இலக்கிய முத்துக்கள் 20

இலக்கிய முத்துக்கள் 20 (என் வாசிப்பின் வாசம்),  ஜெ.பாஸ்கரன், அர்ஜுன் ராம் பப்ளிகேஷன்ஸ்,  பக்.184, விலை ரூ.200. தமிழின் புகழ்பெற்ற இருபது படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த விரிவான அறிமுகமாக மலர்ந்திருக்கிறது இந்நூல். அசோகமித்திரன், கி.ரா., ந.பிச்சமூர்த்தி, ஆ.மாதவன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., சுந்தரராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் உள்ளிட்ட தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளைப் பற்றிய அருமையான பதிவாக மலர்ந்திருக்கிறது இந்நூல். இவர்களிலிருந்து சற்றே வேறுபடும் சுஜாதா, பாக்கிய ராமசாமி, ரா.கி.ரங்கராஜன், பரணிதரன், தேவன் ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும் பேசுகிறது. ஒரு படைப்பாளி, அவர் எழுதிய […]

Read more

எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள், கி. ராஜநாராயணன், அன்னம், பக்.316, விலை  ரூ. 300. எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் மறைவுக்குப் பிறகு அவருடைய பெயரில், முதல் பதிப்பாக வெளிவரும் கி.ரா.வின் புத்தம் புதிய நூல் என்ற அறிமுகத்துடன், வெளிவந்துள்ள புத்தகம் இது. எனது வாய்மொழி பதிவுகள் என்பதாகத் தலைப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கி.ரா. அளித்த நேர்காணல்களின் தொகுப்புதான் இந்த நூல், எழுத்தாளர் கழனியூரன் தொகுத்தவை (கழனியூரனும் காலமாகிவிட்டார்). விலாவாரியாகச் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் கேட்கப்படுகிற கேள்விகளுக்குக் கூட மிகக் கூராக, ஒற்றை வரியில் பதிலளிப்பதில் […]

Read more

சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்

சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்,  நா.கவிதா,  ஏ.எம்.புக் ஹவுஸ்,  பக்.290,   விலைரூ.270. “மக்கள் இலக்கியம்’ என்று கூறப்படும் சிற்றிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த சமுதாயச் சூழலை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் உள்ளன என பலரும் குறிப்பிடப்பட்டு வரும் சூழலில், அவற்றின் எண்ணிக்கை 300-க்கும் மேற்பட்டதாக உள்ளது என தனது கருத்தை முன்வைக்கும் நூலாசிரியர், அவற்றில் சமுதாயவியல் நோக்கத்துக்கு துணை புரியும் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம், சதகம் ஆகிய நான்கு சிற்றிலக்கிய வடிவங்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். “குறைந்த எண்ணிக்கையுடைய பாடல்களைக் கொண்டும், […]

Read more

உள்ளம் படர்ந்த நெறி

உள்ளம் படர்ந்த நெறி,  கோவை எழிலன், சந்தியா பதிப்பகம், பக்.200, விலை  ரூ.200.  தான் ரசித்துப் படித்த ஓர் இலக்கியக் காட்சியை நண்பர்கள் குழுவில் தினமும்பதிவிட்டதன் பயனாக உருவாகியிருக்கிறது இந்தத்தொகுப்பு. மொத்தம் நூற்று ஐம்பது காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றுமே இலக்கியக் கடலில் கண்டெடுத்த முத்துக்கள் என்றே கூறலாம். கம்பராமாயணம், யுத்தகாண்டத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடலுடன் தொடங்கி, ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வோர் இலக்கியக் காட்சியாக நமக்குக் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர். சீர்காழி திருப்பதியின் வருணனை, இராவணனை நற்பண்புள்ளவனாகக் காட்டும் பாவேந்தரின் பாடல், முழுமதி கிரகண நாளில் […]

Read more

பீலர்களின் பாரதம்

பீலர்களின் பாரதம், ஆவணப்படுத்தியவர்: பகவான்தாஸ் படேல், ஹிந்தியில்: மிருதுளா பாரிக்,  தமிழில்: பெ.சரஸ்வதி, சாகித்திய அகாதெமி, பக்.240, விலை  ரூ.270. தெற்கு குஜராத், இராஜஸ்தானின் கேட் பிரம்மா தாலுகாவில் டூங்கிரி பீலர் என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பீலர்களின் எழுத்து வடிவமற்ற மொழி பீலி. அம்மொழியில் வாய்மொழிப் பாடல்களாகப் பாடப் பெற்ற மகாபாரதக் கதையின் தமிழ் மொழியாக்கமே இந்நூல். சாந்தனுவுக்கும் கங்கைக்கும் ஏற்பட்ட பிணைப்பில் தொடங்கும் இந்நூல், குருஷேத்திர போருக்குப் பிறகான கலியுகத்தின் ஆரம்பம், அதையொட்டி பாண்டவர்கள் இமயமலை செல்வது வரையிலான நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது. […]

Read more

நதியின் கடவுள்

நதியின் கடவுள் (சீன நாட்டுப்புறக் கதைகள்) , ரெவ்.ஜான் மேக்காவன், தமிழில்: திருமலை சோமு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  பக்.200 ,  விலை ரூ.235. சீன வானொலியில் “கதைத்தேன்’ என்ற தமிழ் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சீன நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பே இந்நூல். துறவி, நகரத்தின் கடவுள், நதியின் கடவுள், அழகு மகள், விதவை, கன்பூசியசின் பழங்கதை என்பன உள்ளிட்ட 15 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. சீனாவில் அக்காலத்தில் நடைபெற்ற திருமணச் சடங்குகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், தெய்வ நம்பிக்கை, முன்னோர் […]

Read more

கீரைகள்

கீரைகள், மு.ந. புகழேந்தி, கோரல் பதிப்பகம், விலைரூ.70. கீரைத் தோட்டம் ஒரு மருந்து பெட்டி என, பிரபல எழுத்தாளர் டால்ஸ்டாய் கூற்றுக்கு ஏற்ப, கீரைகள் பற்றி விளக்கம் தரும் நுால். கீரை உணவின் சிறப்பு பற்றி முதல் கட்டுரை உணர்த்துகிறது. தொடர்ந்து அகத்தி கீரையில் துவங்கி, ஆரை, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, வள்ளக்கீரை வரை பல வகை கீரைகளின் அடிப்படை தகவல்கள், சத்துகள், உண்ணும் முறை என விரிவாக தரப்பட்டுள்ளது. நலம் மிக்க வாழ்வுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கீரை உணவு பற்றி அடிப்படை அறிவை […]

Read more

தொட்டிலோசை

தொட்டிலோசை, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், விலைரூ.150. தாய்மையை நெகிழ்ந்து போற்றி எழுதப்பட்டுள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். கவிஞர் வைரமுத்துவின் முன்னுரையுடன் உள்ளது. முதலில், ‘அம்மா இது நீ உறங்க நான் இசைக்கும் தாலாட்டல்ல; உன்னை வணங்க நான் வடிக்கும் பாராட்டு’ என துவங்குகிறது. தொடர்ந்து தாய்மையின் தன்னிகரற்ற பண்புகளை, தியாகத்தை கூர்மையான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறது. இடையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கவிஞர்கள் வாலி, சிற்பி, மு.மேத்தா என பிரபலங்கள், தங்கள் தாய் குறித்து எழுதியுள்ள கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தாய்மையை எண்ணி […]

Read more

நா.வானமாமலை நுாற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

நா.வானமாமலை நுாற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள், இரா.காமராசு, சாகித்ய அகடமி, விலைரூ.315. சாகித்ய அகாடமி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்குப் பெரும்பாங்காற்றிய ஆளுமைகளுக்கு நுாற்றாண்டு நினைவு விழாக்களை நடத்தியது. அந்த வகையில் பேராசிரியர் நா.வானமாமலை நுாற்றாண்டு விழாவையொட்டி நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு நுால். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.அரசு, நா.வா.,வின் ஒட்டுமொத்த பங்களிப்புகள் குறித்த நுட்பமான மதிப்பீட்டையும், தமிழாய்வுகளில் அவரது இடத்தையும், ‘பேராசிரியர் நா.வானமாமலையின் அரை நுாற்றாண்டு காலப்பயணம்’ என்ற கட்டுரையில் முன்வைக்கிறார். பெரியார் பல்கலைக் கழகத்தின் […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார் மன்னன், விவேகா பதிப்பகம், விலைரூ.145 வித்தியாசமான 50 கோவில்கள் பற்றியும், அவற்றின் வழிபாட்டு முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்த நுாலில், அந்தச் சுவாமிகளின் படத்தையும் தெளிவான தகவல் கொண்ட நுால். இதில் இடம்பெற்றுள்ள கோவில்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்தில் உள்ளவை. கல்வராயன் மலையில் ராமனைக் கரியராமன் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டையும் கடவுளாக வணங்குகின்றனர். அந்தக் கல்வெட்டை வணங்கினால் நோய் தீர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையும் இந்தப் பகுதியில் நிலவுகிறது. ஓர் ஊரில் எட்டுக்கை அம்மன் சிலை 45 அடி […]

Read more
1 2 3 4 5 9