வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், பக். 102, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html வாலியின் அறியப்படாத முகம் திரைப்பட பாடல்களை, வெறும் பாடல் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தமிழ் திரைப்பாடலின் மொழி, ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறியும் அரிய பொக்கிஷமாகவே பார்க்க வேண்டும். தமிழ் திரைப்பாடல் வரலாற்றில், கவிஞர் வாலிக்கென தனித்த இடம் உண்டு. மூன்று தலைமுறை கதாநாயகர்களுக்கும் திரைப்பாடல் எழுதியதால், அவரின் தமிழ் தலைமுறை கடந்தும் பாராட்டப்படுகிறது. […]

Read more

ஆழ்வார்கள் யாவர்

ஆழ்வார்கள் யாவர், வேங்கடகிருஷ்ணன், ஆர்.என்.ஆர்.அச்சகம், பக். 159, விலை 100ரூ. ஆழ்வார்களில் தமிழ் தலைவன் யார் மாயோன் மேய காடுறை உலகம் என்று தொல்காப்பியர் காலம் முதல் போற்றப்பட்ட வைணவ சமயம், ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக வளர்க்கப்பட்டு, ராமானுஜரால் பாரத நாட்டின் பல பகுதிகளிலும் புகழ் பரப்பி திகழ்கிறது. பக்திப் பயிர் வளர்க்க பன்னிரு ஆழ்வார்களின் சில பாசுர நயங்களையும், அவர்களின் பெருமைகளையும் விளக்குவதே இந்நூல். இந்நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நல்ல முத்தாக இருப்பதால், நூலும் பதினாறும் பெற்ற முத்து மாலையாகத் […]

Read more

திருமால் தரிசனம்

திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று […]

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-1.html உடலே மர்மம் இன்றைய எந்திர வாழ்வில் சாமானியனுக்கும் சரி, தொழில் சாம்ராஜ்யங்களைத் தாங்கி நிற்கும் கோடீஸ்வரனுக்கும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பளு மன அழுத்தம். வயிற்றுக்கான வேலை, குடும்ப அச்சின் சக்கரத்தை முன்நகர்த்துவது, இவற்றைத் தாண்டி சமூகம் சொடுக்கும் சாட்டை அடிகள் போன்ற சவால்களால் இவர்களுக்கு நன்றாக தூக்கம், ஓய்வு கிடைப்பதில்லை. கிடைப்பதெல்லாம் துக்கம்தான். இந்த மன அழுத்ததிலிருந்து […]

Read more

மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-336-2.html எந்தவொரு மதத்தையும் சாராதவன் என்று தன்னைப் பற்றி கூறும் இந்நூலாசிரியர், மதம் சார்ந்த நம்பிக்கையான மறுபிறப்பு பற்றி வெளியான பல்வேறு செய்திகளையும், ஆய்வுகளையும் விருப்பு வெறுப்பு இன்றி இந்நூலில் தொகுத்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மெய்யியல் துறையின் பாடநூல்களில் ஒன்றாகவும் இந்நூல் உள்ளது. ஆன்மா அழிவற்றது. உடல்தான் அழியக்கூடியது என்பது அனைத்து மதங்களும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு தத்துவம். […]

Read more

விடியலை நோக்கி முடிவற்ற பயணம்

விடியலை நோக்கி முடிவற்ற பயணம், த.ஜெ.பிரவு, ஜெ. அனிதா பிரபு, சென்னை, விலை 250ரூ. லட்சியங்களின் தோல்வி இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை எழுதியுள்ளது த.ஜெ.பிரபுவின் நாவல் இது. நாவலின் கதைக்களமும் அந்தத் துறைதான். ஆறு அங்கங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், 1980களுக்கு உயிர்கொடுத்திருக்கிறது. எண்பதுகளில் தமிழகத்தில் தொழிற்சங்க அரசியல் தீவிரமாக இரந்த காலகட்டத்தில் அதுசார்ந்த தொழிலாளர்களின் நடவடிக்கைகள், நிர்வாகங்களின் எதிர்வினைகள் போன்றவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். அரசியல் சார்ந்த லட்சியக் கனவுகளைச் சிதறடிக்கும் யதார்த்தத்தை இந்தப் படைப்பின் வழியாக விரிவாகப் பேசுகிறார் த.ஜெ.பிரபு. […]

Read more

ஞானம் நுரைக்கும் போத்தல்

ஞானம் நுரைக்கும் போத்தல், குமரகுருபரன், ஆதிரை பதிப்பகம், திருநெல்வேலி, விலை 60ரூ. பெருங்கதையைத் திறக்கிற சாவிகள் குமரகுருபரனின் கவிதை உலகம் சம்பாஷணைகளால் ஆனதாய் இருப்பது தற்செயலல்ல. பிரயத்தனம் கொஞ்சமும் இல்லாத சன்னதத்தின் வெளிப்பாடுகளை ஏதேனும் ஒரு கலையின் மூலமாய் வெளிப்படுத்துவது விடுபடுவதற்கான வழியாகலாம். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தொடங்குகிற இடத்தில் பெருங்கதையைத் திறக்கிற சாவியாகத் தோற்றமளிக்கின்றன. பேய்கள் மிகவும் நேர்மையானவை என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்னொன்று அரங்கங்கள் அற்ற நகருக்கு வந்திருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறது. எல்லோருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்பது இன்னும் […]

Read more

சகுந்தலா வந்தாள்

சகுந்தலா வந்தாள், வா.மு.கோமு, வெளியீடு நடுகல் பதிப்பகம், திருப்பூர், விலை 150ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-266-1.html உருக்கும் வாழ்க்கை எழுத்தாளர் வா.மு.கோமு மனதில் பட்டதை பாசாங்கின்றி அப்படியே எழுத்தில் வடித்துவிடக்கூடியவர். அவரது புதிய நாவலான சகுந்தலா வந்தாள் அவரது பாணியிலேயே சுறுசுறுவென்று வந்திருக்கிறது. கல்பனா, ஜான், சகுந்தலா, கமலக்கண்ணன் என்கிற நான்கே நான்கு பாத்திரப்படைப்புகளால் நகரும் இந்நாவல் ஆரம்பத்தில் எங்கு நோக்கிச் செல்லும் கதை இது என்ற பெரிய கேள்வியை ஏற்படுத்துகிறது. கமலக்கண்ணன் கதைக்குள் வந்தபிறகு இக்கதைக்குள் காதலையும் காமத்தையும் […]

Read more

கச்சத்தீவைத் திரும்பப் பெற முடியும்

கச்சத்தீவைத் திரும்பப் பெற முடியும், ப. திருமலை பாபுஜி நிலையம் வெளியீடு, நாகர்கோவில், விலை 30ரூ. சர்ச்சைத் தீவு முடிந்தது என  சொல்ல முடியாமல் மெகா சீரியல் போல் நீண்டுகொண்டே இருக்கும் கச்சத்தீவு பிரச்னை குறித்து பல்வேறு ஆய்வுகள் மூலம் கச்சத்தீவை திரும்பப் பெற முடியும் என்ற சிறு நூல் மூலம் அடித்துச் சொல்கிறார் இதழியலாளர் ப. திருமலை. தமிழகத்துக்கும் இலங்கைக்கும் தீராத பிரச்னையாக தொடர்கிறது கச்சத்தீவு. குறிப்பாக தமிழக தேர்தல் சமயத்தில், தமிழக எல்லா அரசியல்வாதிகளின் அடித்தொண்டையிலிருந்து, கச்சத்தீவு தமிழகத்தின் சொத்து. இலங்கையிடமிருந்து […]

Read more

சட்டமன்றத்தில் திருமாவளவன்

சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல் திருமாவளவன், கரிசல் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-324-7.html பூவிழியன் தொகுத்திருக்கும் இந்நூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், விவாதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தலித் மக்களின் நலனுக்காக அவர் பேசிய பேச்சுகளும், சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் உண்டு. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.   —- தஞ்சை பெரியகோயில், முனைவர் வி.அ. அன்பழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை […]

Read more
1 138 139 140 141 142 336