யாளி

அமிர்தம் தொகுதி 1,  நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், சென்னை – 75, பக்கம் 184, விலை 90 ரூ. ‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்று நம்மிடையே கூற்றொன்று உண்டு. ஒரு சாண் வயிறுக்கு படித்தவன், பாமரன், ஏழை, பணக்காரன் என்கிற எந்தப் பேதமும் இல்லை. பிறப்பு, இறப்புக்கு நடுவில் அனைவருக்கும் பொதுவானதான உணர்வு பசி. மொத்தம் இத்தொகுப்பில் உள்ள 14 சிறுகதைகளும் 14 ரகம். அத்தனையும் தனி ரகம். […]

Read more

ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்

ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்,  இ.ராமநாதன், ரெபிடெக்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 220 ரூ. கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், போன்றவற்றின் பயன்பாடுகளை அறியாமல், இனி எந்தவொரு இளைய தலைமுறையினராலும் எதிர்காலத்தை எதிர்கொள்வது என்பது மிகக் கடினம். அந்த அளவுக்கு இவற்றின் ஆதிக்கம் உள்ளது. அதே சமயம், இவற்றைப் பயன்படுத்த ஓரளவுக்கு ஆங்கில அறிவும், விஷய ஞானமும், பயிற்சியும் தேவை. ஆயினும் ஆங்கிலம் தெரியாதவர்களும் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் இலகுவான பயிற்சி முறையை எளிய தமிழில் இந்நூல் விளக்குகிறது. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்ற ஆரம்பப் பாடம் முதல், அதன் […]

Read more

மயிலிறகு மனசு

மயிலிறகு மனசு, தமிழ்ச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600002, விலை 80 ரூ. “நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் நட்பின் பிரதிபலிப்புகளை உளவியல் நோக்கோடு ஆராயும் நூல். சுட்டு வைத்த கனங்கிழங்கு வாசமும், குழிப்பணியாரத்தின் மென்மையும், காத்தாடி பார்க்கின்ற பரவசமும், சமயங்களில் சுடுமணல் பொறுக்காத தவிப்பும்… என்று தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப் போல் அடம்பிடிக்கவும் கற்று வைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அழகான வடிவமைப்பு, அரிய புகைப்படங்கள், மனித நேயமிக்க தகவல்களுடன் கூடிய இந்த நூல் ஒரு வரலாற்றுக் […]

Read more

இனி விதைகளே பேராயுதம்

இனி விதைகளே பேராயுதம், கோ. நம்மாழ்வார், இயல்வாகை பதிப்பகம், 25, மாந்தோப்பு, ப.உ.ச. நகர், போளூர் சாலை, திருவண்ணாமலை 1, பக்கங்கள் 96, விலை ரூ 60. இயற்கை உழவாண்மையின் கட்டாயத் தேவைபற்றி கூறும் புத்தகம். நம்மாழ்வாரின் சிந்தனைகள் எளிய தமிழில் மின்னுகின்றன. பூச்சிக்கொல்லிகள் சர்வசாதாரணமாக உபயோகப்படும் விதத்தில் மனிதர்களுக்கு நேரும் அபாயம், மரபு முறை வேளாண்மையை மறுக்கும் இன்றைய விசாயிகள், பச்சைப்புரட்சியில் ஏற்படும் லாபங்கள் என எல்லாவற்றுக்கும் அருமையான பதில்கள் தருகிறார். இயற்கையை எப்படி நாம் குலைக்காமல் இருக்க வேண்டும், நன்மை தரும் […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more

சோழர் காலத் தமிழ் மக்கள் வரலாறு

சோழர் காலத் தமிழ் மக்கள் வரலாறு, டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, பக்கங்கள் 288, விலை 250 ரூ. ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று புகழப்படும் சோழ நாட்டின் தமிழ் மக்கள் வாழ்ந்த முறை பற்றிய வரலாற்று நூலாக இந்நூல் வெளிவந்ததுள்ளது. துலோக்கோல் போன்று சீர் துக்கிப் பார்த்துத் தம் கருத்துக்களை எழுதும் இந்நூலாசிரியர் இந்நூலில் தெள்ளத் தெளிவாக, சோழ நாட்டின் அன்றையச் சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். சோழ மன்னர்களை, அவர்களின் ஊராட்சி, சமயம், கோவில்கள், பிராமணர்கள், […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம், தி. பாஷ்ய ராநுசதாசன், யஷ்வந்த் பப்ளிக்கேஷன், பக்கங்கள் 80, விலை 60 ரூ. ஸ்ரீமத் ராமாநுஜர் ஒரு சமயம், ஸ்ரீமதுரகவியாழ்வார் அவதாரம் செய்த திருக்கோளூர் அருகில் வருகிறார். எதிரே, ஒரு பெண்பிள்ளை, மூட்டை முடிச்சுகளோடு ஊரை விட்டு வெளியே வருவதைக் கண்ட ராமாநுஜர், அவளை யாரென்று விசாரிக்க, அவள் திருக்கோளூரிலிருந்து வருவதாகச் சொன்னாள். ‘எல்லாரும் புகும் ஊர் உனக்கு புறப்படும் ஊராயிற்றே’ என்று ராமாநுஜர் கேட்க, அவள்தான் எளியவள் என்று, எண்பத்தோரு விளக்கங்கள் சொல்கிறார். அந்த விளக்கங்களே படிக்கச் […]

Read more

புலன் விசாரணை

புலன் விசாரணை, கவிவேந்தர் கா. வேழவேந்தன், கீதை பதிப்பகம், பக்கம் 184, விலை 100ரூ தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக மக்களால் பேசப்பட்ட, 11 முக்கிய வழக்குகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் நம் காவல்துறை நுணுக்கமான அதிரடி நடவடிக்கைகள் மூலம் செயல்பட்ட விதத்தை மிகவும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஆசிரியர். — சிவா ஜைன நுல்களை அறிவோம், அ. சுகுமாரன், ஜைன இளைஞர்மன்றம், தி.நகர். பக்கம் 248, விலை 100 ரூ. இலக்கியங்கள், இலக்கண நூல்கள், நன்னூல்கள், தர்க்க நூல்கள், இசை நூல்கள், நாடக நூல்கள், காவிய நூல்கள், […]

Read more

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் (கட்டுரைகள்), எச். பீர்முஹம்மது, அடையாளம் வெளியீடுகள், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621301. விலை 170 ரூ. கிழக்குக் காற்று அரபுலக அறிவு, அரசியல், கலாசார மதிப்பீடுகளைப் பற்றிய பார்வைகள் மீதான பார்வைகள். ஓரியண்டலிசம் அல்லது கீழையியல் என்பது வரமாகவும் சாபமாகவும் உருவான ஒரு கிளவி. தமக்குள் பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் உடைய ஆசிய நிலப்பரப்பின் சிந்தனைப் போக்குகளை ஒற்றை பரிமாணமாக முத்திரைக் குத்த இந்தச் சொல், மேற்குலகின் மேட்டிமை அறிவுஜீவிகளுக்கு வசதியாக இருந்தது. ஆனால் அதனூடாக கிழக்கின் பாரம்பரியங்கள் பலவற்றை […]

Read more

அமுதே மருந்து

கல்விச் செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மகேஸ்வரி பதிப்பகம், 12, ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 116. தமிழக முதல்-அமைச்சராக பதவி  வகித்தபோது கல்வி வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றினார்.  புதுப் பள்ளிக்கூடங்களை  ஏராளமாகத் திறந்தார். மதிய  உணவுத் திட்டத்தைக் கொண்டு  வந்தார். கல்விக்கண் திறந்த காமராஜரின்  வாழ்க்கை வரலாற்றை சுவைபடி  எழுதியுள்ளார். ஈசாந்திமங்கலம்  முருகேசன் இளைய  தலைமுறையினர் அவசியம்  படிக்க வேண்டிய புத்தகம். — கண்ணீரில் மிதக்கும் கதைகள்,  டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமிஞ்சிக்கரை,   சென்னை 29, விலை 80ரூ வரலாற்று நூல்களையும்,  ஆராய்ச்சி […]

Read more
1 13 14 15 16