இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், விலை 80ரூ. இலக்கியச் சுடர், எழுத்துச் சிற்பி முதலான விருதுகளைப் பெற்றுள்ள ச.உமாதேவி, “இலக்கிய அமுதம்” என்ற தலைப்பில், நூல் எழுதியுள்ளார். பாவேந்தர் கவிதைகளில் பெண்ணியம், அருட்பா காட்டும் பண்பாட்டுக் கூறுகள், திருக்குறளில் கல்வி உள்பட 15 ஆய்வு கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. எல்லாம், இலக்கியச் சிறப்பு வாய்ந்த கட்டுரைகள். சிந்தனைக்கு விருந்தளிப்பவை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே

பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே, ஏ,எல்.சூர்யா, பி.பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், விலை 100ரூ. வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் கட்டுரைகள் அடங்கிய புத்தகம். “அறிவாற்றலும் அறியாமையும்”, “கனவுகள் மெய்ப்படுமா?”, “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” முதலான தலைப்புகளில் 15 கட்டுரைகளை ஏ.எல்.சூர்யா எழுதி இருக்கிறார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

பன்முக நோக்கில் இராமானுசர்

பன்முக நோக்கில் இராமானுசர், பதிப்பாசிரியர்: ப.முருகன், கங்காராணி பதிப்பகம், பக்256, விலை ரூ.160. உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீஇராமானுசர் வேதத்துக்கு எளிய உரை வகுத்தவர். இளையாழ்வார், யதிராஜர், உடையவர், எம்பெருமானார், சடகோபன் பொன்னடி, கோயிலண்ணர், பாஷ்யகாரர், திருப்பாவை ஜீயர், இராமானுசர் ஆகிய எட்டுப் பெயர்களால் இவரை வைணவர்கள் போற்றித் துதிக்கின்றனர். இராமானுசரின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில், சென்னை அரும்பாக்கம் வைணவக் கல்லூரி தமிழ்த் துறையினரால் தேசியக் கருத்தரங்காக நடத்தப்பட்டு, பன்முக நோக்கில் இராமானுசர் பற்றி 21 பேர் எழுதிய ஆழமான ஆய்வுக் […]

Read more

யுகப் புரட்சி

யுகப் புரட்சி,  அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக்.232, விலை ரூ.140. அமரர் கல்கி 1931 -39 காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாராஷ்டிர மாநிலம் பெயிஸ்பூர் கிராமத்தில் 1937 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டைப் பற்றிய கட்டுரை, அம்மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாநாட்டுக்குச் சென்றவர்கள் தங்கிய இடம், குளிக்க செய்திருந்த ஏற்பாடுகள், மின்சாரம் இல்லாத அந்த ஊரில் இரவு நேரத்தில் எரியவிடப்பட்ட விளக்குகள், அளிக்கப்பட்ட உணவு என அனைத்தையும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறது. […]

Read more

அறிவு வழிகள்

அறிவு வழிகள், பேகன் கட்டுரைகள், தமிழில் முகில்வண்ணன், சாகசம், பக்.280, விலை ரூ.250. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  என்றார் மகாகவி பாரதியார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்தின் குழந்தை என கருதப்பட்ட பிரான்சிஸ் பேகனின் 60 கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. பிரான்சிஸ் பேகன் வாழ்ந்த காலத்தின் சமூக நிலைமைகளுக்கேற்ப அக்கால வாழ்வியல் விழுமியங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் புது ஒளி பாய்ச்சும்விதமாக பேகன் தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். உண்மை, மத ஒற்றுமை, பழியுணர்ச்சி, பொறாமை, […]

Read more

கையளவு கடல்

கையளவு கடல், மதுக்கூர் ராமலிங்கம், பாரதி புத்தகாலயம், பக். 120, விலை 130ரூ. எள்ளலும் துள்ளலும் துள்ளல் நடையில் அமைந்த கட்டுரைத் தொகுப்பு இது. நாடறிந்த பேச்சாளர், பத்திரிகையாளரான மதுக்கூர் ராமலிங்கத்தின் சமூக அக்கறை எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது. கூடவே, எள்ளலும், நகைச்சுவையும் கைக்கொடுக்கிறது. ‘நார்ச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தேங்காய் நார் சாப்பிடச்சொல்லாதது ஒன்றுதான் பாக்கி’ என்று தனக்கு சர்க்கரை குறைபாடு வந்திருப்பதைக் கூட எளிதாகக் கடந்துசெல்ல முடிகிறது அவரால்! -மானா பாஸ்கரன், நன்றி: தி […]

Read more

நீ பாதி நான் பாதி

நீ பாதி நான் பாதி, பலரது கட்டுரைத் தொகுப்பு, அந்திமழை, பக். 128, விலை 110ரூ. இரு வேறு மனங்கள் இணைந்து மேற்கொள்ளும் இல்லறத்தில், மகிழ்ச்சியான மண வாழ்வின் தேடல்களிலேயே பலரது நாட்களும் நகர்கின்றன. கருத்தொருமிப்பு இல்லாமல் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கை, கருத்து மாறுபாடுகளின் கன பரிமாணத்திற்கேற்ப துன்பத்தில் வீழ்ந்து விடுகிறது. குறைந்த சதவீதத்தினரே இதில் வெற்றி கண்டு, அன்பான இல்லற வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து நேசித்து வாழும் சாமானியர்கள் பலரை, அன்றாட வாழ்வில் கண்டு வியப்பதுண்டு. தனி […]

Read more

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம், என்.ராமதுரை, க்ரியா பதிப்பகம், விலை 130ரூ. உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் எளிமையாக விளக்குகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

முடிவு எடுத்தல்

முடிவு எடுத்தல், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.32, விலை 50ரூ. பிரச்னைகளின்போதும், சிக்கலாக உணரும் தருணங்களிலும் எப்படிப்பட்ட முடிவைத் தேர்ந்தெடுப்பது; எப்படியான அணுகுமுறையைக் கையாள்வது; சூழலுக்கேற்ப எப்படி நடந்து கொள்வது மற்றும் குழப்பங்களிலிருந்து விடுபடுவது போன்ற பல்வேறு விளக்கங்கள் இந்நுாலில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன. முடிவெடுக்க இயலாத நிலையில் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும், மன உளைச்சல்களிலிருந்தும் மனித சமூகத்தை விடுவிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது இந்நுால். எளிய நடையில் ரத்தின சுருக்கமாக விளக்குகிறது. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

இனயம் துறைமுகம்

இனயம் துறைமுகம், கிறிஸ்டோபர் ஆன்றணி, எதிர் வெளியீடு, விலை 120ரூ. நவீன யுகத்தில் இயற்கைச் சீர்கேடு மிகவும் அதிக அளவில் நடக்கிறது. அது காடானாலும் கடலானாலும் ஒன்றுதான். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள இனயம் துறைமுகத்தைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றியும், பவளத் திட்டுச் சிதைவுகள் உள்ளிட்ட சூழலியல் பாதிப்புகள் பற்றியும், கடலில் கலக்கும் பெட்ரோலிய கதிர்வீச்சால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 66 67 68 69 70 88