தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை, ஆர். நல்லகண்ணு, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21/10, லோகநாதன் நகர், 2ஆம் தெரு, சூளைமேடு, சென்னை 24, பக். 152, விலை 100ரூ. நஞ்சையும் சரி புஞ்சையும் சரி நம்பி இருப்பது நீரைத்தான். அதை முறைப்படுத்தி வழங்கினாலே இந்நாட்டில் வறுமை இருக்காது. அதற்காகத்தான் கங்கை-காவிரி இணைப்பு. தென்னக நதிகள் இணைப்பு ஆகியவற்றின் அவசியத்தை முன் வைக்கிறார் நூலாசிரியர். வெள்ளத்தாலும் புயலாலும் மக்கள் அடைந்த துன்பங்களையும் அவை வறட்சிக்கு இட்டுச் சென்ற கொடுமைகளையும் விளக்கி அதிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லித் […]

Read more

கற்றது கடலளவு

கற்றது கடலளவு, து. கணேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 396, விலை 115ரூ. சாண்டில்யனின் கடல்புறா நாவல், அந்தக் கால கடற்பயணத்தை விவரித்தால், அதற்கு சற்றும் சுவை குன்றாமல், நவீன கால கடற்பயணத்தை தொழில் அனுபவமாகவும், வாழ்க்கை அனுபவமாகவும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். கப்பல்களில் வேலை செய்வோர் நிறைய சம்பளம் வாங்குவதாக நினைப்போம். இதைப் படித்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் இழக்கும் வாழ்க்கை எது? கடல் விபத்து, மனைவி மக்களைப் பிரிந்திருந்தால், விலை மாதர்களிடம் உடல் நலத்தை […]

Read more

அகம் பொதிந்தவர்கள்

அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 160, விலை 75ரூ. மகாகவி பாரதியார் தொடங்கி எழுத்தாளர் மாஜினி வரை தன் மனம் கவர்ந்த, தான் நேரில் பார்த்துப் பழகிய, பழகத் தவறிய 26, எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள், அவர்களைப் பற்றிய தனது கருத்துகள் போன்றவற்றை சுவையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு போன்ற தெரிந்த தகவல்களையே சொல்லி நம்மைச் சலிப்படைய வைக்காமல், அவர்களை தான் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள், […]

Read more

எப்படி கதை எழுதுவது

எப்படி கதை எழுதுவது?, ரா.கி. ரங்கராஜன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 258, விலை 170ரூ. இந்தப் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தால் போதும். உங்களால்கூட ஒரு நல்ல நாவல் எழுத முடியும். அவ்வளவுக்குப் பயிற்சி அளிக்கிறார் இந்நூல் மூலமாக ரா.கி. ரங்கராஜன். எப்படி கதை எழுத வேண்டும்? கதைக்கான அம்சங்கள் என்னென்ன இருக்க வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது. அதில் வரும் காட்சிகள், வர்ணனைகள், கதாபாத்திரங்கள், எப்படிப்பட்ட நடை இருக்க வேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக இந்நூலில் சொல்லித் தந்துள்ளார். […]

Read more

பெரியார் களஞ்சியம் குடிஅரசு

பெரியார் களஞ்சியம் குடிஅரசு, (தொகுதி 41, 42), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 81/1(50), ஈ,வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 7, விலை 41வது தொகுதி 200ரூ, 42வது 270ரூ. தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகை இதழ்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம் ஆகும். அந்தப் பத்திரிகையில் வெளியான பெரியாரின் தலையங்கங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், அறிக்கைகள் முதலியவற்றை காலவரிசைப்படி தொடர்ந்து, புத்தகமாகப் பிரசுரிக்கும் பெரும் பணியை திராவிடக் கழகத்தலைவர் கி. […]

Read more

கருப்பு காந்தி காமராஜர்

கருப்பு காந்தி காமராஜர், சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 40ரூ. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு ஏற்றபடி அழகாக எழுதியுள்ளார், எழுத்தாளர் மெர்வின்.   —-   யோகா புத்தகம், தஞ்சை சக்தி ரமேஷ்,  3/6, சத்திய மூர்த்தி நகர், நந்தனம், சென்னை 35, விலை 160ரூ. ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள் எவ்வளவு அவசியமானவை என்பதை வலியுறுத்தி, ஸ்பெஷல் யோகா என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளார் தஞ்சை சக்தி ரமேஷ். நன்றி: தினத்தந்தி, 28/11/2012.   […]

Read more

இறகுதிர் காலம்

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, பக். 136, விலை 100ரூ. இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரிகள், குளங்கள், மலைகள் இன்றைய அரசியல் சமூக சூழலில், எத்தகைய பாதிப்புகள் அடைந்திருக்கின்றன. பறவை இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது திறம்பட படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இயற்கை குறித்தும், சுற்றுச் சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயனுள்ள நூல். ஆசிரியரின் நடையழகு சிறப்பானது. -சிவா. நன்றி: தினமலர், 30/6/13.   —-   பார்க்கப் பார்க்க ஆனந்தம், […]

Read more

தமிழக சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழக சிற்பங்களில் பெண் தொன்மம், முனைவர் பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், கோடம்பாக்கம், சென்னை 24, பக். 408, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html தமிழகத்தில் பெரும் கோவில்கள் உருவாக்கப்பட்டபோது, அவற்றின் கருத்து நிலைப்பதிவுகள், எவ்வெவ்வகயில் பதிவு செய்யப்பட்டன என்னும் விரிந்த கோணத்தில், சிற்பம் என்னும் ஒரு புள்ளியை, இந்நூல் ஆய்வு செய்துள்ளது. தாய்வழிச் சமூக மரபு அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் வைதிக ஆணாதிக்க மரபு எப்படிக் கால் ஊன்றியது என்று, இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. புராணக் கதைகளைக் […]

Read more

பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, தொகுப்பு நூல்-நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை1 25ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html தமிழகத்தையே உலுக்கி கொதி நிலைக்கு தள்ளியது பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான புகைப்பட காட்சி. அந்த பாலகன் மரணத்திற்காக தமிழின் முன்னணி கவிஞர்கள் கவிதாஞ்சலியாக எழுதிய கவிதைகளின் தொகுப்பு. படிக்கும்போதே பதற வைக்கும் கவிதைப்பதிவுகள்.   —-   புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷீயல் பப்ளிகேஷன்ஸ், கணேசபுரம், கோவை 642045, விலை […]

Read more

வானம் தொடு தூரம்தான்

வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன், கல்கி பதிப்பகம், 47 என்.பி.ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அரிய கலை. ஆனால் குழந்தைகளை வளர்ப்பதில் சென்ற தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தத் தலைமுறைக் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், சுட்டிகளாகவும் உள்ளனர். இக்கால குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதிர்காலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்களாக அவர்களை உருவாக்குவது எப்படி என்பதை எல்லாம் இந்த நூலில் ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன் […]

Read more
1 19 20 21 22 23