இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், ஹோல்கல் கெர்ஸ்டன், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவரது வாழ்வில் நடந்த அறியப்படாத நிகழ்வுகளின் பதிவு இந்நூல். மத சரித்திர நூல்களை எழுதுவதில் நிபுரணரான ஹோல்கர் கெர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும், வாழ்ந்ததையும், மறைந்ததையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் தந்திருக்கிறார். அவை இயேசு பற்றிய ஆய்வுக்குப் பயனுள்ள ஆதாரங்களாக விளக்குகின்றன. இயேசு இளம் வயதில் பட்டு வியாபார பாதை (Silk Route) வழியாக இந்தியாவுக்கு […]

Read more

இலக்கிய வீதி இனியவன்

இலக்கிய வீதி இனியவன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இலக்கிய வீதி என்ற அமைப்பின் மூலம் வளரும் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, வளர்ந்தெடுத்த இனியவனின் வாழ்க்கை வரரலாற்றை எழுதியுள்ளார் ராணிமைந்தன். இனியவனின் பண்புகள், அவர் தொடங்கிய அமைப்பு, அதன் நோக்கம், அவரது இளம்பிராயம் தொட்டு அவரது எழுத்தாற்றல், இலக்கியத்திற்காக அவர் பட்டபாடு, எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த ஊக்கம், கம்பன் கழக விழா உள்ளிட்ட அவர் நடத்திய பல்வேறு விழாக்கள், எழுத்துலக மேதைகள் முதல் அவரால் ஊக்கம் பெற்ற […]

Read more

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி, சுந்தரபுத்தன், நடப்பு வெளியீடு, சென்னை, பக். 96, விலை 60ரூ. விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில்தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முழக்கத்தை முறைப்படி அறிவித்தார் என்கிறது இந்நூல். இப்பயிற்சிப் பள்ளியில் பெரியார் ஆற்றிய பேருரைகள் மற்றும் அவரது வேறு சில பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல். பெரியாரின் தொண்டரான ஒளிச்செங்கே தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பெரியார் தொடர்பாக வேறு எங்கும் அறியமுடியாத பல தகவல்களும் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள், புலவர் அனு. வெண்ணிலா, திவ்யா பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 302, விலை 220ரூ. மனதை வெட்ட வெளியாக்கு நல்லதெல்லாம் நாடி வரும். தேவைகளைத் தேடி ஓடும் மனிதர்களுக்கு, வியப்பாகத் தோன்றுவதை நிகழ்த்திக் காட்டி, அவர்களால் வணங்கப்பெறும் சித்தர்கள், காலந்தோறும் அவதரித்துக் கொண்டே இருப்பர் என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வாறான சித்தர்களின் வரிசையில் பூண்டிச்சித்தரின் வாழ்க்கையை பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள் என, வாழ்வியல் சித்திரமாக படைத்துள்ளார் நூலாசிரியர் அனு வெண்ணிலா. முதல் பாகத்தில் 52 தலைப்புகளிலும், இரண்டாம் பாகத்தில் […]

Read more

இதழுலகில் திரு.வி.க.

இதழுலகில் திரு.வி.க., மா.ரா. இளங்கோவன், அமுதா, பக். 182, விலை 120ரூ. தொழிலாளர்களே! கள்ளத் தலைவர்களே நம்பாதேயுங்கள்! காவி உடுத்தாத துறவி, துறவு பூணாத பிறவி, பட்டினத்தாரா? தாயுமானாரா? வள்ளலாரா? தமக்காக வாழாமல், பிறருக்காகவே தொண்டு செய்ய வாழ்ந்த புதுமைத் துறவி திரு.வி.க., புவி அறியா புதிய வரலாறு (பக். 14) என்ற அறிமுகத்துடன், தமிழ்த் தென்றல், தமிழ் முனிவர், சாது முதலியார்என, திரு.வி.க. அறிமுகம் செய்யப்படும் இந்த நூல், அவரது எழுத்து ஓவியங்களை நமக்கு விருந்து ஆக்குகின்றன. பேச்சிலும், எழுத்திலும், தமிழினம் தரம் […]

Read more

நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்

நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர், அ.மகபூப் பாட்சா, மதுரை சோக்கோ அறக்கட்டளை வெளியீடு. அவசர நிலை பிரகடனத்துக்கு காரணமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பு நூறு வயதை கடந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நீதிபதி கிருஷ்ணய்யரின் வாழ்க்கை வரலாற்றை கூறும், நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற நூலை மீண்டும் படித்தேன். மதுரை சோக்கோ அறக்கட்டளை வெளியிட்டுள்ள நூலை அதன் நிர்வாக அறங்காவலர் அ.மகபூப் பாட்சா எழுதியுள்ளார். கிருஷ்ணய்யரின் அரசியல், சமூக பங்களிப்பை நூல் விவரிக்கிறது. 1915ல் பாலக்காடு […]

Read more

மூன்றாம் கதாநாயகன்

மூன்றாம் கதாநாயகன், ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை 160ரூ. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அன்பு வேறு, காதல் வேறு என்பதை எடுத்துக்காட்டும் கதை மூன்றாம் கதாநாயகன். மனைவி இருக்க மற்றவள் மீது மோகம் கொண்டால் குடும்பம் என்னவாகும் என்கிறது என்ன குறை என்ற கதை. ஒரு குடும்பத்திற்கு கணவனோ, மனைவியோ நல்லவிதமாக அமையவில்லை என்றால் அந்த குடும்பத்தின் கதி என்னவாகும் என்பதை காட்டும் வித்தியாசமான நட்பு என்ற கதை. […]

Read more

அடைமழை

அடைமழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. நடுத்தர வர்க்கத்திற்கு மிக அருகில் இருக்கக்கூடிய எழுத்து சமீப காலங்களில் அருகிவிட்டது. நடுத்தர வர்க்கமும் அவர்களுக்கான எழுத்தாளர்களும் காட்சி ஊடகங்களுக்கு மாறிவிட்டார்கள் என்று நினைத்த தருணத்தில் காட்சி தருகிறார்கள் ராமலக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள். மிக சுவாரஸியமான நடையில், சிறந்த சிறுகதைகளை வழங்கியிருக்கிறார் ராமலக்ஷ்மி. வாழ்வின் அபத்தங்கள் முரண்பாடுகள், உறவுச் சிக்கல்களை மிக நயமாக தனது கதையில் எடுத்துக்காட்டிச் செல்கிறார் ராமலக்ஷ்மி. ஒவ்வொரு கதையிலும் முதல் வரியிலேயே கதை ஜிவ்வென பயணிக்கத் துவங்குகிறது. அதனால் முதல் […]

Read more

சகுனி

சகுனி, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 410ரூ.‘ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-3.html சகுனி எனும் மகாவீரன், மாபெரும் நம்பிக்கையாளன். தனது தங்கை கான்தாரியின் கணவர் திருதராட்டினன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வரும் நிலையில் அவருக்குப் பின் தனது சகோதரியின் மகன் துரியோதனன் நாட்டை ஆளவேண்டும் என்று கருதி அதற்காக சகுனி படும் பாடுகள், கஷ்டங்கள், துன்பங்கள், அதனால் ஏற்படும் பெரிய இழப்புகளையும் தாங்கி முடிவில் அவன் மாண்டு போவதை சித்தரிக்கிறார் நூலாசிரியர் எஸ். விஜயராஜ். மகாபாரத கதையில் […]

Read more

சமுதாய வீதி

சமுதாய வீதி, தீபம் நா. பார்த்தசாரதி, சொர்ணவள்ளி பிரசுரம், சென்னை, விலை 100ரூ. நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கி நம் கண் முன் நடமாட விட்டவர் தீபம் நா. பார்ததசாரதி. சினிமா உலகில் நுழைய விரும்பி, சினிமா துறையில் அடியெடுத்து வைத்து, நல்ல மனிதனாக வாழ்ந்த கதாபாத்திரத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை.  நா.பா.வின் இந்த சமுதாய வீதி அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த நாவல். தற்போது அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.   —- வரலாற்று நாயகர் தந்தை பெரியார், […]

Read more
1 30 31 32 33 34 46