ஹரி கதா சக்ரவர்த்தி எம்பார் விஜயராகவாச்சாரியார்

ஹரி கதா சக்ரவர்த்தி எம்பார் விஜயராகவாச்சாரியார், சங்கர் வெங்க்ட்ராமன், 99428990839, பக். 160+16, விலை ரூ. 100. வைணவர்கள் வணங்கிப் போற்றும் உடையவர் என்ற ஸ்ரீ ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான என்பார் என்பவரின் பரம்பரையில் பிறந்தவர் ஆதலால், அந்தப் பட்டப் பெயருடன் எம்பார் விஜயராகவாச்சாரியார் என போற்றப் பெற்றார். அவருடைய வாழ்க்கை வரலாறு, சிறப்புகள், நிழற்படங்கள் முதலியவற்றை சிறப்பாகத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சங்கர். சிதம்பரத்தில் பிறந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று சிரோமணி பட்டம் பெற்று, தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்று இந்தி, தெலுங்கு முதலிய […]

Read more

இராமாயணத் துமணிகள்

இராமாயணத் துமணிகள், ஆ.கிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 1032, விலை 495ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-7.html இந்த நூலில் வால்மீகி ராமாயணத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு, கதாபாத்திரங்களை விவரிக்கிறார் நூலாசிரியர். ராமாயண காவியத்தில் சுடர்விடும் தூமணிகளான ராமன், சீதை, லட்சுமணன், அனுமான், ராவணன், கும்பகர்ணன், தசரதன், கைகேயி, பரதன், குகன் சுக்ரீவன், விபீஷணன் என ராமாயண காவியத்தின் மிக முக்கியமான 12 கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு அந்தந்தப் பாத்திரங்களின் வழியே ராமாயணத்தை அணுகியுள்ளார். ஒவ்வொரு […]

Read more

குத்தகை ஒப்பந்தம் 999

குத்தகை ஒப்பந்தம் 999, ஜெ. ஜாக்குலின் மேரிராஜ், ஆதாம் ஏவாள் பதிப்பகம், நாகர்கோவில் 1, விலை 100ரூ. அணை எழுந்ததும், மடிந்து வாடிய மனித சமூகமும் எழுந்தது என்பதற்கு ஏற்ப உருவான முல்லைப் பெரியாறு அணையை பலவீனமாக உள்ளது என கூறி அதை உடைத்து புதிய அணை கட்டும் கருத்தை கேரள மக்கள் மனதில் ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான சூழ்ச்சிகள் மற்றும் காரணிகளை ஆதாரபூர்வமாக விளக்கி கூறும் நூல். அணையை கட்டுவதற்கு பொன்னிகுயிக் மேற்கொண்ட முயற்சிகள் வியக்க வைக்கின்றன.   —- […]

Read more

ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர்

ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர், பக். 136, விலை 100ரூ. சாயி மார்க்கம் தீபாவளி மலரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடைய பேட்டி, இலங்கை முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை நடத்திய அஸ்வமேத யாகம், அஷ்டபதி தந்த ஜெயதேவரின் வாழ்வில் ஸ்ரீமத் நாராயனின் அருளால் நிகழ்ந்த அற்புதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய கட்டுரையில் பல அரிய தகவல்கள் உள்ளன. ஹரித்வார், ரிஷிகேஷ், அயோத்தி, காசி, திரிவேணி சங்கமம் காண விரும்புவோருக்கு பனிமலையும் கங்கை நதியும் கட்டுரை ஒரு வழிகாட்டி ஆகும். சைவத் […]

Read more

ஓ ஹோ பக்கங்கள்

ஓ ஹோ பக்கங்கள், ஞாநி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். பக். 248, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-3.html எழுபதுகளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தமிழ்ச் சமூகச் சூழலின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பற்றி விருப்பு, வெறுப்பற்று தனது கருத்துக்களைத் துணிவுடன் ஊடகங்களில் பதிவு செய்து வருபவர் ஞாநி. ஓ பக்கங்கள் என்ற தலைப்பில் வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில் உள்ள கட்டுரைகள் மனிதர் கழிவை […]

Read more

சங்கர காவியம்

சங்கர காவியம், பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ். காஞ்சி மாமுனிவர் வாழ்வை, நடந்த சம்பவங்களை, அதில் வந்த நிஜ பாத்திரங்களை நாடக வடிவில் உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர். இவைகளைப் படித்தால், எந்த அளவு அவர் பணத்தின் மீது சிறிதும் ஆசையின்றி, சிறந்த ஏழை பக்தர்களுக்கு உதவ காரணமாக இருந்தார் என்பதும், அவர் நிகழ்த்திய அருள் சம்பவங்களும் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. காஞ்சி முனிவரை நேசிக்கும் அனைவரும் இந்த நூலை விரும்பி ரசிப்பர்.   —-   […]

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 350ரூ. இது புதுமையான முறையில் எழுதப்பட்ட பயனுள்ள அகராதி. முன் பகுதியில் இலக்கிய நூல்களில் காணப்படும் கடினமான சொற்களுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியங்களை பிறர் உதவியின்றி தாங்களே கற்க உதவும். பின்னர் இலக்கிய நூல்கள் பற்றிய விவரங்களும், அதன்பின் தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி, தமிழ் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் மிகவும் பயன்படும். தமிழறிஞர் கண்ணப்ப முதலியார் எழுதிய […]

Read more

முற்கால மக்கள் வரலாறு

முற்கால மக்கள் வரலாறு, ஆயிஷா பதிப்பகம், 78, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. வரலாறு என்பது இறந்த காலத்தில் வேர் பாய்ச்சி நிகழ்காலத்தை வழி நடத்தும் வல்லமை பெற்றது. இந்நூலில் குகைவாசிகள், அகழ்வாசிகள் உள்ளிட்ட பலரின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் மனிதர்களுக்கு வழிகாட்டுதல்களும், உயரிய படிப்பினைகளும் உள்ளன. திருக்குர்ஆன் விளக்கவுரையாளரும், மார்க்க சட்ட மேதையுமான இப்னு கஸீர் (ரஹ்) அரபி மொழியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா என்ற சரித்திர நூலின் நான்காம் பாகத்தை எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ, முற்கால மக்கள் வரலாறு […]

Read more

நானே எழுதுவேன் என் அழகிய தமிழை

நானே எழுதுவேன் என் அழகிய தமிழை, இரா. மணிகண்டன், த. விஜயபாஸ்கர், குணவர்சினி பதிப்பகம், 41, பாரதி கூதி, கதிர்காமம், புதுச்சேரி 605009. தமிழ் எழுத்துக்களை அழகாக குண்டு குண்டாக எழுதுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே. எழுத்துக்களை எப்படி அழகாக எழுதுவது என்பதை மாணவர்களுக்குக் கற்றுத்தரும் விதத்தில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாராட்டத்தக்க முயற்சி.   —-   ஐக்கூ உலகில் ஆலந்தூர் மோகனரங்கன், புலவர் குடந்தை பாலு, சாரதி மாணிக்கம் பதிப்பகம், 10, பழண்டியம்மன் கோவில் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 150ரூ. […]

Read more

கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு, தொகுப்பாசிரியர்-செ.தங்கமணி, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை, 33, உட்க சாலை, சென்னை 2, பக். 240, விலை 200ரூ. கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றை பல்வேறு கோணங்களில் விவரித்துச் சொல்லும் நூல். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகால தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே அக்காலத்திலேயே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் என்கிறது இந்நூல். ஆய்நாடு, பண்ணை சமூக அமைப்பு முறை, சங்காலத்திலும் அதற்குப் பின்பும் குமரி மாவட்டத்தில் நடந்த போர்கள், மக்கள் உரிமை இயக்கங்கள், தோள்சீலைப் […]

Read more
1 100 101 102 103 104 128