நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள்

நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள், ருத்ராங்சூ முகர்ஜி, பெங்குயின் பதிப்பகம். வங்க எழுத்தாளர் ருத்ராங்சூ முகர்ஜி எழுதி, பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள்’ (நேரு அண்டு போஸ் பேரலல் லைவ்ஸ்) என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். நேதாஜியை விட, நேரு எட்டு வயது மூத்தவர். இருவரும், பெரும் செல்வ குடுங்பங்களில் பிறந்தவர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர்கள். நேரு நினைத்திருந்தால், அவரது தந்தை வழியில், பிரபல வழக்கறிஞர் ஆகியிருக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் தற்போதைய ஐ.ஏ.எஸ்., போல, ஐ.சி.எஸ்., தேர்ச்சி பெற்றவர் […]

Read more

ஜென் தொடக்க நிலையினருக்கு

ஜென் தொடக்க நிலையினருக்கு, தமிழில் சேஷையா ரவி, அடையாளம் வெளியீடு. எளிமையாய் ஓர் அறிதல் ஜென் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதைப் பயில்வது எப்படி? அதன் தத்துவம் எப்படிப்பட்டது போன்ற விவரங்களை ஆரம்ப கட்ட நிலையினருக்கு சொல்லும் நூல் இது. இதன் சிறப்பியல்பு மிகவும் எளிமையான மொழியில் அழகான படங்களுடன் இது எழுதப்பட்டுள்ளது என்பதுதான். ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரஜோசிபோவிச் என்ற இரு அமெரிக்கர்களும் ஜென் பௌத்தம் பயின்றவர்கள். இவர்கள் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்காக எழுதிய இந்நூலை சேஷையா ரவி தமிழில் மொழி […]

Read more

எருது

எருது, கார்த்திகை பாண்டியன், எதிர் வெளியீடு. மொழிபெயர்ப்பு நாவல்கள் பயனுள்ளவையா? கார்த்திகை பாண்டியன் எழுதிய எருது நாவலை சமீபத்தில் வெளியிட்டோம். இந்த நாவல், மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக அறியப்பட்டு, தமிழுக்கு அறிமுகம் ஆகாமல் உள்ள நாவல்களின் தொகுப்பு. தென் அமெரிக்கா, ஐரேபாப்பா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிரபல எழுத்தாளர்கள் ஆங்கிலம் மற்றும் அவரவர் மொழிகளில் எழுதியவை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. சீன எழுத்தாளர் மோயான் எழுதிய எருது என்ற நாவலின் பெயரையே, இந்த நாவலுக்கும் சூட்டியுள்ளார் ஆசிரியர். எருது நோபல் பரிசு பெற்ற […]

Read more

வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர், பிறமொழிக்கதைகள், தமிழில் வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ. பிரேம்சந்த், தாகூர், பகவதி, சரண் வர்மா எனப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இருக்கிறார்கள். மணி மணியான 12 கதைகள். லாகூர் எவ்வளவு தொலைவு என்ற பஞ்சாபிக் கதை, லாகூரில் வாழ்ந்து, பிரிவினையால் வெளியேற வேண்டியருந்த இந்தியர்கள் இன்னும் எப்படி அந்த நகரத்துக்காக ஏங்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது. நூர்ஜஹானின் முதல் படத்திலிருந்த பாட்டு, ஓ.பி. நய்யார் வசித்த வீடு எனப் பல தகவல்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன. […]

Read more

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-345-3.html இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும், பின்பும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி, புதிய தகவல்களைக் கூறும் நூல் இது. இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து, இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆராய்ந்துவிட்டு திரும்பிச் சென்றார். சிலுவையில் அறையப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு இந்தியா […]

Read more

நிச்சய வெற்றி

நிச்சய வெற்றி, பிரகாஷ் ஐயர், விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-863-5.html ஆற்றல் இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆற்றலே அவனை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. அது என்ன என்பதை அறிந்து, தன்னை உயர்த்திக் கொள்ளும் யுத்திகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி, சவாலான தருணங்களை எதிர்கொண்டு முன்னேறி, தலைமைப் பதவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இந்நூலாசிரியர். அந்த அனுபவங்கள் தந்த உந்துதலே இந்நூல் என்கிறார் நூலாசிரியர். திறமைக்கே முதலிடம் என்ற […]

Read more

கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி

கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி, தமிழில் கிருஷ்ண பிரசாத், காவ்யா, சென்னை, பக். 1312, விலை 1300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரனின் தத்துவஞானி உலகப் புகழ் பெற்ற நூல். அவரது பிற நூல்களையும் தமிழுக்கு கொண்டுவரும் ஆர்வத்தால் இந்த நூல் உருவாகியுள்ளது. கலீல் ஜிப்ரனின் பிற படைப்புகளான இதயத்தின் ரகசியங்கள், முறிந்த சிறகுகள், குருவின் குரு, சிந்தனைகளும் தியானங்களும், நெஞ்சின் கண்ணாடி, இயேசு மனிதனின் மைந்தன் ஆகிய ஆறு நூல்களையும் ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளனர். […]

Read more

அதிகாரத்தின் மூலக்கூறுகள்

அதிகாரத்தின் மூலக்கூறுகள், எலியா கனெட்டி, தமிழில் ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-344-2.html 1905ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்பாடுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். க்ரவுட்ஸ் அண்ட பவர் என்ற இவரது புகழ்பெற்ற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறு கட்டுரைகள் கொண்ட தொகுதியாக அதிகாரத்தின் மூலக்கூறுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும்போது அத்தனை […]

Read more

கடலோரக் கவிச்சோலை

கடலோரக் கவிச்சோலை, அருள்திரு. ஸ்டீபன் கோமஸ், சமூக சமய ஆய்வுக் கழகம், வலம்புரி நாதம் வெளியீடு, வீரபாண்டியன்பட்டினம், விலை 500ரூ. மீனவர்கள், பரதவர்கள் என சமகாலத்தில் அழைக்கப்படும் மக்கள் வரலாற்று நூல்களாலும் பொது சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் வரலாற்றில் இழந்த இடத்தை மீட்கும் சொற்பமான முயற்சிகளில் ஒன்றுதான் இந்த நூல். 17ஆம் நூற்றாண்டு முதல் பரதவ சமூகத்தினர் பங்களித்த சந்தப் பாட்டுகள், கவிதைகள், கட்டுரைகளை இரண்டு பாகங்களாக 2000 பக்கங்களுடைய நூலாகத் தொகுத்தளித்திருக்கிறார்கள். தங்களின் வரலாற்றுப் பெருமை, நம்பிக்கைகள், தொழில், சமூகம் குறித்த சித்திரத்தைக் […]

Read more

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், ந. முத்துமோகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 160ரூ. பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுடனான ந.முத்துமோகனின் 9 தலைப்புகளில் வெளியான நேர்காணல்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நன்றி: தினத்தந்தி,8/10/2014.   —-   ஏ மேனிபெஸ்டோ பார் சேஞ்ச், (மாற்றத்திற்கான ஒரு சாதனம்), ஏ.பி.ஜெ. அப்துல்காலாம், வி. பொன்ராஜ், ஹார்பர் கூலின்ஸ் பப்ளிஷர்ஸ், பக். 255, விலை 250ரூ. பஞ்சாயத்து […]

Read more
1 2 3 4 5 6 12