மங்களும் அடங்கிவிட்டன என்று தர்மத்திற்கு விளக்கம் அளிக்கிறார் சுகி. சிவம். நன்றி: தினத்தந்தி, 14/9/2016.   —-   கவி வானம், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. பல்வேறு பொருள்கள் […]

Read more

அக்னியின் ஆயிரம் நாமங்கள்

அக்னியின் ஆயிரம் நாமங்கள். சு. கோதண்டராமன், கிரி டிரேடிங் ஏஜென்சி, விலை 100ரூ. அக்னியை இறைவனாகக் கருதி குத்துவிளக்கு பூஜை செய்கிறோம். கார்த்திகை தீபத்தை இறைவனின் வடிவமாக காண்கிறோம். அந்த அக்னி பிறப்பு, ஒளி, புகழ், பரம்பொருள், யாகம், வழிபாடு உள்ளிட்ட 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 14/9/2016.   —-   தாவரவியல் மருத்துவம், மு. சண்முகவேல், அடன் புக் மால், விலை 70ரூ. நோய்கள் பற்றிய விவரங்களையும் அதைக் குணப்படுத்த மூலிகை மருந்துகள் தயாரிக்கும் வழிமுறைகளையும் எழுதியுள்ளார் மு. […]

Read more

நாராய் நாராய்

நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 148, விலை 115ரூ. கடந்த 2015-லிருந்து தற்போது வரை விஜயபாரதம், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, ஓம்சக்தி முதலிய இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு இது. வனத்துறை அலுவலராகப் பணியாற்றிய ஆட்டனத்தி, தனது பணி அனுபவங்களை அருமையான நடையில் சிறுகதைகளாக வடித்துத் தந்திருக்கிறார். நூலின் தலைப்பான “நாராய்… நாராய்…‘’ என்பது 13 கதைகளுள் ஒன்று. நூலைப் படித்தால், காடு, மலைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். காடுகளில் […]

Read more

நவீன ஜோதிடம் ஜாதகப் பலன்கள் கூறும் கலையை விளக்கும் பேராசான்

நவீன ஜோதிடம் ஜாதகப் பலன்கள் கூறும் கலையை விளக்கும் பேராசான், எஸ். அன்பழகன், அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா, பக். 884, விலை 750ரூ. ஜோதிட சாஸ்திரத்தில் கோள்களின் முக்கியத்துவம், ஜாதகங்களைக் கணிக்கும் முறைகள், நவக்கோள்களின் காரகத்துவங்கள், ராசி மண்டலத்தில் அமைந்துள்ள ராசிகள், அவற்றின் அதிபதிகள், ராசிகளுக்கான நட்சத்திரங்கள், அவற்றின் பாதங்கள், லக்னத்தைக் கணிக்கும் விதம், நவாம்சம் மூலம் ஜாதகங்களின் பலன்களைத் துல்லியமாகக் கணித்தல் என பல விவரங்கள் இந்த நூலில் பயனுற அமைந்துள்ளன. ராசிகள், லக்னங்கள், பன்னிரண்டு பாவங்களுக்கான பொதுப் பலன்கள், அந்த […]

Read more
1 2 3 4 5 6 9