சேகுவாராவின் பொலிவியன் டைரி

சேகுவாராவின் பொலிவியன் டைரி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, உலக மக்கள் இனத்துக்காக வழிகாட்டிய கருணை வள்ளல். சத்தியம், அன்பு, அகிம்சை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, எளிமை போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதற்குமான நெறிகளாக்கி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் அவர். காந்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எளிமையே இனிமை, கோபம் வராத மேன்மை, காந்தியக் கருணை போன்ற 31 தலைப்புகளில் மொழிந்துள்ளார். உலகில் அமைதி, ஊரில் அமைதி, உள்ளத்தில் அமைதி […]

Read more

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக […]

Read more

புத்தகம் போற்றுதும்

புத்தகம் போற்றுதும், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும் என்ற வரிசையில் தற்போது வித்தியாசமான தலைப்பான புத்தகம் போற்றுதும் என்ற தலைப்புடன் 50 நூல்கள் மற்றும் நாவல்களை நூலாசிரியர் விமர்சனங்களாக எழுதி தொகுத்துள்ளார். இதில் எழுத்தாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ. இறையன்பு எழுதிய அவ்வுலகம் என்ற நாவலை விமர்சனம் செய்யும்போது இறந்தவர்களின் நெற்றியின் மீது ஐந்து ரூபாய் நாணயம் என்ற மூடப்பழக்கத்தை, தனக்குரிய பாணியில் நூலாசிரியர் சாடியுள்ளதையும் சுவைப்பட விமர்சனம் செய்துள்ளார். எனக்குச் சாவு […]

Read more

சின்ன தூண்டில் பெரிய மீன்

சின்ன தூண்டில் பெரிய மீன், ஆப்பிள் பதிப்பகம், சென்னை, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-245-6.html வாழ்க்கையில் வெற்றி பெற அளவான வளங்களை வைத்து பெரிய வெற்றிகளைப் பெறுவது எப்படி என்பதை மைய கருத்தாக வைத்து நூலாசிரியர் சோம. வள்ளியப்பன் எழுதி உள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி.   —- தேனருவி, மதுரை பாபாராஜ், வெளியிட்டவர்-பா. வசந்தா, சென்னை, விலை 60ரூ. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட 30க்கும் மேற்பட்ட […]

Read more

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ். விகடன் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-4.html உலக அதிசயங்கள் ஏழு  என்கிறோம். ஆனால் இந்த 7 அதிசயங்களைத் தவிர வேறு பல அதிசயங்களும் இருக்கின்றன. அவற்றில் பல மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. வடஅட்லாண்டிக் சமுத்திரத்தின் மேற்கு பகுதியில், பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது. அந்த வழியாகச் செல்லும் விமானங்களும், கப்பல்களும் காணாமல் போகின்றன. அதற்குக் காரணம் என்ன? உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html முழுமையான அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் நீதி, மனுநீதி போன்ற சொற்கள் எல்லாம், எந்தெந்தப் பாடல்களில் வருகிறதோ, அந்தப் பாடல்களை எல்லாம் நான் தொட்டிருக்கிறேன் என்ற காரணத்தால், இந்த நூல் குறைந்தபட்சம், கம்பனின் மிகப்பெரிய சொற்களங்சியத்தில் ஒரு சொல்லைக் குறித்த ஒரு தொகுப்பாகவாவது பயன்படும் எனும் நூலாசிரியர் சொல்லாக்கமும், விளக்கமும் என தொடங்கி கம்பனில் நீதியும், நீதியின் […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், இராஜாமணி, சாகித்ய அகாடமி, பக். 104, விலை 50ரூ. திருலோக சீதாராம் எனும் சித்த சாகரம் திருலோக சீதாரம், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவர் தாய்மொழி, தெலுங்கு, கடுமையான சுய உழைப்பால் கல்வியில் மேம்பாடு உற்றார். ஆங்கிலத்திலும் அபாரமான அறிவு உடையவராக திகழ்ந்தார். கணக்கெழுதுவதிலும் அவர் திறமை அடைந்தார். இதன் மூலமும், தன் வருமானத்தை அவர் பெருக்கிக் கொண்டார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவர், வறுமையில் அழுந்தியிருந்தார். ஆனால் தம்முடைய கடைசி. 13 ஆண்டுகள், அவர் வளமுற்று, வாகன […]

Read more

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், தொகுப்பும் உரையும் ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 215ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html பெண்மையின் வெளிப்பாடுகள் சங்கக் காலம் முதல் பக்தி இலக்கியக் காலம் வரை தமிழ் கவிதையில் இயங்கிய நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்களின் கவிதைகளும், உரைகளும் கொண்ட தொகுப்பு இது. அஞ்சியத்தின் மகள் நாகையார், ஆதிமந்தியார் தொடங்கி ஆண்டாள் வரை கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சாதாரண வாசகர்களும் கவிதைகளைப் படித்து ரசிக்கும் வகையில் […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், நாகமணி மருத்துவமனை, சென்னை, விலை 1000ரூ. 1217 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் ஞானசவுந்தரி மகப்பேறு மருத்துவத்தில் நீண்ட அனுபவம் உடையவர் என்பதுடன் 30 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்தவர். திருமணத்தின்போதும், கர்பிணியாக இருக்கும்போதும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை தெளிவாகச் சொல்கிறார். சுகப்பிரசவத்துக்கான யோசனைகளைக் கூறுகிறார். நுட்பமான விஷயங்களை படத்துடன் விளக்குகிறார். இது மருத்துவத்துறையில் முக்கியமான புத்தகம். புத்தகத்தின் வடிவமைப்பு, மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. […]

Read more
1 136 137 138 139 140 336