நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய். ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. ரசிகர்கள் பார்வையில், சிவாஜியை பார்ப்பது ஒரு பரிமாணம். அவரை சந்தித்தவர்கள் பார்வையில் அவரை பார்ப்பது, வேறொரு பரிமாணம். அவருடன் நெருங்கி பழகிய குடும்ப நண்பர், சிவாஜியுடன், 33 படங்களில் நடித்தவர் என்ற முறையில் நூலாசிரியரின் எழுத்தில் நாம் பார்க்கும், சிவாஜியோ, முப்பரிமாணமாக, மனதுள் விரிகிறார். பொதுவாக சிவாஜியின் நடிப்பை வியந்திருக்கும் ரசிகர்களுக்கு, அவர் நடிப்பில் காட்டிய நுணுக்கங்களையும், மேதைமைகளையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூலாசிரியர் விவரிக்கையில், அட, ஆமாம்ல […]

Read more

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கண, நிகண்டு நூல்கள், அவை தொடர்பான ஆய்வுகள் போன்றவை தற்போது பெருமளவில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ இல்லையோ, பழந்தமிழ் நூல்கள் அழிந்துவிடாமல் அவற்றைப் புதுப்பொலிவுடன் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை. அந்த வரிசையில் பலரும் அறியாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகிய நிகண்டு நூல்கள் […]

Read more

அன்புக்கு பஞ்சமில்லை

அன்புக்கு பஞ்சமில்லை, ம. வான்மதி, பாவை மதி வெளியீடு, பக். 144, விலை 120ரூ. சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்புதான் என்பதை, தன் உணர்வுப் பூர்வமான எழுத்தால் உணர வைத்துள்ளார் வான்மதி. எத்தனை நகை அணிந்தாலும், புன்னகைக்கான ஆத்மார்த்தமான ஆர்ப்பையும் ஆசியையும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தின் ஊடே விவரித்திருக்கிறார். மாமியார் – மருமகள் சண்டையை எப்படி கையாள்வது என்பதை, லதா என்ற தன் தோழியின் கதையை வைத்து உணர்த்தி இருக்கிறார். அதை விவரிக்க அவர் பிரயோகிக்கும் […]

Read more

தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more

அறிந்த பாரதம் அறியாத கதைகள், ஒளி உண்போர் (பாகம் 1), வளர்த்த கடா (பாகம் 2)

அறிந்த பாரதம் அறியாத கதைகள், ஒளி உண்போர் (பாகம் 1), வளர்த்த கடா (பாகம் 2), ஸ்ரீ வ. ந. கோபால தேசிகாசாரியார், அட்சுரா பதிப்பகம், சென்னை, பக். 152, 144, விலை 130ரூ, 130ரூ. மகாபாரதம் பிரதான கதை பலரால் எழுதப்பட்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆனால் மகாபாரதத்துடன் தொடர்புடைய ஏராளமான கிளைக் கதைகள் அதிக அளவு வெளிவரவில்லை. அத்தகைய பல்வேறு கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தௌம்பயர்- ஆருணி, தௌம்யர் – உபமன்யு சம்பவங்கள் குருபக்திக்கான உதாரணமாக விளங்குகின்றன. பொறாமை கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக […]

Read more

பொதிகையில் பிறந்த செந்தமிழ்

பொதிகையில் பிறந்த செந்தமிழ், ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 140, விலை 100ரூ. பொதிகை மலைக்கு அந்த பெயர் வந்தது ஏன் எனும் கேள்வியை எழுப்பி நம்மை சிந்திக்க வைக்கிறார், நூலாசிரியர், பொதியப்பட்ட இடம் போல் தோற்றம் அளிப்பதால், அதை பொதிகை மலை என்று, கால்டுவெல் கூறுகிறார். பவுத்த இலக்கியங்களில் பொதிகை மலை, ‘போதல கிரி’ எனப்படுகிறது என்று குறிப்பிட்டு, பொதிகை மலைக்கும், பவுத்தத்திற்கும் உள்ள தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொதிகை மலையில் தமிழ் பிறந்ததாகப் போற்றுகிறோம். அதன் அர்த்தம் என்ன? மலை, உயர்வின் […]

Read more

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள்

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள், முனைவர் ந. முருகேசபாண்டியன், செல்லப்பா பதிப்பகம் வெளியீடு, பக். 168, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-462-7.html அதியமானுடன் அவ்வைக்கு காதலா? இன்றைய பெண்கள், அழகு தேவதைகளாக, ஆராதனை சிலைகளாக, நுகர்வு தீனிகளாக, வேலியற்ற வேட்டை களமாக மாற்றப்பட்டுள்ளனர். இத்தகு சூழலில், 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த போற்றத்தக்க பெண் கவிஞர்களை, அவர்களின் பாடலோடு இந்த நூல் அற்புதமாய் படம்பிடித்து காட்டுகிறது. கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றண்டு வரை, 400 […]

Read more

வடகரை

வடகரை, டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அகநி, வந்தவாசி, விலை 400ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை என்ற ஒரு வம்சத்தின் வரலாறு நூல். அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல் 600 ஆண்டு சம்பவங்களையும், ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். குடும்பங்களில் இன்று இழந்து கொண்டு இருக்கும் பாசப்பிணைப்புகள் […]

Read more

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. மகாகவி பாரதியார் கவிதைகள், வசன கவிதைகள் அடங்கிய முழுத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 664 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை 300ரூ. மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூலும் வெளிவந்துள்ளது. 440 பக்கங்கள் கொண்ட புத்தகம். விலை 275ரூ. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. 480 பக்கங்கள். விலை 275ரூ. மேற்கண்ட புத்தகங்களின் பதிப்பாசிரியர் டி. சுப்புலட்சுமி. 3 நூல்களையும் வெளியிட்டோர் ஜீவா பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.   […]

Read more

யாருடைய எலிகள் நாம்?

யாருடைய எலிகள் நாம்?, துளி வெளியீடு, சென்னை, விலை 300ரூ. பல்வேறு பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். பத்திரிகைகளில் எழுதப்படும் எல்லாக் கட்டுரைகளும் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவையாகவோ, தேவையற்றவையாகவோ ஆகிவிடுவதில்லை என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. தமிழக அரசியல், ஈழப்பிரச்சினை, சாதியம், ஜனநாயகம், சுதந்திரம், வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஊடக நெறிகள், மருத்துவம், பாலினம், பாலியல் என வீச்சும் விரிவுமிக்க களங்களில் இறங்கி, நூலாசிரியர் சமஸ் எழுதியுள்ள சூழலியல் கட்டுரைகள் ஒரு சமகால வரலாற்றுக் களஞ்சியத்தைப் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது. […]

Read more
1 30 31 32 33 34 56