இறுதிச் சொற்பொழிவு

இறுதிச் சொற்பொழிவு, மஞ்சுள் பப்ளிக் ஹவுஸ், 7/32, அன்சாரி ரோடு, தர்யாகஞ்ச், புதுடெல்லி 110002, விலை 199ரூ. அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர் ரேண்டி பாஷ் அழகான மனைவி, 3 இளம் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவருக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது திடீரென தெரியவருகிறது. வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் ரேண்டிபாஷ் துவண்டுவிட வில்லை. தன் மனைவி குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து செய்யக்கூடியவற்றை குறைந்த நாட்களிலேயே செய்ய முனைகிறார். இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் இறுதிச் சொற்பொழிவு ஆற்ற அவருக்கு […]

Read more

விஸ்வபிரம புராணம்

விஸ்வபிரம புராணம், வி. சுப்பிரமணியன் ஆச்சாரி, நிர்வாக டிரஸ்டி, பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஆசாரியர் பவுண்டேஷன், 70, முதல்தளம், 1, பி, கிராஸ், இரண்டாவது மெயின்ரோடு, 5வது பிளாக், கிருஷ்ணா லே அவுட், பானசங்கரி, 3வது ஸ்டேஜ், பெங்களூரு 560085, விலை 650ரூ. வடமொழியில் புகழ் பெற்ற நூல் விஸ்வபிரம புராணம். இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 1894ம் ஆண்டில் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது. இப்போது 119 ஆண்டுகளுககுப் பிறகு மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வைதீகர்களுக்கும், புரோகிதர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது. நன்றி: தினத்தந்தி, 9/10/13.   […]

Read more

108 திவ்ய தேசம் திருயாத்திரை

108 திவ்ய தேசம் திருயாத்திரை, சூலூர் கலைப்பித்தன், கலைப்பித்தன் இலக்கிய, இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, 33, பழனியப்பத் தேவர் சந்து, சூலூர் அஞ்சல், கோயமுத்தூர் 641402, விலை 300ரூ. இந்தியாவில் உள்ள 108 திவ்ய தேசங்கள் பற்றிய அருமையான குறிப்புகளுடன் இந்த கோவில்கள் அமைந்து இருக்கும் ஒவ்வொரு ஊருக்கும் எப்படி செல்வது? எங்கே தங்குவது? போன்ற பயனுள்ள குறிப்புகளையும் தாங்கி இருக்கும் இந்த புத்தகம் 108 திவ்ய தேச யாத்திரை செல்ல முடியாதவர்களுக்கும், செல்ல விரும்புகிறவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி, […]

Read more

இவர்கள் நோக்கில் கம்பன்

இவர்கள் நோக்கில் கம்பன், சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக். 352, விலை 200ரூ. மதுரை கம்பன் கழகம், 2012ல் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவுகளின் சாரம் இந்நூல். கம்பனும் திருமூலரும் (சொ.சொ.மீ. சுந்தரம்), கம்பனில் காலமும் கணக்கும் (தெ. ஞானசுந்தரம்), கம்பனும் வில்லியும் (ம.பெ. சீனிவாசன்), கம்ப ராமாயணமும் நாலடியாரும் (இளசை சுந்தரம்), கம்பனில் அங்கதன் (கு. ராமமூர்த்தி), கம்பனும் பைபிளும் (எஸ். ராஜா), கம்பனும் உரையாசிரியர்களும் (மு. அருணகிரி), கம்பரும் கிறிஸ்தவக் கம்பரும் […]

Read more

கடவுளின் நிறம் வெண்மை

கடவுளின் நிறம் வெண்மை, 52 புனிதர்களின் சரிதம், எஸ்.கே.முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 336, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-391-3.html நமது இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்களில் எண்ணற்ற புனிதர்கள் உலவுகின்றனர். அவர்களில் துருவன்,பிரகலாதன், நாரதர் போன்ற பக்த மகாரத்தினங்களை அனைவரும் அறிவர். அதே சமயம் புராணங்களில் எதிர்மறை நாயகர்களாக இருந்த பலரும்கூட, இறை பக்தியில் சளைத்தவர்களல்ல. அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல் எனலாம். மது கைடபர், சூரபதுமன், மாருசன், சகுனி, கஜமுகன் […]

Read more

நோய்மனம்

நோய்மனம், கோவி. பால. முருகு, தமிழ்வேந்தன் பதிப்பகம், வடலூர் 607303, பக். 112, விலை 70ரூ. கண்ணில் பட்டு கருத்தில் பதிந்து மனதைவிட்டு அகலாத கருத்தை ஏற்படுத்துபவையே சிறந்த சிறுகதைகள் என்பர் இலக்கிய ஆர்வலர். நூலாசிரியர் நல்ல சிறுகதைகளைப் படைக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால், அதே சமயம், கருத்துத் திணிப்பின் களமாக சிறுகதையை அவர் பயன்படுத்துகிறாரோ என்ற எண்ணத்தை படிப்போர் மனதில் ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. திருப்பம் என்ற முதல் சிறுகதையில் தொடங்கி வேட்கை வரையில் கதையை அவசர அவசரமாகக் கூறுவதுபோல இருக்கிறது. கதையைப் […]

Read more

உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் […]

Read more

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள், எஸ். சாய்ராமன், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 200, விலை 100ரூ. இந்நூலில் உள்ள அருணகிரிப் புராணமும் அருணாசலப் புராணமும் என்ற கட்டுரை, அருணாசல தல வரலாறு குறித்து சிறப்பாக விவரிக்கிறது. வானவரும் வாசகரும் என்ற கட்டுரையில் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடல் ரசிக்கும்படி உள்ளது. அந்தந்தக் கால மக்களின் நாட்டின் நாகரிகம், பண்பாடு, மரபு இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு வற்றாத நீரோட்டமாகப் பாய்ந்து இக்கால மக்களையும் வளப்படுத்துவதுதான் இலக்கியம். ஆதலின் இலக்கியம் காலத்தால் அழியாமல் என்றும் நிலைபெற்றிருக்கும் […]

Read more

நீங்களும் ஜெயிக்கலாம்

நீங்களும் ஜெயிக்கலாம், ரமணன், புதிய தலைமுறை பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 120, விலை 120ரூ. நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கிறீர்கள். அதுதான் உங்கள் கனவு. லட்சியம். வாழ்க்கை. ஆனால் அதை எப்படித் தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது? என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்விக்கு விடைதான் இந்த நூல். ஒரு தொழிலைத் தொடங்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். தொடங்கிய தொழிலை எப்படி வளர்த்தெடுப்பது என்பது போன்ற வெற்றியின் ரகசியங்களை உங்களுக்கு சொல்லி ஜெயிக்க வைக்கும் முயற்சியே இந்நூல்.   —- […]

Read more

அழகைத்தேடி

அழகைத்தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ. அழகான பெண்களை வயப்படுத்தி, ஆபாச வீடியோ எடுத்து சட்டத்துக்குப் புறம்பாய் செயல்படும் ஒரு சிறு கூட்டம். அதற்குத் துணை போகும் போலீஸ், வசதியை வைத்து அழகிய பெண்ணை மடக்க நினைக்கும் ராஜாதிராஜன், அவன் வலையில் சிக்காத அழகான வயசுப் பொண்ணு சூர்யா. பலான பிசினஸ் பண்ணும் தண்டபாணி இவர்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைதான் என்றாலும், […]

Read more
1 99 100 101 102 103 128