புத்தகம் போற்றுதும்

புத்தகம் போற்றுதும், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும் என்ற வரிசையில் தற்போது வித்தியாசமான தலைப்பான புத்தகம் போற்றுதும் என்ற தலைப்புடன் 50 நூல்கள் மற்றும் நாவல்களை நூலாசிரியர் விமர்சனங்களாக எழுதி தொகுத்துள்ளார். இதில் எழுத்தாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ. இறையன்பு எழுதிய அவ்வுலகம் என்ற நாவலை விமர்சனம் செய்யும்போது இறந்தவர்களின் நெற்றியின் மீது ஐந்து ரூபாய் நாணயம் என்ற மூடப்பழக்கத்தை, தனக்குரிய பாணியில் நூலாசிரியர் சாடியுள்ளதையும் சுவைப்பட விமர்சனம் செய்துள்ளார். எனக்குச் சாவு […]

Read more

தாதுமணல் கொள்ளை

தாதுமணல் கொள்ளை, முகிலன், ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம், விலை 160ரூ. இயற்கையின் கொடையை சுயநலச்சக்திகள் சூறையாடவதை அம்பலப்படுத்தும் ஆவணம் இது. தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலோரப் பகுதியில் இருக்கும் தாதுவளம், கடந்த 20 ஆண்டுகளாக கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. பேருக்கு அரசின் அனுமதியை வாங்கிகொண்டு பெருமளவு அள்ளி கணக்கில்லாத கோடிகளைக் கொண்டுபோய்விடுகிறார்கள். இவை அரசின் சொத்து, அதாவது நாட்டின் சொத்து. இன்னும் சொல்லப்போனால் மக்கள் சொத்து. ஆனால் இதனைத் தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி காக்கிச் சட்டைகள் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கம்பன் காப்பியத்தை, இதுவரையில் யாரும் தொட்டு பார்க்காத அளவில் பல ஆழமான கருத்து பெட்டகங்களை வெளியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் நூலாசிரியர் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். இவர் சட்டத்தை கரைத்து குடித்தவர் என்பதால், கம்பனில் சட்டமும், நீதியும், நீதிபரிபாலனமும் எந்த அளவில் இருந்திருக்கிறது? என்பதை முழுமையாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். நீதி, மனுநீதி போன்ற சட்டம் தொடர்பான கருத்துக்களையெல்லாம் ஆழமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். […]

Read more

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசிவாரியர், தமிழில் இரா. முருகவேள், நியூ ஸ்கீம் ரோடு, பக். 272, விலை 220ரூ. தூக்கு தண்டனைகளை நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ஒருவரின் அனுபவப் பதிவுகள் தூக்கிலிடுபவரின் குறிப்புகள் என்ற பெயரில் நூலாக வந்திருக்கிறது. ஜனார்த்தனன் பிள்ளை என்பவர் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகத் தூக்கிலிடுபவராகப் பணியாற்றியிருக்கிறார். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் மொத்தம் 117 மனிதர்களைத் தூக்கிலிட்டிருக்கிறார் இவர் நாகர்கோவிலில் வாழ்ந்த தமிழர். திருவிதாங்கூரில் பெண்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பது போன்ற ஆச்சரியமளிக்கும் செய்திகளும் இந்நூலில் ஆங்காங்கே […]

Read more

மோடி

மோடி, வெளிச்சங்களின் நிழலில், கதிரவன், சிற்றுளி வெளியிடு, சென்னை, விலை 25ரூ. மோடி முகமூடி அணிந்து வரும் இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். தமிழகக் கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதை விமர்சித்திருக்கும் இந்நூல், நாட்டில் இந்துத்துவக் கொள்கைகள் நிகழ்த்துப்போகும் அபாயங்கள் பற்றி எச்சரிக்கிறது. நன்றி: இந்தியா டுடே, 6/4/2014.   —- க்ரோஷம், ஜுடித் பெல், வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், பக். 280, விலை 160ரூ. உலகின் வளர்ந்த நாடுகள் எல்லாம் டபிள்யூ.டி.ஓ., எப்.டி.ஏ., என்.ஏ.எப்.டி.ஏ., போன்ற பல […]

Read more

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன். ஜெசி,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், விலை 200ரூ. சக மனிதனை ஓர் உயிராகக்கூட மதிக்காமல் நாகரிகச் சமூகமாக ஆகிக்கொண்டு இருக்கிறோம். சக மனிதனை எத்தகைய அநாகரிகமாக நடத்துகிறோம் என்பதை அம்பலப்படுத்தும் புத்தகம் இது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு 58 ஆண்டுகள் ஆன பிறகும் தீண்டாமை இருக்கிறது. வன்கொடுமை இருக்கிறது. பலாத்காரம் நடக்கிறது என்றால், வெறும் சட்டங்களால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதே […]

Read more

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர், சேனானி, காலச்சுவடு பதிப்பகம், பக். 215, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html கடந்த 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர். மொத்தம் 14 நாட்கள் அவர்களை தனது பிடியில் வீரப்பன் வைத்திருந்தான். அப்போது நடந்த சம்பவங்கள், சுவையான விறுவிறுப்பான மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்களை கடத்த வீரப்பன் திட்டமிட்டது, அதை கிருபாகரும் சேனானியும் கெடுத்தது, வீரப்பனின் உடன் இருந்த மாதேஷ், அன்புராஜ், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்டோர், […]

Read more

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-3.html கவியரசு கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் கவிதை இலக்கணத்துடன் அமைந்தவை. ஆழ்ந்த கருத்துகளுடன் கூடியவை. ஆயிரக்கணக்கான பாடல்களில் இருந்து, பக்தி, காதல், சோகம், தத்துவம், பல்சுவை என ஐந்து வகைப்பட்ட தலைப்பின் கீழ் வரும் பாடல்களைத் தேர்வு செய்து விளக்கி எழுதியிருக்கிறார் காவிரி மைந்தன். காலத்தை வென்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் கவியரசரின் பாடல்கள் பற்றி, விரிவான ஒரு பகுப்பாய்வை சுவைபட செய்திருக்கிறார் […]

Read more

நக்சல்பாரி முன்பும் பின்பும்

நக்சல்பாரி முன்பும் பின்பும், சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர் 15, விலை 350ரூ. இந்திய அரசியல் நகர்வில் இறுதியாக நடந்த அரசியல் எழுச்சி நக்சல்பாரி புரட்சி. ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் மக்கள் அடைவதற்கு மார்க்சியமும் லெனினியமும்தான் சரியான பாதை என்பதை உணர்ந்தது, அந்த எழுச்சிக்குப் பிறகுதான். இமயமலையின் அடிவாரத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றிய விவசாயிகளின் எழுச்சி, பல்வேறு மாநில எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் அசைத்துப் பார்த்தது. இந்தியா அப்படியே தலைகீழாக மாறிப் போய்விடவில்லைதான். […]

Read more

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன், ஜெசி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், நன்கொடை 200ரூ. தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்கள் இழிந்தோர், அடியோர், இழிசனர், இழிபிறப்பாளர், துடியர், பறையர், புலையன், புலைத்தி, வண்ணார், வெட்டியான் எனப் பேசுகின்றன. பறை அடித்து அறுவடை செய்தோரைக் கடைசியர் என்கிறது சங்ககாலப் பாடல். கி.மு. 170க்கும் 150க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட மநு தர்மம் இந்தியாவின் நால் வர்ண சமூகத்தில் புதிதாக 5வது பிரிவாகப் பஞ்சமர்களை உருவாக்கியது என்கிறார் அம்பேத்கர். ஆதாம் என்பவர் 1840ல் எழுதிய நூலில் […]

Read more
1 7 8 9 10 11 17