தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல், தீ. கார்த்தி, இயல்வாகை, பக். 128, விலை 100ரூ. உணவை மருந்தாக சாபபிட்ட தமிழர்கள், இன்று மருந்தை உணவாக சாப்பிடுவதற்கு வாழ்க்கை முறையே காரணம். இன்றைய அவசர உலகில், பொருளை சேர்ப்பதற்காக, நிம்மதியை விற்று வருகிறோம். இந்த வாழ்க்கை முறையில் இருந்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதலே இந்த நூல். உணவு முறை, தூக்க முறை, குளியல் முறை, பாட்டிய வைத்தியம், உடற்பயிற்சி, உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு தீர்வு, வாழக்கை முறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம், தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், பக். 408, விலை 150ரூ. நாவலின் கதாநாயகி பூவரசி எழுந்து, வராந்தாவின் பக்கம் போய் நின்று, வானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மேல் பார்வையைப் பதிக்கிறாள். இந்த அழகான நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையே உலா வரும் பூமிப்பந்தின் மேல் வசிக்கும் மனிதர்களுக்கு, இப்படியெல்லாம்கூட துன்பங்கள் வருமா? என்று யோசிக்கிறாள் (பக். 203). மிகவும் நல்லவளான பூவரசிக்கு பல சோதனைகள். அவளை தன் மோச வலையில் சிக்க வைக்க முயல்கிறான் ஒரு தீயவன், கடைசியில் […]

Read more

கொங்கு வேளாளர் வரலாறு

கொங்குவேளாளர் வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ. மனைமேல் பணம் அளிப்பது ஏன்? கொங்கு நாட்டைப் பற்றியும், அதன் காணியாளர்களான, கொங்கு வேளாளர்களின் நாகரிக பண்பாட்டு பெருமைகள், வரலாற்று கீர்த்திகள், கொங்கு வேளாளர்களின் முக்கிய குலங்கள், கூட்டங்கள், குடிகள் மற்றும் அதன் உட்பிரிவுகள் ஆகியவை பற்றியும், மிக விரிவாகவும், துல்லியமாகவும் ஆய்வு செய்து தந்துள்ளார் நூலாசிரியர். தொல்பொருள் ஆய்வு, இலக்கியத் திறனாய்வு, தனிப்பாடல்கள், நாட்டுப்பாடல்கள், காணிப்பாடல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் […]

Read more

நோய்களிலிருந்து விடுதலை

நோய்களிலிருந்து விடுதலை, அ.உமர் ஃபாரூக், எதிர் வெளியீடு, பொள்ளச்சி, விலை 60ரூ. ஒரு சிறிய நூல்கூட ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல். 86 பக்கங்களில் நமது உடல் குறித்த அடிப்படை புரிதலையும் உடலின் இயக்கம் பற்றிய ஞானத்தையும் வழங்குகிறார் ஹீலர் அ. உமர் ஃபாரூக். அக்கு பஞ்சர் சிகிச்சை முறை முன்னோடிகளில் ஒருவரும் தெளிந்த நீரோடை போல அது குறித்து எழுதி வருபவருமான இவர் தனது ஞானத்தின் ஒரு பகுதியை இந்த நூல் மூலம் நமக்குத் தருகிறார். […]

Read more

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு, ஸலாமத் பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. சிறுவர், சிறுமியர்களுக்காக எழுதப்பட்ட நபிமார்கள் வரலாறு பாகம் 2ம் நூஹ் நபி, ஹுது, ஸாலிஹ் நபி ஆகியோரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. அபுல் ஹசன் அலீ அந்நத்வீ எழுதிய இந்த நூலை மவுலவி ஷேக் முகம்மது மழாஹிரி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சிறுவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், தொகுப்பும் உரையும் ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் […]

Read more

அஞ்சாத சிங்கம் சூர்யா

அஞ்சாத சிங்கம் சூர்யா, விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. நடிகர் சூர்யா பற்றிய வண்ணமயமான புத்தகத்தை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. படிப்பை முடித்ததும், மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஐவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் சூர்யா. கூச்ச சுபாவம் உடைய அவர் சினிமாவுக்கு வந்ததும், படிப்படியாக உயர்ந்து இப்போது சிகரத்தைத் தொட்டிருப்பதும் நம்பமுடியாத உண்மை. இதுபற்றிய விவரங்களுடன் ஜோதிகாவுடன் காதல் ஏற்பட்டது முதல் குழந்தை பிறந்தபோது வீடியோ படம் எடுத்தது முதலான நிகழ்ச்சிகளையும் சுவைபட விவரித்துள்ளார் சூர்யா. சூர்யா நடித்த […]

Read more

சேகுவாராவின் பொலிவியன் டைரி

சேகுவாராவின் பொலிவியன் டைரி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html முழுமையான அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் நீதி, மனுநீதி போன்ற சொற்கள் எல்லாம், எந்தெந்தப் பாடல்களில் வருகிறதோ, அந்தப் பாடல்களை எல்லாம் நான் தொட்டிருக்கிறேன் என்ற காரணத்தால், இந்த நூல் குறைந்தபட்சம், கம்பனின் மிகப்பெரிய சொற்களங்சியத்தில் ஒரு சொல்லைக் குறித்த ஒரு தொகுப்பாகவாவது பயன்படும் எனும் நூலாசிரியர் சொல்லாக்கமும், விளக்கமும் என தொடங்கி கம்பனில் நீதியும், நீதியின் […]

Read more

நான் மருத்துவம் மற்றவை

நான் மருத்துவம் மற்றவை, டாக்டர் வி.வி. வரதராசனின் தன்வரலாறு, ராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 240, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-7.html சிக்கல்களில் மாட்டினால் எப்படி மீள வேண்டும்? எறும்பாகப் பிறந்தபோது, அடி சறுக்கவில்லை. யானையாக வளர்ந்தபோது அடி சறுக்கியது. ஆனால் வாழ்க்கை அனுபவங்கள், சறுக்கலில் எக்கச்சக்கமாய் விழுந்து விடாமல் காப்பாற்றின என்பதை, நேரடியாக உணர்ந்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வெற்றியுடன் சாதித்து உள்ளார் டாக்டர் வரதராஜன். இதை, எளிமையாக, சுவையாக எடுத்துரைத்ததில் […]

Read more

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள்

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள், எஸ். ஆர். விவேகானந்தம், கே.கே. முனியராஜ், வந்தவாசி, விலை 60ரூ. இறைநிலைக்குச் சென்ற மனிதர்கள் மனத்தின் போக்கில் சென்று அதன் பயணத்தை முழுமையாக உணர்ந்து, நல்லது கெட்டது அறிந்து, வாழ்வென்னும் நிலையாமையைப் புரிந்துகொண்டவர்கள் சித்தர்கள். சித்தர்களின் அற்புதங்கள் கேட்க கேட்கத் திகட்டாதவை. ஆனால் அவை மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மனிதனாகப் பிறந்தவர்கள் இறைநிலையை அடையும் வழிமுறைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றையும் சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அப்படியானவர்களில் பலர் அறியப்பட்டுள்ளனர். சிலர் அறியப்படவேயில்லை. ஆகவே, அருப்புக்கோட்டைப் பகுதியின் அறியப்படாத சித்தர்களை அறிமுகப்படுத்துவதை […]

Read more
1 2 3 4 5 6 8