ஸ்ரீ ரமண மகரிஷி

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, விலை 160ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-512-0.html பாலகுமாரனின் கவித்துவ நடையில் வெளிவந்துள்ள இந்த நூலைப் படிக்கும்போது, இன்னும் சிலர் மீது பொறாமை உண்டாகிறது. வேங்கடராமனிடம் இரண்டரை அணாதான் இருக்கிறது என்று தெரிந்தபோது, சாப்பாட்டுக்கான விலை இரண்டு அணாவைப் பெற்றக் கொள்ளாமல் வேண்டாம், அந்த இரண்டனாவை நீயே வைத்துக்கொள் என்று சொன்ன புண்யாத்மாவான விழுப்புரம் ஹோட்டல்காரர்… கீழுர்க் கோவிலில், தம்முடைய பங்கான பட்டை சாதத்தை, அந்தச் சிறுவனுக்குத் […]

Read more

மணிமேகலை காட்டும் மனித வாழ்வு

மணிமேகலை காட்டும் மனித வாழ்வு, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-4.html ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை நூலுக்கு விரிவுரை-பதவுரை-உரைச்சுருக்கம்-பொழிப்புரை என்று பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், சாமி சிதம்பரனாரால் இந்நூல் சற்றே வித்தியாசமானதாக எழுதப்பட்டிருக்கிறது. மணிமேகலையின் மாண்பு என்ற தலைப்பில் துவங்கி, சிந்திக்க வேண்டியவை என 23 தலைப்போடு நூல் நிறைவடைகிறது. பசிக்கொடுமை (பக்.54), பிற மத வெறுப்பு (பக். 87), ஊழ்வினையும் பிறப்பும் […]

Read more

நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில், குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-4.html நீதிக்காகவும், நேர்மைக்காகவும், சுயஉரிமைக்காகக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வரும்போது நிமிர்ந்து நின்றால், அது வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என்ற உயர்ந்த கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். சுவாமி விவேகானந்தர், இந்திராகாந்தி, லெனின், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கை அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் நிமிர்ந்து நின்று சாதிக்க […]

Read more

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு, முனைவர் நித்யா அறவேந்தன், காவ்யா, பக். 176, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-7.html சங்க இலக்கியங்கள் இணையற்ற ஏற்றம் உடையவை. அவற்றுள் கபிலர் வழங்கியுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் ஊட்டியது. தமிழ் தாத்தா உ.வே.சா., 1889ல் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட இப்போது, 2011 வரை 35 பதிப்புகள் வெளிவந்துள்ளன. நூலாசிரியர் பதிப்பு வரலாற்றுடன் உரைகளின் போக்கு, உரை வேறுபாடுகள், உவமைகள், உலகாயுதச் சிந்தனைகள், குறிஞ்சிப் பாட்டின் மலர்கள், ஒப்பீடு, […]

Read more

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர், எஸ். ராஜகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக். 176, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-862-4.html மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூரார் பி. ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாக, எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். இரண்டாடுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், இன்றளவும் ஓமந்தூராரின் நிர்வாகத்திறமை போற்றப்படுகிறது. அதனை பல சான்றுகளோடு விளக்குகிறார். நிர்வாக பயிற்சி ஏதும் இல்லாது, ஆட்சியில் அமர்ந்து அரிய சாதனை படைத்த ஓமந்தூராரை, நேரு […]

Read more

திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் ஆர். நாராயணன், பூங்கொடி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-432-4.html திருக்குறளைப் பலர் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கின்றனர். இந்நூலாசிரியர், திருக்குறளின் அதிகாரங்களிலிருந்து உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றின் சிறப்பான இயல்புகளை திருக்குறளில் இயற்கை, திருக்குறளில் தாவரம், திருக்குறளில் விலங்குகள் என்னும் தலைப்புகளில் விளக்கியிருப்பது மிகவும் புதுமையானது. இந்நூலைப் படித்துவிட்டு, மீண்டும் திருக்குறளைப் படிக்கும் தமிழன்பர்கள் திருக்குறளில் புதியதொரு இலக்கிய இன்பத்தை அனுபவிப்பர் என்பது நிச்சயம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், […]

Read more

ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை

ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை, பூங்குன்றம் நா.க.ராமசாமி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 128, விலை 50ரூ. நூலாசிரியர் சைவத் திரு நா.க.ராமசாமி, சைவ சமய சாத்திரங்களில் ஆழப்புழமை நிறைந்த பெருமகனார். மூத்த சைவ ஆதினமான திருவாவடுதுறை திருமகா சன்னிதானத்தின் அருளாசியை முழுமையாக கைவரப் பெற்ற அறிஞர். ஆன்மிகம் அறிவோம் என்ற இவரது நூலில் சைவ சமய உட்கருத்துக்களை கேள்வி பதில் வாயிலாக மிக அருமையாக எளிய தமிழில், நூலாகத் தந்துள்ளார். முகப்பு என்ற தலைப்பிட்டுத் துவங்கி முடிவு என்ற தலைப்போடு, 250 […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 182, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-212-1.html மயில், குயில், குருவி, கிளி, புறா, காகம், ஆந்தை, மரங்கொத்தி, உள்ளான், முக்குளிப்பான் என தமிழகத்தில் அதிகம் காணப்படுகிற 328 பறவைகளைப் பற்றிய நூல். அவற்றின் உடல் அமைப்பு, நிறம், குரல், குணம், உணவு, வாழுமிடம், இனப்பெருக்க காலம், கூடுகள், முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்கள் கொட்டிக் கிடக்கிற அரிய நூல். குழந்தைகள், பள்ளி, கல்லூரி […]

Read more

கிராமத்து ராட்டினம்

கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 118. சமகாலப் பிரச்சினைகளின் கலை வடிவம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-1.html சிறுகதைகள் அருகிவரும் சூழலில் ஜி. மீனாட்சி பெயரைப் புதிதாக அறிய நேர்த்து. நல்ல தமிழில் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கதைச் கருக்கள் எளிமையானவை. மிக நுட்பமான விஷயங்களைப் பேச அவ்வளவாக சிரமமற்ற சம்பவங்களை அவர் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. மாறியிருக்கிற […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்)

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்), சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி., யுனியவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை-முதல் பகுதி ரூ. 190, இரண்டாம் பகுதி-ரூ. 225. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html இந்நூலாசிரியர், கி.பி. 695ல் முஹம்மத் பின் காஸிம் என்பவர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தது முதல், கி.பி. 1859ல் கடைசி மன்னர் பஹதுர்ஷா ஆண்டது வரையிலான அனைத்து முஸ்லிம் மன்னர்களையும், அவர்களது ஆட்சி முறைகளையும் பற்றி இரண்டு நூல்களில் சுருக்கமாகத் தொகுத்துள்ளார். […]

Read more
1 61 62 63 64 65 84