கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?

கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?, குழந்தைகள் திரைப்படங்கள், ஸ்ரீரசா, கடவு வெளியீடு, விலை 100ரூ. நுண்ணிய உலகம் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் உண்மையில் குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல. பெரியவர்களுக்கும்தான். அதுபோன்ற 19 திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல். மதுரையில் தமிழ்நாடு குழந்தைகள் திரைப்பட இயக்கத்தின் சார்பாக 2014ஆம் ஆண்டு திரையிடப்பட்ட படங்களைப் பற்றி நூலாசிரியர் தீக்கதிர் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வாட்ஜ்தா என்ற சௌதி அரேபியாவில் உள்ள 11 வயது சிறுமியின் கனவுகளைச் சொல்லும் படமே பெண்ணியப்பார்வையிலும் பலவிஷயங்களைச் சொல்வதாக இருக்கிறது. சைக்கிள் ஓட்ட […]

Read more

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், மணிமேகலைப் பிரசுரம், விலை 185ரூ. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். சமூகத்தின் மீது சினிமா தாக்கம் ஏற்படுத்துவதையும், குறிப்பாக (வீதி) சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பெரிய நாயகம் ஜேசுதாஸ் எழுதியுள்ளார். சினிமா மூலம் கற்றுக்கொள்கின்ற சாதகமான நிலையையும், கலாச்சார சீரழிவு என்ற பாதகமான நிலையையும் அலசி ஆராய்ந்துள்ளார். நற்பயனளிக்கக் கூடிய கற்றல் சூழ்நிலையைச் சிறுவர்களுக்கு கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பதை முடிவாகக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   […]

Read more

வண்ண மலர்த் தோட்டம்

வண்ண மலர்த் தோட்டம், மா.பா. குருசாமி, காந்திய இலக்கிய சங்கம், பக். 116, விலை 50ரூ. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தவை கதைகள். அதனால் கதை புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன. கதை சொல்வோரும், எழுதுவோரும் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி, ‘வண்ண மலர்த்தோட்டம்’ தலைப்பில் புத்தகமாக்கியுள்ளார், முனைவர் மா.பா. குருசாமி. குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதுவது என்பது காற்றில் பறக்கும் பஞ்சுப் பொதிகளை கையில் பிடிப்பது போலத்தான். சுதந்திரமாய் சோலையில் சுற்றித்திரியும் வண்ணத்துப் பூச்சிகள்போல் வலம் வரும் குழந்தைகளுக்காக எழுத நினைப்போருக்கு எளிமையும், மனத்தூய்மையும், […]

Read more

புதுச்சேரி கோயில்கள்

புதுச்சேரி கோயில்கள், சங்கர் பதிப்பகம், விலை முதல்பாகம் 550ரூ, இரண்டாம் பாகம் 400ரூ. புதுச்சேரி, இந்திய பிரெஞ்சு கலாச்சாரத்தின் வியத்தகு வரலாற்றுப் பெட்டகம். சித்தர்கள், கவிஞர்கள், தேசாபிமானிகள் நிறைந்த ஊர். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றாலும் இங்கு கோயில் இல்லாத ஒரு தெருவைக்கூட காண முடியாது. அத்தகைய கோயில்களின் தலவரலாறு, தலபுராணச் செய்தி, ஆலயத்தின் தனிச் சிறப்புகள், திருவிழாக்கள், கோவில்களுக்குரிய பாடல்களை டாக்டர் சி.எஸ். முருகேசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் விநாயகர் கோயில்கள், முருகன் கோயில்கள், சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், அய்யனார் கோயில்கள், […]

Read more

சுந்தர வால்மீகி ராமாயணம்

சுந்தர வால்மீகி ராமாயணம், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 450ரூ. ராமாயணம், பாரத தேசத்தின் தலைசிறந்த இதிகாசங்களில் ஒன்று. ராமாயணம்தானே, எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனலாம். ஆனால் இந்நூல் முழுமையையும் படித்து முடித்தால், ராமாயண நிகழ்வுகளுக்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா, நிகழ்வுகளுக்குள் இத்துணை சூட்சுமங்களும், ரகசியங்களும் உள்ளனவா என்று அதிசயிக்கத் தோன்றும். ராமஜென்ப பூமியான அயோத்தியில் துவங்கி, சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த அசோக வனம் வரையில் உள்ள பெரும்பாலான ராமாயண நிகழ்விடங்களுக்குச் சென்று அந்தந்த சேத்ரங்களில் அந்தந்த தலங்களில், அந்தந்த தீர்த்தங்களில், அந்தந்த […]

Read more

லோன் உல்ப் அன்ட் கப்

லோன் உல்ப் அன்ட் கப், கசோ, டார்க் வின்ட் மங்காய் பதிப்பகம், ஓவியம் கொசாகி. கதை சொல்லும் ஓவியங்கள் ஜப்பானிய சாமுராய் இனத்தின், வீர தீரத்தை சித்தரிக்கும், லோன் உல்ப் அன்ட் கப் என்ற படக்கதை (காமிக்ஸ்) தொடரின், பிளாக் வின்ட் என்ற பகுதியை சமீபத்தில் படித்தேன். டார்க் வின்ட் மாங்காய் என்ற ஜப்பானிய பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் ஓவியங்களை, கொசாகி வரைந்துள்ளார். கதையை கசோ எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் உள்ள இந்தப் படக்கதை, மண் மற்றும் பெண்ணுக்காக சாமுராய் இனத்தினர் நடத்தும் வீர, […]

Read more

ஓளவை சொன்ன அமுத உரை

ஓளவை சொன்ன அமுத உரை, கமலா சுவாமிநாதன், வானதி பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. அவ்வையாரின் ஆத்திசூடியில், 77 முதல் 109 வரை, 33 தலைப்புகளில், முக்கனிச் சுவையில் கதைகளைச் சொல்கிறார் ஆசிரியர். பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், இணையதளங்களில் எழுதுபவராகவும் இருந்த அனுபவத்தால், வார்த்தைப் பூக்களைத் தூவி, வசந்த கால அனுபவமாக கதை சொல்கிறார். ஒரு கதையில், ராமலிங்க அடிகளாரின் தாயார், மருதம்மை என்று தவறாக தரப்பட்டுள்ளது. அவரது உண்மையான பெயர், சின்னம்மையார் அடிகளார், பிறந்த ஊர் மருதூர். அடுத்த பதிப்பில் திருத்தி […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், நூல் கிடைக்கும் இடம் கண்மணி கிரியேடிவ் வேவ்ஸ், சென்னை, தனிப் பிரதி 225ரூ, ஐந்து தொகுதிகளுக்கும் விலை 800ரூ. எழுத்தாளர் சவீதா எழுதிய 18 நாவல்கள், 5 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. காதல், கிரைம், குடும்பம் என்று எதை மையமாக வைத்து எழுதினாலும் கதைப்போக்கிலும், எழுத்து நடையிலும் வித்தியாசங்களை விதைப்பதால், கூறியது கூறல் என்ற குறைபாடு எழவில்லை. ஒவ்வொரு நாவலிலும் காணப்படும் நகைச்சுவை, நவீன உவமைகள், நடையில் வேகம், எழுத்தில் லாவகம் வாசகர்களை வசியப்படுத்தும். துள்ளலும், துடிப்பு மிகுந்த நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த […]

Read more

குழந்தைகளின் அற்புத உலகில்

குழந்தைகளின் அற்புத உலகில், உதயசங்கர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 116, விலை 90ரூ. குழந்தைகளின் உலகில் அத்து மீறி பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் நாம் வைத்திருக்கும் பொம்மைகள் அல்ல என்று குழந்தைகளின் சுதந்திரம், அறிவாற்றல், சிந்தனை வளம், பெரியவர்கள் அவர்களை அணுக வேண்டிய முறை ஆகியவற்றை அலசுகிறது இந்த நூல். பொதுவாகவே குழந்தைகளுக்குக் கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். அவர்களுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். அந்த கதைகள் அவர்கள் புரிந்துகொள்ளும்படியான சாகசக் கதைகளாகவும், மலர்கள், விலங்குகள், பறவைகள், எளிய விஞ்ஞானம் தொடர்புடைய […]

Read more

கற்கண்டுக் கதை கேளு

கற்கண்டுக் கதை கேளு, மதிஒளி, உத்திராடம் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 120ரூ. குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது. பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள் இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை. நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, […]

Read more
1 7 8 9 10 11 16