ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம், ஜேனஸ் கோச்சார்க், தமிழில் – தி.தனபால், பாரதி புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை, விலை 40ரூ. குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பே ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் என்னும் நூல். இந்நூலை தி. தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை […]

Read more

கீதாஞ்சலி

கீதாஞ்சலி, தாகூர், தமிழில் சி. ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 125ரூ. இரவீந்திரநாத் தாகூர் நோபல்பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு நூல். தேசம், மொழி, இன்பம், துன்பம், அன்பு, நட்பு, கருணை, ஆன்மா, ஆற்றாமை, காத்திருப்பு, மரணம் என வாழ்வின் அனுபவங்களை தாகூர் அளவிற்கு உணர்வுபூர்வமாக யாரும் எழுதிவிடமுடியாது என்பதற்கான சாட்சியே இக்கவிதைகள். வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து, வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு காத்திருக்கும் வரையில் விழிப்புணர்வு மிக்க கீதங்கள் இவை. இறுகிப்போன வயலை உழும் உழவன், வேர்வை சிந்தி கல்லுடைக்கும் தொழிலாளி, […]

Read more

அப்பா சிறுவனாக இருந்தபோது

அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழில் நா. முகமுது ஷெரிபு, மறுவடிவம் ஈஸ்வர சந்தான மூர்த்தி, புக்ஸ் ஃபார் சில்ரன். உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்குமா, எல்லாவற்றையும் சாப்பிடப் பிடிக்குமா? நிச்சயமாகப் பிடிக்காது இல்லையா? அப்படி ஒரு சிறுவன். தினசரி பிரெட்டைச் சாப்பிட மறுத்து, அதைத் தரையில் வீசி எறிகிறான். யார் சொல்லியும் அந்தச் சிறுவன் பிரெட்டைச் சாப்பிடவில்லை. கடைசியாக அடுத்த நாள் காலையில் இருந்து சிறுவனுக்கு பிரெட்டே தரப்படவில்லை. குளிர்பானங்களும் தரப்படவில்லை. இரவுச் சாப்பாடும் இல்லை. பிரெட் இல்லாமல் காலையில் சீஸ், மதியம் […]

Read more

குட்டி இளவரசன்

குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-207-9.html குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் தனித்தனிக் கோள்கள் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வீடு அளவுக்கே இருக்கும் கோள் ஒன்றிலிருந்து, தனது காதலி ரோஜாவுடன் சண்டையிட்டுப் புறப்படுகிறான் குட்டி இளவரசன். ஒவ்வொரு கோளாக ஆறு கோள்களில் ஆறு விதமான மனிதர்களைச் சந்தித்துவிட்டு ஏழாவதாகப் பூமிக்கு வருகிறான். விமானி ஒருவரைச் சந்திக்கிறான். பெரியவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை […]

Read more

கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ. ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- குறையொன்றுமில்லை, கவிஞர் […]

Read more

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம். பல நூற்றாண்டுகளாக கற்பதற்கு கடினமானதாக கருதப்பட்ட, இந்திய தத்துவ நூல்களை எளிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய புரிதலை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இந்த நூலிலுள்ள 28 தொடர் கட்டுரைகள், இந்திய மண்ணில் வேர்விட்டு வளர்ந்துள்ள தத்துவங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், பண்டைய மத்திய கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிட்டு, தத்துவங்களின் உண்மையான மதிப்பையும், தேவையையும் நமக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த நூல் சென்னை தரமணியில் செயல்படும் உலகத் […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more

பேசும் ஓவியம்

பேசும் ஓவியம், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கூடவே பயணிக்கும் கதை கதைகளுக்கு அபார சக்தி இருக்கிறது. கதைகளே வாசிப்பிற்கான தூண்டுதல். குழந்தைப் பருவத்தில் கதைகள் கேட்டு வளரும் குழந்தைகள் வளரும் பருவத்தில் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதை நாம் நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது எனலாம். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் வெளிவருகின்ற இச்சூழலில், தமிழில் வெளிவந்திருக்கும் பேசும் ஓவியம் வீட்டிலும், பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம். குழந்தை […]

Read more

வானம் என் வாசலில்

வானம் என் வாசலில், பா. கிருஷ்ணன், பாகி எழுத்துலகம், 76, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை 41, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-6.html தேடித் தேடி, சாலை, கனவுகள், விழியே போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதை சொற்கள் புத்தக வடிவில் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் அதனுடைய தொடர்புடைய புகைப்படமும் இடம்பெற்றிருப்பது சிறப்பாகும். நன்றி: தினத்தந்தி, 12/3/2014.   —– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது மாடி, உஷா […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில் ராஜேந்திரன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 328, விலை 250ரூ. இன்றைய குழந்தைகளிடம் கடவுள் கண்முன் தோன்றி வரம்கேள் என்று சொன்னால் இந்த உலகத்துல இனிமே பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் அளவுக்கு பள்ளிகள் குழந்தைகளைப் படுத்தி எடுக்கின்றன. விளையாட்டும் குறும்பும் நிறைந்த குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் தான் உலகில் இருக்கும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள். ‘ […]

Read more
1 9 10 11 12 13 16