கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவரது கவிதை வரிகளில் மின்சாரம் எடுக்கலாம். அந்த முயற்சியில் புதுவை ஆய்வு அறிஞர் அறிவு நம்பி புதுமை தோய்ந்து, பத்து கோணங்களில் பாரதியாரை பதிவு செய்துள்ளார். பாரதி உருவாக்கிய பாராட்டுப் பரம்பரை, புதுக்கவிதை முதலில் தந்தது, பாரதியின் பேனா புதுமையை நிரப்பி சிறுகதை புனைந்து, வேதத்தை புதுக்கியது, சோதனை முயல்வுகள் போன்ற கருத்துப் புரட்சியால், […]

Read more

மகாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மகாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, பக். 552, விலை 350ரூ. மகாபாரதத்தின் நீள அகலங்களில் ஆழங்கால் பதித்துள்ள நூலாசிரியர், 40 அத்தியாயங்களில், இந்தக் காப்பியத்தின் இதிகாசத்தின் அற்புதச் சொல்லாடங்களை, கருத்துச் செல்வங்களை எழுதியிருக்கிறார். படிப்பதற்கு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய மகாபாரதத்தில் தர்ம-அதர்ம யுத்தம் கவனத்தை கவரக்கூடியது. படிக்கப் படிக்க இனிக்கும் மகாபாரத நூல் வரிசையில், இந்தப் புத்தகத்திற்கு முன்னுரிமை வழங்கலாம். குறிப்பாக சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழிலேயே எழுதி அதற்கான விளக்கம், விரிவுரையே பழகு தமிழில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதிகாசங்கள் மீது நூலாசிரியருக்கு உள்ள ஈடுபாடும், […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர் விருது பெற்றவர் இந்நூலாசிரியர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் தொடர்பான, 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இணையம் வழியாக தமிழ் பரப்பும் முனைப்பு மிக்கவர். ஆய்வு நெறிகளில் ஆர்வமும், ஊக்மம் கொண்டவர் என்பதை இக்கட்டுரைகள் உறுதி செய்கின்றன. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்குகளில், கட்டுரைகள் படைத்தவராதலின் நூலின் தரம் உயர்ந்துள்ளது. தமிழர்களின் பண்டைக்காலத்து ஆவணமாகப் பட்டினப்பாலை விளங்குவதை விரித்தெழுதியுள்ளார். ஈழத்து அறிஞர்கள் ஆற்றிய […]

Read more

தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?

தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?, மாரிக்கனி, ஒருலகம் பதிப்பகம், 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 60ரூ. தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதற்குக் காரணம் என்ன? தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் அதற்கு என்ன வழி என்று விவரிக்கிறார் ஆசிரியர்.   —-   வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ160. ஔரங்கஜேப் (அவுரங்கசீப்) எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழிகள் விழக்காரணம் என்ன […]

Read more

கம்பன் சில தரிசனங்கள்

கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம் 626117, பக். 136, விலை 110ரூ. சிவகாசி கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் மு. ராமச்சந்திரன் மிகச்சிறந்த பட்டிமன்ற நாவரசர். கம்பராமாயணக் கடலில் மூழ்கி பத்து முத்தான கட்டுரைகளை எழுதி, முன்வைத்துள்ளார். அனுமனும், இலக்குவனும், ராமனுக்கு செய்த பயன் கருதாத தொண்டு, முதலில் நம்மை வரவேற்கிறது. தம்பியர் அறுவர் கட்டுரையில் குகன் அன்பினன் பெருமாள், சுக்ரீவன் அரசியலாளர் மகாராஜா, […]

Read more

பத்துப்பாட்டு-பொருளடைவு

பத்துப்பாட்டு-பொருளடைவு, முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 552, விலை 350ரூ. உலக மொழிகள் அறியாத, திணைமரபு எனும் தனி உயர் தகுதிகளோ, இயல்பாகப் பெற்றுள்ளது தமிழ் மொழி ஒன்றுதானே. பழந்தமிழ் படைப்பிலக்கியங்களில் பத்துப்பாட்டு குறிப்பிடத்தக்க பனுவலாய்ப் போற்றப்பெறும் சிறப்புடையது. ஆய்வுக்கும் முற்றாக முழுமையாக தெளிவாக அறிந்து மகிழ்வதற்கும் அவ்வழியில் மேற்கொண்டு தொடர்வதற்கும், பல வகையான அடிப்படைக் கருவி நூல்கள் தேவைப்படுகின்றன. பழங்காலத்தார்க்கு வாய்க்காத, வளர்ச்சி விளக்கங்களை, நிகழ்காலத்தாரும், வருங்காலத்தாரும் எளிதில் கண்டு, இன்பம் காண வேண்டும் என்ற உயர் நோக்கில் உருவாக்கப் […]

Read more

தமிழும் நானும் (பகுதி 5)

தமிழும் நானும் (பகுதி 5), ஜி. ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல், சமயம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகிய நான்கு ஆய்வுக் களங்களின் வழி, பல மாநாடுகளையும் நூல்களையும் வெளியிட்டவர் ஆசிரியர். ஒப்பீட்டு சமய ஆய்வில் அதிக ஈடுபாடு கொண்டவர். மலேசியிவில் மூன்றாவது முருகன் மாநாடு, தாய்லாந்து பாங்காக் நகரில் மகாசூரி பல்கலைக்கழகத்தில் தேரவாத பவுத்தர் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்ற அனுபவம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பிறப்பால், வளர்ப்பால், வாழ்வால் நான் கிறித்தவன். […]

Read more

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ் மொழி – புலவர் அடியன் மணிவாசகனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக், 116, விலை 90ரூ. தமிழ் மொழியின் தொன்மை, அதன் வளம் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை தமிழனும் தன் அடையாளமான தாய்த் தமிழில் பேசுகின்றானா? எழுதுகின்றனானா? இல்லையே என கோமும் கொள்கிறது. தமிழின் தமிழோடு வாழ்கிறானா என்பதே இப்புத்தகத்தின் உபதலைப்பு. 11 அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் வள்ளலார் ஆராய்ந்த தமிழொளி என்ற 2வது அத்தியத்தில் தமிழ் எண்ணிக்கையளவில் […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 418, விலை ரூ.450 பல்வேறு இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் 80 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகளின் களங்கள் கிராமத்து மண்ணின் மீதே என்றாலும் நகர்ப்புறங்களின் அனுபவச் சாயல்களும் சில கதைகளில் உண்டு. அகல், அவள் மற்றம் அம்மா சிறுகதையில் வரும் காங்சனாவின் பண்பு யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டது. வழிகாட்டும் ஒளியாகக் காஞ்சனா இருப்பதையும் தனது மனமே தவறாகச் சஞ்சலப்பட்டதையும் அழகிரி உணர்வதாகக் காட்டியிருக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது. ஆட்டோ சிறுகதை நகர்ப்புற, நடுத்தரப் […]

Read more
1 64 65 66 67 68 84