துளி விஷம்

துளி விஷம், வாதினி, 19-29, ராணி அண்ணாநகர், பி.டி. ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ. விதவிதமான கதைகள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான அனுபவங்களைக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலாசிரியர் ஆனந்த் ராகவ், ஒரு நிருபர். ஓவியம்போல் எழுத்தில் வரையத் தெரிந்த நிருபர். கண்டதும், கேட்டதும், பட்டதும்தான் கதைகளாகின்றன என்றபோதும் ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்தக் கொள்ளும் கோணங்களம் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை. கிளர்ச்சியுறச் செய்யாத, அதே சமயம் ரசனையுடன் கவனிக்கத் தூண்டுபவை. எழுத்தில் மிகை இல்லை. […]

Read more

கல்கியின் முத்திரைக் கதைகள்

கல்கியின் முத்திரைக் கதைகள், செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 1, விலை 100ரூ. தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய 12 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல் இது. ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள். ஆயினும் இன்று பூத்தமலர் போல மணம் வீசுகின்றன. கல்கியின் கதைகளுக்கு வயதே இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ம. திருமலை, கல்கியின் கதைகளை எல்லாம் படித்துப் பார்த்து, ஆராய்ந்து இந்த 12 கதைகளை முத்திரைக் கதைகளாகத் தேர்வு […]

Read more

சமூக வரலாற்றில் அரவாணிகள்

சமூக வரலாற்றில் அரவாணிகள், முனைவர் முகிலை ராசபாண்டியன் மற்றும் நான்குபேர், விசாலாட்சி பதிப்பகம், பக். 382, விலை 300ரூ. ஐந்து பதிப்பாசிரியர்கள், 58 எழுத்தாளர்களிடமிருந்து அரவாணிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளைப் பெற்று, தொகுத்து தயாரித்துள்ள நூல். திருநங்கைகள் பற்றிய எல்லா தகவல்களும் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் இருந்தும் பல மேற்கோள்களுடன் கூடிய ஒரு சில கட்டுரைகள் இருக்கின்றன. சமூகப் பார்வையோடும் சில கட்டுரைகள். நல்ல முயற்சி. -ஜனகன்.   —-   கைகாட்டி, கணபதி அருணாசலம், ஜி. வேதகிரி, 32, கேசவப் பெருமாள் […]

Read more

தொல்காப்பியர் காட்டும் குடும்பம்

தொல்காப்பியர் காட்டும் குடும்பம், ரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்-603203, பக். 104, விலை 55ரூ. தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில் பொருளியலில் சுட்டப்பெறும் வாழ்வியல் சிறக்க, தொல்காப்பியம் 1215 செய்யுளில் குறிப்பிடும், குடும்பத்திற்கு வேண்டத்தக்க 10 இயல்புகளும், 1216 செய்யுளில் குறிப்பிடப்படும் குடும்ப வாழ்வுக்கு ஆகாத இயல்புகளாக, 11ம் மிகச் சுருக்கமாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் பற்றிய இலக்கண விளக்கங்களையும், கட்டமை ஒழுக்கம் பற்றி குறளுடனான ஒப்பீடுகளும், எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ள குடும்ப […]

Read more

பத்துப்பாட்டு-பொருளடைவு

பத்துப்பாட்டு-பொருளடைவு, முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 552, விலை 350ரூ. உலக மொழிகள் அறியாத, திணைமரபு எனும் தனி உயர் தகுதிகளோ, இயல்பாகப் பெற்றுள்ளது தமிழ் மொழி ஒன்றுதானே. பழந்தமிழ் படைப்பிலக்கியங்களில் பத்துப்பாட்டு குறிப்பிடத்தக்க பனுவலாய்ப் போற்றப்பெறும் சிறப்புடையது. ஆய்வுக்கும் முற்றாக முழுமையாக தெளிவாக அறிந்து மகிழ்வதற்கும் அவ்வழியில் மேற்கொண்டு தொடர்வதற்கும், பல வகையான அடிப்படைக் கருவி நூல்கள் தேவைப்படுகின்றன. பழங்காலத்தார்க்கு வாய்க்காத, வளர்ச்சி விளக்கங்களை, நிகழ்காலத்தாரும், வருங்காலத்தாரும் எளிதில் கண்டு, இன்பம் காண வேண்டும் என்ற உயர் நோக்கில் உருவாக்கப் […]

Read more

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை ரூ.170. படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்தும் நூல். எளிய முறையில் மதிப்புக் கூட்டுதல் தொழில் மூலம் வெற்றி பெற்ற பலரது அனுபவங்களை தொகுத்தளிக்கிறார் வீ. அரிதாசன். நன்றி: தினத்தந்தி, 4/12/13.   —-   அவ்வையார் அருளிய நல்வழி (வாழ்வியலுரையும் தத்துவார்த்தமும்), கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், […]

Read more

சிறுகதைகளும் குறுநாவல்களும்

சிறுகதைகளும் குறுநாவல்களும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 185ரூ. To but this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-959-0.html உலகப் புகழ் பெற்ற ரஷிய எழுத்தாளர் அந்தோன் சேகவ். பிற்போக்கு சிநத்னைகள் மேலோங்கியிருந்தபோது அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர். எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தவர். மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் உளவியல் படைப்பாளர். அவர் எழுதிய சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆக ஒன்பது கதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. மேலிடம் என்றதும் பல்லைக் […]

Read more

மனம் மகிழுங்கள்

மனம் மகிழுங்கள், நூருத்தீன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600014, பக். 196, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-154-8.html மனம் மகிழ்ச்சியாக இருக்க, என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை எளிய இனிய நடையில் நூருத்தீன் சொல்கிறார். பொதுவாக மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும். ஒன்று ஆக்கப்பூர்வமானது. மற்றொன்று எதிர்மறையானது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும். நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தம் […]

Read more

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 50ரூ. புதுமைப்பித்தனுக்குப் பின்னர் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்திருக்கிறார்கள் என்றாலும், சிறுகதை மன்னன் என்ற அடைமொழி புதுமைப்பித்தன் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது. உலகத்தரம் வாய்ந்த சிறந்த சிறுகதைகள் பலவற்றை அவர் எழுதியிருப்பதும், அவை காலத்தை வென்று இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பதும் இதற்குக் காரணம். புதுமைப்பித்தன் வெளியிட்ட புரட்சிகரமான கருத்துக்கள், அவர் நூல்களில் மூழ்கி எடுத்த முத்துக்கள், அவருக்கு […]

Read more
1 49 50 51 52 53 63