ஜெயகாந்தன் சிறுகதையில் பெண்

ஜெயகாந்தன் சிறுகதையில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், 1603, ஆரோக்கிய நகர் ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 613006, விலை 175ரூ. ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகளில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். பெண்களும் – குடும்பம், ஆண்-பெண் உறவுநிலை, பெண் தொழிலாளர் நிலை, மரபு வழிப்பட்ட பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் உள்ளிட்டவை மூலம் சிறுகதைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நூல் மூலம் ஜெயகாந்தனின் பெரும்பாலான […]

Read more

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை, ஆர். நல்லகண்ணு, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21/10, லோகநாதன் நகர், 2ஆம் தெரு, சூளைமேடு, சென்னை 24, பக். 152, விலை 100ரூ. நஞ்சையும் சரி புஞ்சையும் சரி நம்பி இருப்பது நீரைத்தான். அதை முறைப்படுத்தி வழங்கினாலே இந்நாட்டில் வறுமை இருக்காது. அதற்காகத்தான் கங்கை-காவிரி இணைப்பு. தென்னக நதிகள் இணைப்பு ஆகியவற்றின் அவசியத்தை முன் வைக்கிறார் நூலாசிரியர். வெள்ளத்தாலும் புயலாலும் மக்கள் அடைந்த துன்பங்களையும் அவை வறட்சிக்கு இட்டுச் சென்ற கொடுமைகளையும் விளக்கி அதிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லித் […]

Read more

அரசு பதில்கள்

அரசு பதில்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-4.html கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், அறிவியல், உலக அறிவு, நாடகம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று எல்லாமும் அடங்கிய ஒரு கருத்துப் பெட்டகம்தான் அரசு பதில்கள். ஒவ்வொரு பதிலிலும் வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவதுபோல ஒரு விமர்சனம் இருக்கும். எல்லா பதிலும் ஆழ்ந்த பட்டறிவும் ஒரு தேடலும் இருக்கும். வயது வித்தியாசம் இன்றி ரசிக்க முடியும். இந்தியாவின் […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. இனம், மொழி, பண்பாட்டின் ஆணிவேர்களை அலசி ஆராய உதவுபவை இலக்கியங்களும் கல்வெட்டுகளும், நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றில் கல்வெட்டுகள், கால ஓட்டத்தில் தேய்ந்துபோனாலும் உள்ளதை உள்ளபடி சொல்பவை. இலக்கிய வளர்ச்சியை அறிந்துகொள்ள கல்வெட்டுகள் உதவுவதால், கல்வெட்டு கற்பது ஒரு கலையாகவே போற்றப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் துறையாக கல்வெட்டியல் மாறியுள்ளது. அதைக் கற்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த […]

Read more

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5, விண்வெளித் தொழில் நுட்பம் செயற்கைக்கோள்கள், நெல்லை சு. முத்து, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை 5, பக். 358, விலை 300ரூ. தமிழில் மிக அபூர்வமாகவே நல்ல தரமான நூல்கள் வெளியாகின்றன. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள இந்த நூல் அப்படிப்பட்டதாகும். விண்வெளியில் உள்ள நிலைமைகள், ராக்கெட் தோன்றிய வரலாறு, ராக்கெட் வடிவமைப்பு, எரிபொருட்கள், ராக்கெட் தளம், செயற்கைகோள்கள், விண்கலன்கள் என்று தொடங்கி எதிர்கால ராக்கெட் எஞ்சின்கள் வரை அனைத்தும் இந்நூலில் […]

Read more

இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம்

இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம், பகுதி 2, இரா. சாவித்திரி, சக்தி பதிப்பகம், 197, புட்பம் காலனி, அருளானந்த நகர், தஞ்சாவூர் 613007, பக். 402, விலை 200ரூ. தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக உள்ளது திறனாய்வியல். இரண்டாவது தொகுதியான இதில், தமிழ்த் திறனாய்வு வரலாறு என்ற இயலில் நிகழ்கால திறனாய்வுப் போக்குகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு பற்றியும், இதழ்கள் வளர்த்த திறனாய்வு இயலில் எழுத்து, இலக்கிய வட்டம், கணையாழி, வானம்பாடி, கொல்லிப்பாவை, உயிர்மை ஆகிய இதழ்களின் திறானாய்வுப் […]

Read more

சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாக தெரியாது. கடலாகத் தெரியும் என்கிறார் நூல் ஆசிரியர் பேராசிரியர் தொ. பரமசிவம். அது உண்மைதான். அத்தனை தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தொ. பரமசிவம், சமயங்கள் தொடர்பான பேராசிரியர் சுந்தர் காளியுடன் உரையாடிய பகுதியும் […]

Read more

திரும்ப வராத கடந்த காலம்

திரும்ப வராத கடந்த காலம், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, பரத் பதிப்பகம் இந்த கதையில் வரும் கதாநாயகன் ஒரு கற்பனையாளன், ஏழையான பீட்டர்ஸ் பர்க், அறிவுத்திறம் மற்றம் உயர்ந்த ஆன்மிக தரம் உடையவன். தஸ்தயேவ்ஸ்கியின் மற்ற படைப்புகளில் வரும், பெரும்பாலான கதாநாயகர்களை போன்றே தன்னை சுற்றியுள்ள வாழ்க்கைக்கு தான் ஏற்றவனல்ல என்று நினைக்கிறான். சென்ற நூற்றாண்டின் மத்திய பகுதியை சேர்ந்த பழைய பாரம்பரிய ரஷ்யாவை குறிக்கும் வகையில் ஒரு பெரிய இரைச்சல் மிகுந்த, இருண்ட நகரை தஸ்தயேஸ்வ்கி தன் படைப்பில் வியத்தகு முறையில் சித்தரிக்கிறார். முதன் […]

Read more

சட்டமும் சாமானியனும்

சட்டமும் சாமானியனும், வக்கீல் ராபர்ட் சந்திரகுமார், இனியன் அதிதி பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 100ரூ. ஆசிரியர் மதுரை ஐகோர் கிளை வக்கீல். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகன், கல்வி, குழந்தை, பெண், திருநங்கை, பழங்குடியினர், தொழிலாளர், காவல்துறை அத்துமீறல், மரண தண்டனை, சட்டம், தண்ணீர், தமிழ் தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். கருத்தாழமிக்கதாக உள்ளது. சம்பந்தப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்கிறது. பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டத்தில் இளம் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் பற்றி ஒரு கட்டுரை, 1992ல் மோகினி ஜெயின், 1993ல் […]

Read more

சாகசப் பறவைகள்

சாகசப் பறவைகள், எஸ்ஸாரெஸ், அம்ருதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 35, பக். 138, விலை 90ரூ. To buy this Tamil book online –  www.nhm.in/shop/100-00-0001-918-6.html தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்த இந்தக் கதை புத்தகம் உருப்பெற்றிருக்கிறது. சிறுவர்களுக்கான கதை என்றாலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள், பெரும்பாலும் பெரியவர்களுக்குத்தான். ஆவலுடன் சாப்பிடச் செல்பவர்கள், டிரஸ்கோடு என்ற பெயரில் அவமானப்படுத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், வலுக்கட்டாயமாக கிரெடிட் கார்டுகள், அப்பாவிகளிடம் திணித்து, அவர்களை பாடுபடுத்தும் வங்கிகள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பொது ஜனங்களுக்கு துன்பம் விளைவிக்கும் […]

Read more
1 71 72 73 74 75 84