வீரக்கதைப் பாடல்கள்

வீரக்கதைப் பாடல்கள், எம்.எம்.மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், பக். 152, விலை 110ரூ. போர்க்களத்தில் வீர முழக்கமிடும் ஒன்போது நாடோடிப் பாடல்களை ஆய்கிறது நூல். இரவிக்குட்டிப் பிள்ளைப் போர், கான் சாகிபு சண்டை, தம்பிமார் கதை, இராமப்பய்யன் அம்மானை ஆகிய நான்கும், தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னால் எழுந்த வீர நிகழ்ச்சி போர் பாடல்கள். காசீம் படைப்போர், அலியார் படைப்போர், சைத்தூன் கிஸ்ஸா, சக்கூன் படைபபோர், மலுக்கு மலுக்கு ராஜன் கதை ஆகிய ஐந்தும் முஸ்லிம் பெயர் பூண்ட போர் பாடல்கள். வீரச்சுவை எல்லாவற்றிலும் […]

Read more

உலகக் காப்பியங்கள்

உலகக் காப்பியங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 360ரூ. பழங்கால இலக்கிய வகையில் காப்பியம் தனிச் சிறப்பு பெற்றது. இவை அக்கால மக்களின் நாகரிக, பண்பாட்டுக் கருவூலமாக இன்றும் கருதப்பட்டு வருகின்றன. கற்பனை வளமும், இலக்கிய நயமும், சுவை உணர்வும், சிந்தனைத் திறனும் கொண்ட உன்னதப் படைப்பே காப்பியங்களாகும். இத்தகைய சிறப்பு மிகுந்த உலகக் காப்பியங்களை இந்த நூலில் எழுத்தாளர் இரா. காசிராசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூலில் முதல் மூன்று தலைப்புகளில் காப்பியத்தின் தன்மை, தோற்றம், வளர்ச்சி, வகை முதலானவை […]

Read more

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ. வளமுடன் நலமுடன் வாழ்க என்பதே ஒருவொருக்கொருவர் பரிமாறுகின்ற வாழ்த்துச் சொல்லாகும். அந்த வகையில் செல்வவளம் பெருகச் செய்யும் மந்திரங்கள், திருமணத் தடை விலகச் செய்யும் மந்திரங்கள், கடன் தொல்லை தீர்க்கும் மந்திரங்கள், கல்விச் செல்வம் வழங்கும் மந்திரங்கள், சொந்த வீடு அமைய வழிகாட்டும் மந்திரங்கள், சந்தான பாக்கியம் தரும் மந்திரங்கள், உடல் நலம் காக்கும் உன்னத மந்திரங்கள் என்று 25 தலைப்புகளில் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய இந்து மந்திரங்களை ஸ்ரீ ஜானகிராம் இந்த […]

Read more

பாரதியும் தேசியத் தலைவர்களும்,

பாரதியும் தேசியத் தலைவர்களும், சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 74, விலை 65ரூ. மகாகவி பாரதிக்கு காந்தியடிகைள், வ.உ.சி., அரவிந்தர், திலகர், நெல்லையப்பர், பாரதிதாசன், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுடன் இருந்த உறவுகளையும், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக விரிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்த பிறகு பாரதி வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம், இந்தியா பத்திரிகையை நடத்துவதற்காக பாரதியார் பட்ட துயரங்கள் மற்றும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி […]

Read more

நீதி நூல் களஞ்சியம்

நீதி நூல் களஞ்சியம் (22 நூல்கள் உரையுடன்), உரையாசிரியர்கள் பத்மதேவன், தமிழ்ப்பிரியன், கொற்றவை வெளியீடு, சென்னை, பக். 1056, வலை 720ரூ. ஒழுக்கம், நீதி, அறம், பண்பாடு பணிவுடைமை என்பதெல்லாம் என்ன? அவை என்ன விலை? எங்கே கிடைக்கும்? என்று கேட்கும் இன்றைய இளயை சமுதாயத்திற்கு தேவையான தொகுப்பு இந்நூல். மனித வாழ்க்கையைச் செம்மைபடுத்தும் நீதிநெறிக் கருத்துகளை நம் சங்கப் புலவர்கள் வாரி வழங்கியுள்ளனர். ஆனால், அதைப் படிப்போரும், அதன்வழி நடப்போரும் அருகிவிட்ட காலம் இது. நீதிநூல்கள் – அற நூல்கள் அனைத்தும் ஒரே […]

Read more

நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)

நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), ராம்குமார், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 360, விலை 225ரூ. தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாகசாமி, தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், கிருபானந்தவாரியார், தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் நேர்காணல்களைக் கொண்ட புத்தகம் இது. தண்ணீர் இல்லாமல் குழம்பு வைப்பதற்கான செய்முறையைக் கிருபானந்தவாரியார் சொல்லித் தருகிறார்.‘பச்சைக் குழந்தை அலங்காரத்தை விரும்புவதில்லை. தாய் அக்குழந்தையின் மீதுள்ள அன்பினால் அலங்காரம் பண்ணிப் பார்க்கிறாள். அதுபோலத்தான் கடவுளுக்க நாம் பால் போன்றவற்றைக் கொட்டி அபிஷேகங்களைச் செய்கிறோம்’ […]

Read more

இது சக்சஸ் மந்திரம் அல்ல

இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 112, விலை 85ர வாழ்வில் சாதனை புரிந்தவர்களைப் பற்றி எழுதப்பட்ட 24 ஆங்கில நூல்களை அறிமுகம் செய்யும்விதமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. அந்த நூல்களில் அடங்கியுள்ள செய்திகள் என்ற அளவில் நின்றுவிடாமல், வாசகர்களைச் சாதனையாளராக மாற்றும் முனைப்புடன் நூலாசிரியர் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. ‘பெரிய குட்டையில் சிறிய மீன் ஆக இருப்பதைவிட சிறிய குட்டையில் பெரிய மீனாக இருப்பது நல்லது. ‘நம்பிக்கையில்லாதவன் காற்றைக் குறை சொல்வான்; நம்பிக்கையுள்ளவன் மாற்றத்தை எதிர்பார்ப்பான்; […]

Read more

புத்தகத்தின் பெருநிலம்

புத்தகத்தின் பெருநிலம், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 238, விலை 210ரூ. நாட்டார் வழக்காற்றியலில் புலமையாளரான நூலாசரியர், ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக எழுதிய நூல் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தேர்வு செய்யப்பட்ட 22 கட்டுரைகள் சமூகவியல் – மானிடவியல், வரலாறு, சமயம் – தத்துவம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அந்த நூலின் சாராம்சத்தை மிகவும் எளிமையாகவும், சுவைபடவும் விளக்குகின்றன. நூலின் சிறப்புகளை மட்டுமன்றி, அது கூற வந்த, கூறியுள்ள […]

Read more

சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு

சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு, சு. தாமரைப் பாண்டியன், அருள் பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-335-9.html கவுரவ கொலைகள் சங்க காலத்திலும் நிகழ்ந்ததா? பண்டைக் காலந்தொட்டே, தமிழ் சமூகத்தில் ஆண்டிகளும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதற்கு காரணம், கீழ்த்தட்டு மக்களின் இனப்பற்றும், குல மானமும், குலத் தூய்மையுமே ஆகும். மேலும், அனைத்து இனங்களும், சம்பந்த வழி உறவுடைய கிளையினருடன் மட்டுமே, மண உறவு வைத்து கொள்கின்றனர். “புல்லு அறுத்தா தொழுபட்டிக்குத் தான் […]

Read more

அச்சுவெல்லம்

அச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ. சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் […]

Read more
1 31 32 33 34 35 56