தெருவிளக்கும் மரத்தடியும்

தெருவிளக்கும் மரத்தடியும், ச.மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக். 88, விலை 80ரூ. கற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன. நூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். […]

Read more

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும்

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும், கீ.வீரமணி, வெளியீடு திராவிடர் கழகம், விலை 70ரூ. நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும், 90ஆம் ஆண்டு காணும் சுயமரியாதை இயக்கமும் சாதித்து என்ன என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார். சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றதால் பிராமணர்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த முத்தையா முதலியாரால் கொண்டு […]

Read more

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்து பல்வேறு நூல்களை நெல்லை கவிநேசன் எழுதியுள்ளார். ஆனால் சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்காக தனியாக விரிவான நூல் தமிழில் வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையிலும், ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வுக்கான முழுமையான தயாரிப்புக்கு உதவும் வகையிலும் ‘ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு’ என்னும் இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். இது தமிழில் சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு பற்றித் தெரிந்து கொள்ளவும், பாடத்திட்டம் பற்றி புரிந்து கொள்ளவும், முந்தைய […]

Read more

பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை

பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல  வழிமுறை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,  விகடன் பிரசுரம், பக்.70, ரூ.65. அதிக மதிப்பெண்கள் எடுப்பதே மாணவர்களின் லட்சியமாக இருக்கிறது. படிப்பு என்பது படபடப்போடு தேர்வறைக்குள் நுழையும் வரை படிப்பதல்ல என்பதை 20 சிறந்த குறிப்புகளாக வரையறுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அறிவு மேம்பட நாள்தோறும் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வதை மகிழ்ச்சியாகக் கூட செய்யலாம், தேர்வுக்கு முன்னதாக சளைக்காமல், மலைக்காமல் படிக்கலாம், அடிக்கடி தேர்வுகள் எழுதுவதும் பயிற்சிதான் என்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் பள்ளிக்குச் சென்று எல்லா வகுப்புகளையும் கவனித்து, குறிப்புகள் எடுத்துப் படிக்கும் பழக்கமும் வசமாகி விட்டால், மதிப்பெண்களும் மாணவர் வசமே. […]

Read more

பேருந்து

பேருந்து, ஹரணி, கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. தன் பயண வாழ்வின் ஒரு பகுதியாக அன்றாட வாழ்வில் அலையும் மக்களின் அவலங்களை மனிதமன ஓட்டங்களை நாவலாக பதிவு செய்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- டிஜிட்டல் வாழ்க்கை, பத்மினி பட்டாபிராமன், தென்றல் நிலையம், பக். 208, விலை 150ரூ. டிஜிட்டல் துறையில் நவீனமாகிவரும் தொழில் நுட்பங்களை, மீடியா மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். இரகுநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 150ரூ. தமிழ் நாட்டில் பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விவரங்களை விவரிக்கும் நூல் இது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், “கல்கி ராமகிருஷ்ண மூர்த்தி, எஸ்.எஸ். வாசன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, “சாவி” முதலியோர் பத்திரிகைத்துறையில் எதிர்நீச்சல்போட்டு சாதனைகள் புரிந்ததை ஆசிரியர் நடுநிலையுடன் எழுதியுள்ளார். தமிழில் இதழியல் துறை பற்றி நூல்கள் அதிகம் இல்லை என்ற குறையை, இந்தப் புத்தகம் போக்கியுள்ளது. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகைத் துறையில் ஈடுபட விரும்புகிறவர்களம் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் […]

Read more

உறவுகள்

உறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ. உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் […]

Read more

தமிழி

தமிழி, வி.ஆனந்தகுமார், வி. ஆனந்தகுமார் வெளியீடு, விலை 250ரூ. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஆதிமனிதனான ஆதிபகவன், பிறப்பித்த முதல் சொல் எது என்பதிலிருந்து ஆரம்பித்து குகைகளில் அவன் வைத்த அடையாளக் கோடுகள் பிற்காலத்தில் அவை எழுத்துக்களாக மாறின. இது தொடர்பாக அரிய தகவல்கள் அடங்கிய ஆராய்ச்சி நூலாகும். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி?, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டி இந்நூல். அரசு […]

Read more

குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பதிப்பகம், விலை 120ரூ. தமிழகத்தில் நடிகையாக அறியப்பட்ட குஷ்பு, தற்போது அரசியல் களத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளியிடும் அவர் பெண்ணியப் போராளியாகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகம், அரசியல், சினிமா தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அருமையாக அலசி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- I.A.S. தமிழ் முதல் தாள், பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன், மீனாட்சி புத்தக நிலையம், விலை 150ரூ. இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதுவோருக்காக […]

Read more

வேத கணிதம்

வேத கணிதம், அன்பழகன், நோஷன் பிரஸ், பக். 187, விலை 220ரூ. வேத கணிதம் எனப்படும் கணித சிந்தனையில், எளிய முறையில் எண்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 30 ஆண்டு காலமாக பிரபலமாக விளங்கி வரும் இந்த சிந்தனைகளையே நூலாசிரியர், ‘வேத கணிதம்’ என்ற தலைப்பில், இந்த நூலில் வழங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் இந்த கருத்துகளை குறிப்பிட்டிருந்தாலும், தமிழில் அவ்வளவாக புத்தகங்கள் அமையவில்லை. அந்த குறையை இந்த புத்தகம் நீக்கி உள்ளது. அதற்கு நூலாசிரியரை பாராட்டலாம். வேத கணித கருத்துகளில் […]

Read more
1 7 8 9 10 11 21