தொல்லியல் புதையல்

தொல்லியல் புதையல், நடன. காசிநாதன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 160, விலை 120ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-0.html தமிழ்நாடு அரசு தொல்லியல்  துறைக் காலாண்டிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் வெளியான, தொல்லியல் தொடர்பான 18 கட்டுரைகளின் தொகுப்பு. மோத்தக்கல் என்ற ஊரின் தென்கிழக்கில் உள்ள மூங்கில் காட்டில் கிடைத்த வட்டெழுத்து பொறிக்கப்பட்ட இரு நடுகற்கள், பல்லவ மன்னன் முதலாம் மசேந்திரவர்மனின் காலத்தைச் சேர்ந்தவை. அதாவது இன்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எழுதபப் பெற்றவை. இவை சோழன் […]

Read more

நீங்களும் சிகரம் தொடலாம்

நீங்களும் சிகரம் தொடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், 9, ஜி. ஏ. ரோடு, சென்னை 21, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-9.html அனைத்து மனிதனும் தலைசிறந்த மனிதனாக உருவாக வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையே ஆதாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், உழைப்பு, வாய்ப்பு, நிர்வாகத்திறன், மனித நேயம் உட்பட 35 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வீழ்வதில் தவறில்லை. வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. மண்ணில் விழுந்த விதை தண்ணீர் கிடைத்ததும் முளைப்பதுபோல, உங்கள் […]

Read more

மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு

மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-4.html ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை 8ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் சமுதாய அரசியல் நிலைமைகள் எப்படி இருந்தன என்பதை அறிவதற்கு உதவும் நூல். அதில் கூறப்படும் புத்த மத கருத்துகள். தமிழ்நாட்டின் நிலை, மக்களின் பழக்க வழக்கங்கள், இலக்கியச் சுவை போன்றவற்றை ஆசிரியர் சாமிசிதம்பரனார் ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/2/2014. […]

Read more

புனிதப் பயணம்

புனிதப் பயணம், துளசி புக்ஸ், 7, கே.எம்.மான்ஷி மார்க், கிர்கான் சவுட்டி, மும்பை 7, விலை 225ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-5.html அமெரிக்க சுவாமியான ராதாநாத், சுவாமியின் வாழ்க்கை வரலாற்று நூல். ரிச்சர்ட் லோவின் என்ற இளம் சாதகனாக ஆன்மிகத்தைத் தேடி சிகாகோவின் நகர்ப்புற பகுதியிலிருந்து புறப்பட்டு இமயமலைக்குச் சென்று, பின்னர் ஒரு புகழ் பெற்ற ஆன்மிக வழிகாட்டியாக மாறும் வரை தான் பெற்ற அனுபவங்களை இந்நூலில் விவரிக்கிறார் ராதாநாத் சுவாமி. அவர் தான் மேற்கொண்ட சாகசங்களையும், ஆன்மிகத் […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில் ராஜேந்திரன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 328, விலை 250ரூ. இன்றைய குழந்தைகளிடம் கடவுள் கண்முன் தோன்றி வரம்கேள் என்று சொன்னால் இந்த உலகத்துல இனிமே பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் அளவுக்கு பள்ளிகள் குழந்தைகளைப் படுத்தி எடுக்கின்றன. விளையாட்டும் குறும்பும் நிறைந்த குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் தான் உலகில் இருக்கும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள். ‘ […]

Read more

மண் கசந்தால் மானுடமே அழியும்

மண் கசந்தால் மானுடமே அழியும், பி. தயாளன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 86, விலை 60ரூ. நீர், நிலம், காற்று என அனைத்தையும் நாம் மாசுபட வைத்துவிட்டோம். அதனால் மழை தரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன. உணவு தரும் பயிர்கள் இல்லாமல் போகின்றன. ஆலைகளின் கழிவு நீரால், நீர் நிலைகள் மாசடைந்து மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் மாசடைய வைக்கிறது. வளமான, அழகான, இனிமையான, சத்தான மண்ணைக் கெடுத்து, வருங்கால இனத்தையே கெடுத்து வருகிறான் மனிதன். நமது […]

Read more

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு, ரேமண்ட் கார்வர், தமிழில் செங்கதிர், எம். கோபாலகிருஷ்ணன், க. மோகனரங்கன், விஜயராகவன் வெளியீடு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் யதார்த்தவாத சிறுகதை மரபை மீட்டவர். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தமிழ்மொழி பெயர்ப்பே வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யதார்த்தவாதம் என்பது இன்னும் வீரியமான கதை சொல்லல் விதமாகவே உள்ளது என்பதை […]

Read more

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும், மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 144, விலை 80ரூ. தாயுமானவர் பாடிய பாடல்கள் அவர் பெயராலே தாயுமானவர் பாடல்கள்என வழங்குவதை போலவே வேதாத்திரி மகரிஷியின் பாடல்கள் உரைகள் எல்லாம், வேதாத்திரியம் என்று அவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. இருவருமே குரு அருள் தேவை என்று கூறினர். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற தாரக மந்திரத்தை தந்தவர் மகரிஷி. உடலோம்பல் இறை […]

Read more

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், பக். 143, விலை 75ரூ. கடவுளுக்குத் தெரியாமல் உலகத்தில் எதுவும் நடக்க முடியாது. அதுபோல இணையத்தில் உள்ள ரகசியங்களும் தெரியாமல் இருக்க முடியாது. எனவேதான், வாழ்வின் அந்தரங்க உறவுகள் இணையத்தில் பகிரங்கம் ஆகிவிட்டன. இணையத்தில் புகுந்து ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் இணையற்ற துப்பறியும் மேதை ஆஸ்திரேலியர் ஜுலியன் அசாஞ்சே. இவர் தன் விக்கிலீக்ஸ் மூலம் பல நாட்டு ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தி அசரவைத்தார். கம்ப்யூட்டர் மூலம் சமூக அவலங்களை, லஞ்ச ஊழல்களை, அடக்குமுறைகளை […]

Read more

திராவிடத் தெய்வம் கண்ணகி

திராவிடத் தெய்வம் கண்ணகி, தொகுப்பாசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 926, விலை 700ரூ. ஒற்றைச் சிலம்பு கொண்டு மன்னனிடம் நீதி கேட்டு வாதாடி, மதுரையைப் பற்றி எரியச் செய்தாள் கண்ணகி. அவளது சிலம்பாலும், சினத்தாலும் உருவான சிலப்பதிகாரம் திராவிட இதிகாசமாகப் போற்றப்படுகிறது. கண்ணகி திராவிடத் தெய்வமாக வணங்கப்படுகிறாள். வீரபத்தினி, நடுகல், தாய்த் தெய்வம் போன்ற முன்னோர் வழிபாடுகள் திராவிட வழிபாடுகளாக விளங்கி வருகின்றன. கண்ணகி வழிபாடு திராவிட மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒன்றாகவும், ஆரம்பகாலம் தொட்டே வளர்ந்து வந்த […]

Read more
1 62 63 64 65 66 84