இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, ஆர்.சி. சம்பத், பக். 104, காளீஸ்வரி பதிப்பகம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர். சென்னை – 17. விலை ரூ. 40 எம்.எஸ். என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி இந்தியா முழுதும், வெள்ள நிவாரண நிதி, கல்வி, சமூக நிறுவனங்களின் வளர்ச்சி நிதி போன்ற சேவைக்காக கச்சேரி நடத்தி திரட்டித் தந்த நிதி ஏராளம். இப்படியொருவர் இந்திய இசையுலகில் வாழ்ந்தார் என்பதே உலகுக்கே பெருமை. அதுவும் தமிழகத்திற்கு சிறப்பு. அத்தகைய இசையரசியின் வாழ்க்கையைத்தான் நூலாசிரியர் எழுதியுள்ளார். மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி ஆகியோருடனான நட்பு, தமிழிசைக்கு […]

Read more

மாவீரன் தீரன் சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை, உடுமலை பி.எஸ்.கே. செல்வராஜ், தன்னம்பிக்கை வெளியீடு, 10, சாஸ்திரி வீதி எண் 1, பி.என்.புதூர், கோவை – 41. விலை ரூ. 100 ‘சென்னி மலைக்கும் சிவன் மலைக்கும் இடையே ஆண்ட தீரன் சின்னமலை’ என்று அம்பிகாபதிப் புலவரால் பாடப்பட்ட மன்னனின் கதை இது! மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை, ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன். ஹைதர் அலி இறப்புக்குப் பிறகு, மைசூர் மன்னராகப் […]

Read more

அவர்தான் கலைவாணர்

அவர்தான் கலைவாணர், சோழ. நாகராஜன், தழல் பதிப்பகம், 25, பாண்டியன் நகர் 3-வது தெரு. கரிசல் குளம், மதுரை – 18. விலை ரூ. 50 கலையில் கஷ்டமானது, சிரிக்க வைப்பது என்பார்கள். அதைவிடக் கஷ்டமானது சிரிப்போடு சிந்திக்கவும் வைப்பது. இரண்டையும் ஒருசேரச் செய்து காட்டிய கலைஞன், என்.எஸ். கிருஷ்ணன். கலைக்காக மட்டுமல்ல அவரது கொடைக்காகவும் இன்று வரை நினைக்கப்படுகிறார். ‘எப்போது ஒருவன் லாப நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிறானோ, அப்போதே அவனிடம் இருக்கும் கலைத்திறமை போய்விடும்’ என்று சொன்ன மகத்தான மனிதனின் சுருக்கமான […]

Read more

கங்கை கரையினிலே

கங்கை கரையினிலே, ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 600 014, பக்கம் 205, விலை 150 ரூ. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள ப. முத்துக்குமாரசாமி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வம்சாவளி, தமிழை முறையாகப் படித்த ஆன்மிகவாதி. ஆன்மிகத்தை நல்ல தமிழில் வழங்கும் ஆற்றல் கைவரப்பெற்றவர். நூலாசிரியர் சென்ற ஆண்டு சதுர்தாம் தரிசனம் என்று அழைக்கப்படுகின்ற யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரிநாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய தலங்களுக்கு புனிதயாத்திரை செய்துவிட்டு, நம்மையெல்லாம் இந்த நூலின் வாயிலாக அத்துணை புண்ணிய தலங்களுக்கும் அழைத்தும் செல்லுகிறார். […]

Read more

தந்தை பெரியார்

வாஸ் (து)தவ சாஸ்திரம், பண்டிட் ஆர். வி. மாரிமுத்து, வெளியீடு – பண்டிட் ஆர். வி. மாரிமுத்து, பக்கம் 104, விலை 60 ரூ. ஒரு வீடு ஆரம்பிக்கும் விதத்திலிருந்து, புதுமனை புகுவிழா முடிந்து பராமரிப்பது வரை, இன்றைய காலகட்டத்திற்குத் தகுந்தவாறு சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். வாஸ்து என்பது இன்று பலராலும் பின்பற்றப்படுகிறது. இதில் சில அம்சங்களை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. – சிவா —   தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக்கம் 613, விலை 350 ரூ. […]

Read more

வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர்

வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர், புலவர் ம. அய்யாசாமி, திருக்குறள் பதிப்பகம், பக்கங்கள் 336, விலை 225 ரூ. சென்னை சென்ட்ரலைத் தாண்டிப் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது வலப்பக்கத்தில் ரிப்பன் மாளிகை, அனைவரது கண்ணையும் கவரும். சென்னை மாநகராட்சிக் கட்டம் என, இன்று சிறப்பிக்கப்படும் இந்தக் கட்டடத்தின் முகப்பில் அமைந்திருக்கும் சிலைதான் பிட்டி தியாகராயர். எப்போதும் வெள்ளை ஆடை அணிந்ததால், ‘வெள்ளுடைவேந்தர்’ என்று போற்றப்பட்டவர். எனவே, அவரது சிலையும் வெள்ளை நிறத்திலேயே அமைந்துள்ளது. ராவ் பகதூர், திவான் பகதூர், சர் முதலான பட்டங்களை […]

Read more

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.

மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர், கே.பி. ராமகிருஷ்ணன், எழுத்தாக்கம் – ஆர். கோவிந்தராஜ், வெளியீடு- விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -2, விலை 110ரூ. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் என்ற பெயர் கலை, அரசியல் மற்றும் வெகுமக்கள் கலாச்சாரத்தில் இன்னும் அதிர்வுகளை ஏற்படுத்துவதாகும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை மறைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் தமிழ் நினைவில் அவர் அழிக்க முடியாத புராணிக கதாபாத்திரமாக நீடிக்கிறார். அவரது வள்ளல் தன்மை, மனிதாபிமானம், மக்கள் ஈர்ப்பு, அரசியல், சினிமா என சகல பரிமாணங்களிலும் நு¡ல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more

வீரக் கண்ணகி

வீரக் கண்ணகி- ம.பொ.சிவஞானம்; பக்.160; ரூ.100; ம.பொ.சி.பதிப்பகம், சென்னை-41 சிலம்புச் செல்வர் எனப் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதியுள்ள நூல். சிலப்பதிகாரத்தின் தனிச் சிறப்புகளை விளக்கும்விதமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலை, இராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்குகிறார். இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சாராதவர்; கண்ணால் காணக் கூடிய திங்கள், ஞாயிறு, மழை போன்ற இயற்கை சக்திகளை வணங்கியிருக்கிறார் என்றும் அதே சமயம் நாட்டின் நடைமுறையைப் புலப்படுத்த ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகியவற்றை இயற்றினார் என்றும் […]

Read more

அமர்த்தியா சென் – சமூக நீதிப் போராளி

அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி – ரிச்சா சக்சேனா; தமிழில்: சி.எஸ்.தேவநாதன்; பக்.176; ரூ.100; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642002 பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு பெற்றவர் அமர்த்தியா சென். இந்நூல் அவருடைய வாழ்க்கையையும், சிந்தனைகளையும் விரிவாகச் சொல்கிறது. பொருளாதாரவியல் வெறும் பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல, அது தத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டது என்பது அமர்த்தியா சென்னின் கருத்து. பொருளாதார நிபுணர் என்ற அளவில் நின்றுவிடாமல், ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் போன்றவற்றிலும் அவர் அக்கறையுள்ளவராக இருந்தார் என்பதை நூல் விவரிக்கிறது. “சோஷியல் சாய்ஸ்’ […]

Read more
1 2 3