இங்கே நிம்மதி

இங்கே நிம்மதி, என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆழ்மன சக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என்று இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. இவற்றில் சில இலக்கியச் சிந்தனை உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளவை. அந்த வகையில் இந்நூலில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் வரும் எல்லா பிரச்சினைகளையும் சுமார் 42 கட்டுரைகளில் பிரித்துக் காட்டி, இவற்றிற்கு தீர்வு காண்பது எப்படி என்பதையும் மிக எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். […]

Read more

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள்

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. அறிவியல் பார்வைக்கும், ஆன்மிகத்தேடலுக்கும் உறவுப் பாலம் அமைத்து உயர்ந்த கருத்துகளை எளிமையாய் விளக்கியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர் பாடல்களில் சிந்தை கவர்ந்த பாடல்களை முனைவர் சொ. சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர் போன்ற 24 சித்தர்களின் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் பொழிப்புரையோ அல்லது விளக்கவுரையோ இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். […]

Read more

நிராசைகள்

நிராசைகள், லிங்கராஜா, மாலவன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. இந்நூல் ஒரு முக்கோண காதல் கதையைக் கொண்டது. கதையின் முடிவாக இருந்தாலும் விதியின் போக்கை நம்மால் முடிவு செய்ய இயலாது என்பதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- கன்னியாகுமரி மாவட்டம், பாரி நிலையம், சென்னை, விலை 70ரூ. கன்னியாகுமரி மாவட்டம் பற்றி அனைத்து தகவல்களையும் இந்த நூலில் எழுத்தாளர் சோமலெ எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —-   பிணங்களின் கதை, பாரதி புத்தகாலயம், சென்னை, விலை […]

Read more

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு, தோழமை பதிப்பகம், சென்னை, விலை 159ரூ. தமிழ்த்திரை உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு இந்தப் புத்தகம். 1958 ஜனவரி 23ந்தேதி மதுரையில் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணை சந்திக்கிறார் சந்திரபாபு. கண்டதும் காதல் கொள்கிறார். அந்த ஆண்டு மே 29ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் சந்திரபாபு ஷீலா திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகுதான், ஏற்கனவே தான் ஒருவரை காதலித்த தகவலை சந்திரபாபுவிடம் வெளியிடுகிறார் ஷீலா. இதனால் சந்திரபாபு மனம் […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, குமுதம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. வாழ்க்கை என்பதே போராட்டம்தான். தினமும் எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கிறோம். எதிர்நீச்சல் போடுகிறவர்கள்தான், வாழ்க்கையில் முன்னேற முடியும். பிரச்சினைகளை சமாளித்து, வெற்றி பெறுவது எப்படி என்பதை, சின்னச்சின்ன கதைகள் மூலம் விளக்குகிறார், இராம்குமார் சிங்காரம். ஒவ்வொரு கதையிலும், நம்பிக்கையூட்டும் பொறிகள் பளிச்சிடுகின்றன. வெற்றி பெறுவோர் கையில் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- வேரென நீ இருந்தாய், வசந்தா அம்பலவாணன், காரைக்கால், விலை 150ரூ. உலகிற்கு நல்லறம் புகட்டிய […]

Read more

இராமாயணம்

இராமாயணம், வெளியிட்டோர் சஞ்சீவியார், சென்னை, விலை 400ரூ. வடமொழியில் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயண இதிகாசம் 24,000 சுலோகங்களைக் கொண்டது. கம்பர் இக்காவியத்தை ஆறு காண்டங்களாக 12,000 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார். அவர் இந்நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம். இராமபிரானை மனிதத் தன்மையிலேயே வைத்து போற்றியவர் வான்மீகி முனிவர். கம்பர் இராமபிரானைத் தெய்வமாகப் போற்றியவர். கம்பரின் கவிதை கடவுள் பற்றை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மக்கள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இராமாயணத்தைப் படித்து, இன்புறுமாறு உரைநடை வடிவில் […]

Read more

சித்தார்த்தா ஓர் ஆய்வு

சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. சித்தார்த்தன் என்பது புத்தரின் இயற்பெயர். எனினும் இது புத்தரின் வாழ்க்கை வரலாறு அல்ல. புத்தர் காலப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். இதை எழுதியவர் ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்லி. இந்த நாவல் 1946ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றது. நான் விரும்பும் புத்தகங்கள் என்ற தலைப்பில் ஓஷோ ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன்னை மிகவும் கவர்ந்த நாவல் என்று சித்தார்த்தாவைக் குறிப்பிடுகிறார். அவரைப்போலவே இந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த சுரானந்தா, […]

Read more

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும்

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும், செம்முதாய் பதிப்பகம், சென்னை, சிலம்பு, மேகலை ஆகிய நூல்களின் விலை ஒவ்வொன்றும் 450ரூ. தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழில் காப்பியம் கி.பி. 2-ம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் முதல் இன்று வரை பல காப்பியங்கள் தோன்றியுள்ளன. காப்பியங்கள் அனைத்தும் மனித சமுதாயத்தை மையப்படுத்தியே உள்ளன. பண்டைய காலம் முதல் தமிழர்களின் ஒழுக்கங்களையும், பண்பாட்டையும் காப்பியங்கள் பறைசாற்றி வருகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், அருள்மொழி பிரசுரம், சென்னை, விலை 110ரூ. எளிமையாகவும், இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விக்கிரமாதித்தன் கதைகளை எழுதியுள்ளார் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. நன்றி: தினத்தந்தி, 27/5/2015   —-   வழக்கறிஞராக என் அனுபவங்கள், சந்திராமணி பதிப்பகம், திருவண்ணாமலை, விலை 140ரூ. இந்நூலை இளம் வழக்கறிஞர்களின் வளமான வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி நூலாக படைத்திருக்கிறார் வழக்கறிஞர் பா. பழனிராஜ். நன்றி: தினத்தந்தி, 27/5/2015   —-  வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ. சிந்திக்க தூண்டும் வகையில் 1000 விடுகதைகள் […]

Read more

இந்து மத சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?

இந்து மத சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?, யோகி ஸ்ரீ ராமானந்த குரு, அழகு பதிப்பகம், சென்னை, விலை 260ரூ. இந்து மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் கோட்பாடுகள் இறைவனை வழிபடும் முறை என்பது உள்பட அனைத்து தகவல்களையும் கொண்ட நூல். நன்றி: தினத்தந்தி, 27/5/2015.   —- செயல்திறன் மிக்க 5 எஸ்கள், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர், விலை 35ரூ. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்தன. இதற்கு உதவும் வகையில் ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். […]

Read more
1 77 78 79 80 81 336