குடியேற்றம்

குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக். 237, விலை 275ரூ. ஆசிரியரின், ஆறாவது நாவல் இது. கிழக்கு – மேற்கு கடற்கரைகளில், பறங்கியர்களுக்கும், கடலோர மரைக்காயர்களுக்கும் இடையே, 150 ஆண்டுகள் கடும்போர் நடைபெற்றது. இந்தப் பின்னணியில், ‘குடியேற்றம்’ எழுதப்பட்டுள்ளது. தோப்பிலாரின் நாவல்களுக்கேயுரிய வரலாற்றுத் தரவுகள், மொழிநடை, காட்சி ரூப உருவாக்கம் ஆகியவை, இந்நாவலிலும் உள்ளன. நாவலின் பலமாக இவை இருந்து குன்றாத வாசிப்புச் சுவையை ஊட்டுகின்றன. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

அந்த ஏழு நாட்கள்

அந்த ஏழு நாட்கள், எஸ். ரங்கராஜன், அகநாழிகை பதிப்பகம், பக். 100, விலை 100ரூ. மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். கணக்குத் தணிக்கையோடு இணைத்து, மனிதாபிமானத்துடன், ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை, இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு பாத்திரமும், நல்ல குணங்களின் அற்புத வார்ப்புகள். இலக்கியம், இத்தகைய அற்புத குணநலர்களை முன்னிலைப்படுத்தும்போது, மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படுகிறது. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், கல்கி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், விலை ஐந்து பாகங்களும் சேர்த்து 2500ரூ. புதிய வடிவமைப்பில் பொன்னியின் செல்வன் கல்கியின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு, அவருடைய நூல்கள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவங்களில் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக கல்கியின் பிரம்மாணடமான வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் அநேகமாக எல்லாப் பதிப்பங்களிலும் விதம் விதமான தோற்றங்களிலும், விலைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் இந்த நாவலை, கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் வெளியிட்டுள்ளது. ஐந்து பாகங்களும் ஐந்து புத்தகங்களாக, ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. பக்கத்துக்குப் பக்கம் […]

Read more

தாமரை செந்தூர் பாண்டி நாவல்கள்

தாமரை செந்தூர் பாண்டி நாவல்கள், சிவாமி புத்தகாலயம், விலை 900ரூ. ஏழை மக்களின் துயர வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர் தாமரை செந்தூர் பாண்டி. அவர் எழுதிய நாவல்களில் முக்கியமான 16 நாவல்களை தேர்வு செய்து, ஒரே புத்தகமாக (மொத்தம் 1184பக்கங்கள்)வெளியிட்டு இருக்கிறார்கள். நாவல்களில் தாமரை செந்தூர் பாண்டி தனக்குரிய முத்திரைகளை ஆழமாகப் பதித்திருக்கிறார். இந்த நூலில் உள்ள “அந்தரங்க கேள்வி” என்ற நவால், “குருவம்மா” என்ற பெயரில் திரைப்படமாகியது. அதற்கு திரைக்கதை அமைத்து, டைரக்ட் செய்த தாமரை செந்தூர்பாண்டி ரிக்ஷாக்காரராக நடிக்கவும் […]

Read more

அபாயம் தொடாதே

அபாயம் தொடாதே, பட்டுக்கோட்டை பிரபாகர், கவிதா பதிப்பகம், விலை 200ரூ. கடந்த 40 ஆண்டுகளாகச் சிறுகதை, நாவல், தொடர்கதை, சின்னத்திரை தொடர்கள், வெள்ளித் திரையில் கதை – உரையாடல் எனத் தொடர்ந்து வெகுசன தளத்தில் பரவலாகப் பேசப்படும் எழுத்தாளரின் நாவல். எந்த முன்குறிப்பும் இல்லாமல் தொடங்கும் கதை, தொடங்கிய வேகத்திலேயே சட்டென முடிந்தும்போகிறது. சியாமளாவின் கொலைக்குக் காரணமான விவேக்கை அவனது கல்யாண மேடையில் வைத்தே கைது செய்வதோடு நாவல் முடிகிறது. வழக்கமான துப்பறியும் கதைதான் என்றாலும் மின்னல் வேக வாசிப்புக்கு உத்தரவாதம் உண்டு. நன்றி: […]

Read more

பொருநை நதிக்கரையினிலே

பொருநை நதிக்கரையினிலே, கன்யூட்ராஜ், என்சிபிஹெச், விலை 230ரூ. இருபுறக் கரைகளிலும் தண்ணீர் புரண்டோடிய ஆறுகள், இன்று வெறும் மணல்வெளியாய் அனல் பரப்பிக் கிடக்கின்றன. பயிர் செழிக்க உதவிய ஆற்றுநீர்ப் பாசனம், விவசாயிகளின் ஒட்டிய வயிறாய் சுருங்கிவிட்டது. நதிகளில் ஓடும் ஆற்று நீர் எவ்வளவு அவசியமானதோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல, அற்றுமணலும், பன்னாட்டுக் கம்பெனிகள் ஒருபுறம் நதிநீரை உறிஞ்சிக் குடிக்க, இன்னொருபுறம் ஆற்று மணலை அள்ளிப்போய் கொள்ளையடிக்கிறார்கள் பெருமுதலாளிகள். இயற்கை வளத்தைச் சூறையாடிவருபவர்களுக்கு எதிராகப் போராடும் கிராம மக்களின் போராட்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது […]

Read more

சமரம்

சமரம் – வங்க மூலம்: தபோ விஜயகோஷ்; தமிழில்: ரவிச்சந்திரன் அரவிந்தன்; சப்னா புக் ஹவுஸ், பக்.328, விலை ரூ.200. மேற்கு வங்காளத்தில் 70 களின் சூழ்நிலையின் பின்னணியில் உருவான நாவல். தமால்ராய் என்கிற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் கொலை செய்யப்படுவதுடன் தொடங்குகிறது இந்நாவல். அவரின் இறுதி ஊர்வலத்துடன் நிறைவடைகிறது. கொலைக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்கள், கொலை நடந்த பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் இடையில் சொல்லப்படுகின்றன. 24 பர்கானா பகுதியில் இருந்த நிலச்சுவான்தார் மணிசங்கர் செüத்ரி அங்கு தனக்குத் சொந்தமாக இருந்த நிலங்களை விற்றுவிட்டு, […]

Read more

ஆநந்த மடம்

ஆநந்த மடம், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர், தமிழில்: மஹேச குமார சர்மா, ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.336, விலை ரூ.120. கி.பி.1771 இல் வங்காளத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. கிராமப்புறங்களில் வாழும் மக்களில் பலர் பசியால், நோயால் மாண்டுவிடுகின்றனர். அந்நிலையிலும் அப்பகுதியை ஆண்ட மன்னர் கடுமையாக வரி விதிக்கிறார். வரி வசூலிக்கும் பணியை ஆங்கிலேயர் மேற்கொள்கின்றனர். காட்டில் மறைந்து வாழ்ந்த சந்நியாசிகள் ஆட்சி செய்த மன்னரையும், வரி வசூலிக்கும் ஆங்கிலேரையும் எதிர்த்து போரிடுகிறார்கள். வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்களால் இறுதியில் அவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். […]

Read more

பத்மினி

பத்மினி, டி.ராமகிருஷ்ணா, தமிழில் பேராசிரியர் சிவ.முருகேசன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. ஆங்கில நாவல் எழுதிய முதல் தமிழர் தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவை இணைந்திருந்த பழைய சென்னை மாகாணத்தில், 1854-ம் ஆண்டில் பிறந்தவர் டி.ராமகிருஷ்ணா. ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் தமிழர் இவர்தான். “பத்மினி” ஓர் இந்தியக் காதல் கதை” என்ற இந்த நாவலை 1903-ம் ஆண்டில் (அதாவது 114 ஆண்டுகளுக்கு முன்) அவர் எழுதினார். அதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சிவ.முருகேசன். விஜயநகர அரசரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றும் சலுவா என்பவன், […]

Read more

இரு துருவங்கள்

இரு துருவங்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 192, விலை 190ரூ. நம் நாட்டு வருமானம் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளிடம் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களால் தான் லஞ்சமும், ஊழலும் நாடெங்கும் நிறைஞ்சிருக்குது. இதைத் தடுப்பது என் லட்சியம் என்று, சிவில் சர்வீஸ் தேர்வு மையத்தில் முதல் நாளே உறுதி கூறும், செல்வின் கலெக்டராக, நேர்மைக்குப் பரிசாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு மாவட்டமாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் யதார்த்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. செல்வினை மணந்து கொள்ள விரும்பும் தொழில் அதிபரின் […]

Read more
1 17 18 19 20 21 66