மாயக்கண்ணாடி

மாயக்கண்ணாடி, உதயசங்கர், நூல்வனம், குழந்தைகளுக்கான நேரடிக் கதைகள், மலையாள மொழிபெயர்ப்பைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உதயசங்கர் எழுதிய நேரடிக் கதைகளின் தொகுப்பு இது. வித்தியாசமான முன் அட்டையுடன் வந்துள்ளது. இந்தக் கதைகளில் சில ‘மாயாபஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்து மகிழ்ந்தவைதான். பொதுவாக ராஜாக்களைப் பாராட்டும், ராஜாக்களைப் புகழும் கதைகளையே அதிகம் கேட்டிருப்போம். ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒவ்வொன்றும் ராஜாக்களின் கோமாளித்தனங்களைக் கேலி செய்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், A. வினோத்குமார், கண்ணதாசன் பதிப்பகம், பக். 245, விலை 160ரூ. குழந்தைகள் கருவில் உருவாவதிலிருந்து அவர்களின் வளர்ச்சி நிலை, வளர்ப்பு நிலை, பெற்றோரின் கடமை, சுற்றுச்சூழல், குழந்தைகளிடம் காணப்படும் பயம், ஆண் – பெண் பாகுபாடு, குழந்தைகள் படிப்பு என்று குழந்தைகளின் உலகிற்குள் சென்று அவர்களைப் புரிந்துகொள்ள உதவும் நூல். நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

குருவியும் குரங்கும்(குழந்தைகளுக்கான புத்தகங்கள்)

குழந்தைகளுக்கான புத்தகங்கள், எஸ்.எஸ். பப்ளிகேஷன், விலை 25ரூ. ‘குருவியும் குரங்கும்’, ‘புத்திசாதுர்ய வாத்து’, ‘பேராசைக்கார நரி’, ‘புத்திசாலி முயல்’, ‘ஒட்டகமும் நண்பர்களும்’, ‘முட்டாள் ஆமை’, ‘சிங்கமும் சுண்டெலியும்’ ஆகிய தலைப்புகளில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வண்ணப்படங்களுடன் எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் விலை 25ரூ. நன்றி: தினத்தந்தி, 14/9/2016. —-   பூனை மீசை சிம்கார்டு கதைகள், இயக்குனர் ‘டூ’ ஸ்ரீராம், தமிழ் அறிவு பதிப்பகம், விலை 50ரூ. சிறிய வடிவம் கொண்ட சிம்கார்டு மூலம் உலகில் உள்ள மக்களை இணைக்க முடியும். அதே […]

Read more

பொன்விழா சுற்றுலா

பொன்விழா சுற்றுலா, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 208, விலை 140ரூ. ஜம்பதாண்டைக் கடந்துவிட்ட நமது தேசத்தின் சுதந்திரத்தை இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட நூல். இந்த தேசத்திற்காக பாடுபட்டு மறைந்த மாமனிதர்களின் ஊர்களுக்கு மாணவர்கள் சுற்றுலா செல்வது போன்று இந்நூலை ஜீவபாரதி படைத்திருப்பது சிறுவர்களுக்கு பயன்தரும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 31/8/2016.

Read more

அபாயப்பேட்டை

அபாயப்பேட்டை, ரமேஷ்வைத்யா, டிஸ்கவரி புக் பேலஸ், பக். 102, விலை 90ரூ. மனோதைரியத்தை வளர்க்கும் கதை! குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மிகவும் குறைவு. அப்படியே எழுதினாலும் அந்தச் சின்ன வாசகர்களுக்கு, எளிதில் புரியும் சொற்களில், செறிவான தமிழ் நடையில் எழுதுவது மிக மிக அபூர்வம். அந்த இரண்டையும் பூர்த்தி செய்யக்கூடிய எழுத்தாளராக ரமேஷ் வைத்யா இருக்கிறார். ‘அபாயப்பேட்டை’ கதை சுட்டி விகடனில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மனதை வெற்றிகொண்ட கதை. கதை மட்டும் அல்லாது மொழியறிவையும் குழந்தைகளுக்கு ஊட்டுவது மிக […]

Read more

பரிசலில் ஒரு பயணம்

பரிசலில் ஒரு பயணம், ஜி. மீனாட்சி, சாந்தி நூலகம், பக். 96, விலை 80ரூ. வீரிய விதைகள்! எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜி. மீனாட்சியின் இன்னொரு பயணம் சிறுவர் கதைகள் அடங்கிய ‘பரிசலில் ஒரு பயணம்’ சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பும் கவன ஈர்ப்பும் குறைந்து வரும் இச்சூழலில், இது நல்ல முயற்சி எனலாம். விளையும் பயிரை முளையிலே திருத்தி ஐம்பதில் புலம்பாமல் ஐந்திலேயே செதுக்கி… கதை ஒரு நல்ல உளிதான். நூலின் முன்னுரையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் “இந்நூலின் மூலம் தனது சமூகக் கடமையைத் திறம்படச் […]

Read more

அன்பே உலகம்

அன்பே உலகம், சுப்ரபாரதிமணியன், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை, பக். 48, விலை 50ரூ. சிறுவர்களின் வாழ்க்கை நெறியை கற்றுத்தருவதோடு, சிறுவர்களின் பேச்சு வழக்கிற்கேற்ப இக்கதைகள் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/5/2016.     —-   தொல்காப்பிய கலைச்சொல் விளக்கம், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், பக். 383, விலை 200ரூ. தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைச்சொற்களைத் தொகுத்து அகரநிரல் அமைத்து, எவரும் தாமே கற்கும்படியான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கும் நூல் இது. 2500 ஆண்டுகளுக்கு […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியா பாலு, கண்ணப்பன் பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தன் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது வேதாளமும், விக்கிரமாதித்தனும் பங்கு கொண்ட கதைகளாகும். மன்னன் எப்படி நீதி செலுத்த வேண்டும்? மக்களை எப்படிக் காக்க வேண்டும் என்ற கருத்துகளை விக்கிரமாதித்தன் கதைகள் எடுத்துச் சொல்கின்றன. மேலும் வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குகின்றன. நன்னெறிகளை கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கின்றன. இந்தக் கதைகள் மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. அத்தகைய கதைகளை எழுத்தாளர் ப்ரியா பாலு குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார். நன்றி: […]

Read more

கடல்களும் கண்டங்களும்

கடல்களும் கண்டங்களும், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. அறிவியல் நூல்களை எழுதுவதில் புகழ் பெற்ற “வாண்டுமாமா” எழுதிய நூல் “கடல்களும் கண்டங்களும்”. “உலகம் உருண்டையானது அல்ல; தட்டையானது” என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த சிலர் கடலின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கப்பலில் பயணம் செய்து, புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். அவர்களில், அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக், கனடாவை கண்டுபிடித்த ஜான் கபாட் உள்பட 14 […]

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, எம்.எஸ். முகமது பாதுஷா, எஸ்.டி. பாலகிருஷ்ணன், அறிவியல் வெளியீடு, விலை 75ரூ. நம்மைச் சுற்றியுள்ள அண்டங்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கும் சிறுவர்களுக்கான அறிவியல் விளக்க நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள், அரு.வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிகேஷன்ஸ், பக். 104, விலை 70ரூ. பொருளாதாரத்தில் சாதனை புரிந்த அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் மிக அழகாக எடுத்துக்கூறும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.

Read more
1 6 7 8 9 10 16