445

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, முனைவர் ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் வழக்கு , மொழிச்சுழல், கிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள் ஆகிய தலைப்புகளில் நூலாசிரியர் ஆராய்ச்சி செய்த தகவல்கள் அடங்கிய நூல். வட்டார வழக்கியல் ஆய்வுக்கு மட்டும் அல்லது மொழி ஆய்வுக்கும் மொழியியல் ஆய்வுக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.   —-   பிரியாணி சமையல், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. 100 வகை வெஜிடெபிள் பிரியாணி […]

Read more

திருமுறைகள் வழங்கும் வாழ்வியல்

திருமுறைகள் வழங்கும் வாழ்வியல், ந.ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 416, விலை 310ரூ. திருமுறைகளில் காணப்பெறும் ஞானத்தேனடையான கருத்துக்களை, 36 தலைப்புகளில் நூலாசிரியர் அழகுறத் தொகுத்து அளித்திருக்கிறார். கடமைகளை ஆற்றும் செயல், கடவுளைப் போற்றும் செயலாக உயர்ந்துவிடுகிறது என்ற கருத்தைக் கருமயோகத்தோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார் கட்டுரையாசிரியர். மனிதப்பிறப்பில் வந்து போகும் நல்வினை, தீவினை பற்றிச் சிந்திக்கும் ஆசிரியர், இறை ஞானமே பிறவிப்பிணிக்கு மருந்தாகி பிறவித் துயரத்தை அகற்றும் என்று கருத்துரைக்கிறார். சிற்றின்பமும், பேரின்பமும் என்ற கட்டுரையில், இறையுணர்வு இன்பம் எப்படிப் பேரின்பமாக, அழியா […]

Read more

கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்)

கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்), பெரும்புலவர் கோ. வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 1320, விலை 900ரூ. கம்ப ராமாயணம், ஆறு காண்டங்களை உடையது. இரண்டாவதான, அயோத்தியா காண்டத்தின் பாடல்களுக்கு, தெளிவுரையும், விளக்க உரையும் கொண்டது இந்த நூல். நூலின் முதலில் 12 படலங்களுக்கும் உரிய கதைச் சுருக்கம் உள்ளது. அது படிப்போருக்கு தூண்டுகோலாக அமையும். கெடுத்தொழிற்தனை என துவங்கும் பாடலுக்கு, உரையாசிரியர் தரும் அருமையான விளக்கம், அவரது புலமைத் திறனுக்கு எடுத்துக்காட்டு. (பக். 156 -161). கிள்ளையொடு பூவை அழுத பாடலுக்கு, ஒருசார் அஃறிணையோடு […]

Read more

புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது

புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது, பாபநாசம் குறள்பித்தன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 30ரூ. எம்.ஜி.ஆர் பற்றி தாய் வார இதழில் இடம் பெற்ற 21 பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.   —- ஷீரடி பாபா, வி.ஆர்.கே. ரவிராஜ், ஸ்ரீஆனந்த நிலையம், சென்னை, விலை 70ரூ. ஸ்ரீசீரடி மகான் சாயி பாபாவை கடவுளாக பாவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு, மனிதக் கடவுளின் மகத்துவத்தை இந்த நூல் மூலம் அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 22/7/2015. […]

Read more

உல்லாசக் கப்பல் பயணம்

உல்லாசக் கப்பல் பயணம், கிருத்திகா, தமிழ் காமிக்ஸ் உலகம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024753.html உல்லாசக் கப்பல் பயணம் ஓர் அனுபவம் ஆசியாவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்து மக்கள் மத்தியிலும் கேளிக்கைகள் மற்றும் உல்லாசச் சுற்றுல்லாக்கள் இக்காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் க்ரூஸ் என்றழைக்கப்படும் உல்லாசக் கப்பலில் ஐந்து நாட்கள் மேற்கொண்ட பயண விவரங்களைச் சற்று கற்பனை கலந்து இந்நூலில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிருத்திகா எழுதியுள்ளார். ஒரு உல்லாசக் கப்பல் எப்படியிருக்கும் என்பதைச் சராசரி மக்கள் […]

Read more

இலக்கிய மாண்புகள்

இலக்கிய மாண்புகள், செம்மூதாய் பதிப்பகம், ஒவ்வொரு நூலும் விலை 60ரூ. குறுந்தொகை காட்சிகள், சிற்றிலக்கியங்களில் வாழ்வியல், அனுமனின் வீரச்செயல்கள், பெரியு புராணத்தில் பக்தி, பாரதியின் பாஞ்சாலி போன்ற தலைப்புகளில் முனைவர் தா. நிலகண்ட பிள்ளை இந்த நூலில் இலக்கிய நயங்களை எழுத்தோவியங்களாக்கித் தருகிறார். இதேபோல அவர் எழுதிய சிலப்பதிகாரச் சிந்தனைகள், செம்மொழிச் சிந்தனைகள், செவ்விலக்கியப் பதிவுகள் ஆகிய நூல்களிலும் இலக்கிய மணம் வீசுகிறது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.   —- வெற்றி உங்களுக்காக, கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. வெற்றியை விரும்பாதவர்கள் […]

Read more

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. மருத்துவக் கல்லூர மாணவர் நாவரசுவை சக மாணவர் ஜான் டேவிட் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர். அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜான்டேவிட் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இது குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டார், செந்தமிழ் கிழார். இதனால் […]

Read more

மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும்

மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும், வானதி பதிப்பகம், விலை 200ரூ. பல்லவ பேரரசின் சம்பவங்களின் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சரித்திர நாவல். இளம் சிற்பி மதிஒளியும் ஆடலரசி மலர்விழியும் முதற் சந்திப்பிலேயே மோதிக்கொள்கிறார்கள். கருத்துக்களால், கலைத்திறன் கொடுத்த துணிவால், இளமைத் துடிப்பால் அவர்கள் ஒருவரையொருவர் வெல்லப் பார்க்கிறார்கள். கடைசிக் கட்டத்தில் ஒரு போட்டியை ஏற்படுத்தி வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்க முடியாமல், காதல் உள்ளங்களைப் பிரிக்காமல், திரைப்படத்திற்கு ஏற்றதாக இந்த சரித்திர நவீனத்தை அமைத்துள்ளார் பட அதிபர், டைரக்டர், கதை வசன கர்த்தா ஏ.வி. நாகராஜன். […]

Read more

பெரிய புராணத்தில் திருக்குறளின் தாக்கம்

பெரிய புராணத்தில் திருக்குறளின் தாக்கம், என். கே. அழகர்சாமி, கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ், பக். 252, விலை 150ரூ. சேக்கிழார் பெருமாள் தாம் எழுதிய பெரியபுராணத்தில், திருக்குறளின் தாக்கத்தால், அதன் அறக்கருத்துக்களை, அடியார்களின் வரலாற்றுடன், இரண்டற கலந்து, வழங்கியுள்ளார். பெரியபுராணம், சமய கருத்துகளை மட்டும் கூறவில்லை. சமுதாய நிலைகளையும், அரசியல் சூழ்நிலைகளையும் கூறுகிறது என்பதை, திருக்குறள் கூறும் சமுதாய, அரசியல் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார். தற்காத்து தற்கொண்டாற் பேணி என்று துவங்கும் திருக்குறளை திருநீலகண்டர் வரலாற்றுடன் ஒப்பிடுவதும் (பக். 37). மனத்துக்கண் மாசிலன் […]

Read more

நலம் 360

நலம் 360, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணர்வுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்தும் மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். நம் உடல் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்து பராமரிப்பதை மறந்துவிடுகின்றோம். விளைவு? செயற்கை கருத்தப்பரிப்பு மையங்களின் பெருக்கம், மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை குறைந்திருப்பதன் எதிரொலி, இளைய தலைமுறையினர் இது மாதிரியான மையங்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மறந்ததுதான். சுத்தம் என்ற நல்ல […]

Read more
1 2 3 4 8