ஸ்ரீ சங்கர தரிசனம் 2012

ஸ்ரீ சங்கர தரிசனம் 2012, பாரதி காவலர் கே. ராமமூர்த்தி. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 62வது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட ஆன்மிக சிறப்பிதழ். சிருங்கேரி மடத்தின் சிறப்புகள் கட்டுரையாக வெளியிடப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர், 22/9/2013.   —-   யோகா உங்கள் கையில், டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், 61, டி.பி.கே.ரோடு, மதுரை, விலை 150ரூ.‘ உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது சிரிப்பு மட்டுமல்ல. யோகாவும்தான். இதை எப்படி முறையாக செய்வது என்பது குறித்து, 142 யோகாசனங்கள் […]

Read more

சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஔவை சு. துரைசாமி பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 392, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html சைவத் தமிழ்ப் பேரறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை. கி.பி. 700 முதல் கி.பி. 1000 வரையில், 300 ஆண்டுகளில் உருவான பக்திநூல்களின் வரலாற்றை, பக்தி மனத்துடனும், ஆய்வு நலத்துடனும் இந்நூலில் மிக அற்புதமாகத் தந்துள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய 12 சைவத் திருமுறைகள் தோன்றிய காலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி இவர் உறுதி […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி. கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகளான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஙனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்தபோது, ஜாம்பவனான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்துகொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார்.அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும்

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும், புலவர் ஆ. காளத்தி, கிள்ளை நிலையம், 16/383, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 294, விலை 190ரூ. வான்மீகி இயற்றியுள்ள ராமாயணத்தின் பாலகாண்ட தமிழ் மொழிபெயர்ப்பான இந்த நூல் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக வெளிவந்துள்ளது. பால காண்டத்தில் உள்ள எழுபத்து ஏழு சருக்கங்களில் சில சுலோகங்களை அழகிய முறையில் காளத்தி மொழி பெயர்த்துள்ளார். மூல நூலுக்கு ஊறு செய்யாது மொழி பெயர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இதைப் பாராட்டும் ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் […]

Read more

வேதமும் பண்பாடும்

வேதமும் பண்பாடும், ஸ்ரீசர்மா சாஸ்திரிகள், ஆர் மீடியா, 37/55, சிவில் ஏவியேஷன் காலனி, நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. தொன்மை வாய்ந்த ஹிந்து மதத்திற்கு சனாதன தர்மம் என்றும் ஒரு பெயர் உண்டு. இதன் நெறிமுறைகள், வைதீக கர்மாக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் வேதங்களும், வேதாந்தங்களும் அடக்கம். அவை தனிநபர் மற்றும் உலக நலன்கள் அனைத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்டவை. இத்தகைய சனாதன தர்மத்தின் சிறப்பு, வைதீக நுணுக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், கலாசாரங்களைப் பற்றிய விளக்கங்களை இந்நூலாசிரியர், தமிழில் பல […]

Read more

சங்கர காவியம்

சங்கர காவியம், டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், 39, நந்திகோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி 2, விலை 250ரூ. காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியாரின் ஆன்மிக வாழ்க்கையின் சில பகுதிகள் நாடக வடிவில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுப்பில் அவர் எத்தனை பெரும் அருளாளர் என்பதும், பாமரனுக்கும் இரங்கும் கருணாமூர்த்தி என்பதும் நெஞ்சில் பரவசமாய் பதிந்து போகின்றன. எத்தனை துயர நிலையில் ஒருவர் வந்தாலும் அவரை பசியமரத்தி ஆற்றுப்படுத்தும் மகானின் கருணை உள்ளம் பக்தர்களை எந்தெந்த விதமாய் குளிர்வித்தது என்பதையும், நடுநடுவே சொல்லிப் போயிருப்பது நெஞ்சார்ந்த சிலிர்ப்பு. […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, உள்ளத்தில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   Guru Vijayeendra The Invinvible Saint(part 1). தமிழ்மூலம்-அம்மன் சத்தியநாதன், ஆங்கிலத்தில்-கே. லஷ்மண், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 290ரூ. […]

Read more

துக்காராம்

துக்காராம், பால சந்திரா நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே. நாகு, சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ. மகாராஷ்டிரா மாநிலத்தில், பக்தி நெறியை பரப்பியவர்களில் மிக முக்கியமானவர் துக்காராம். 13ம் நூற்றாண்டில் தோன்றிய வரகரி இயக்கத்தின் மிக முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர். ஜாதிப் பாகுபாடுகளை ஏற்காமல், எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை கொண்டது இந்த இயக்கம். அப்போது மித மிஞ்சிய ஆணவப் போக்கோடு இருந்த பிராமணீயத்தை சரிக்கட்டும் மாற்றுச் சக்தியாய் இயங்கிய வரகரி இயக்கத்தை லட்சக்கணக்கான மக்களிடையே பரப்பியவர் […]

Read more

மனநலம் தெரிந்து கொள்வோம்

மனநலம் தெரிந்து கொள்வோம், டாக்டர் சி. பன்னீர்செல்வன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ. மனிதனுக்கு ஏற்படும் மனநோய்கள், அவற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை கொண்ட நூல். நூலின் ஆசிரியர் மன நல மருத்துவர் என்பதால் மனநோயாளிகளை கையாள வேண்டிய வழிமுறைகளையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.   —-   காற்றுவாக்கிலே, கவிஞர் காற்று (எ) கலைவாணி கிருட்டிணன், கீதா பதிப்பகம், அஞ்சல்பெட்டி 2985, டாடாபாத் அஞ்சல், கோவை 12, விலை […]

Read more

சமயம் கடந்த வாழ்க்கை

சமயம் கடந்த வாழ்க்கை, வீ.ப. சதாசிவம், தி.சென்டர் பார் ரிசர்ச் இன் செக்குலர் தாட்ஸ் அண்ட் ஐடியாஸ், ஆர் 70, கோவைபுதூர், கோவை 641042, விலை 100ரூ. அறிவுலகத்தில் அதிகமாகப் புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்று மதச்சார்பின்மை. இது நமது அரசியலமைப்புச் சட்டநூலின் முதுகெலும்பாக உள்ளது. இதன் அடிப்படையில் சமயம் கடந்த வாழ்க்கை என்ற தலைப்பில் ஆசிரியர் வீ.ப. சதாசிவம் எழுதியுள்ள புத்தகம் இது. நவீன வாழ்க்கையில் மதம் என்பதின் தேவை அற்றுவிட்டது என்பதைத் தனது தர்க்கங்கள் வாயிலாக முன்வைக்கிறார் ஆசிரியர்.   —-   […]

Read more
1 102 103 104 105 106 128