தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 250, விலை 281ரூ. தோழர் தி.க.சி. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன், 2014, மார்ச், 25ம் தேதி மறைந்தார். அவரது நினைவைப் போற்றும்வகையில், பல்வேறு அறிஞர்கள், அஞ்சலி செலுத்தினர். அவற்றை நூலாக்கம் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தில் தொகுப்பாசிரியர், 52 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். நாளிதழ்கள், பேரிதழ்கள், சிற்றிதழ்கள், மின்னிதழ்கள் என்று, அனைத்துவிதமான பத்திரிகைகளிலும், வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த தொகுப்பில் கி.ரா., பொன்னீலன், வண்ணநிலவன், பாவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் தி.க.சி. […]

Read more

பாவார்த்த ரத்னாகரம்

பாவார்த்த ரத்னாகரம், விருத்தியுரை எட்டயபுரம் க.கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், பக். 672, விலை 400ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, தீண்டாமையை எதிர்த்துக் குரல் கொடுத்து, பெரும் மதப்புரட்சி செய்த ராமானுஜரால், இந்த ஜோதிட நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்பான விஷயம். மொத்தம், 383 சமஸ்கிருத சுலோகங்களில், 14 நீண்ட அத்தியாயங்களில் லக்ன பலாபலன்கள், 12 பாவகங்களில் நவக்கிரகங்களின் பலம், பலவீனம், கிரக சேர்க்கைகளின் பலன்கள், காரக கிரகங்களின் வலிமை, தசாபுத்திப் பலன்கள், ராஜயோகங்கள், வாகன பாக்கிய யோகங்கள், மரணம் தரும் திசா புத்திகள் […]

Read more

பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு, பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 315ரூ. மூவேந்தர்களில் மிகப் பழமையானவர்கள் பாண்டியர்கள். நீண்ட காலம் ஆட்சி நடத்தியவர்கள். கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிகள் முதலியவற்றால் இவர்களது வரலாற்றை அறிய முடிகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர், பாண்டியர் வரலாறு பற்றி சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர். எனினும், அவர்கள் காலத்துக்குப்பின், புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பல கிடைத்துள்ளன. அவற்றையும் சேர்த்து, இந்த நூலை எழுதியுள்ளார், பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி. அவர் தெரிவிக்கும் சில கல்வெட்டுச் செய்திகள் மூலம் […]

Read more

திரைப்படத் தணிக்கை முறை

திரைப்படத் தணிக்கை முறை, கமர்ஷியல் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. திரைப்படங்களை எடுத்து முடித்தபின், பட அதிபர்களை எதிர்நோக்கி இருக்கும் அடுத்த முக்கியமான வேலை, படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்பி சர்டிபிகேட் வாங்குவதாகும். ஆபாசம் என்றும், ஆட்சேபகரமானவை என்று தணிக்கைக் குழுவினர் கருதுகிற காட்சிகளை, வெட்டி எறிந்து விடுவார்கள். தணிக்கைக் குழுவின் முடிவு அநீதியானது என்று பட அதிபர் கருதினால், அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். இதை எல்லாம் விளக்கமாக கூறுகிறது. நாம் அறிந்து கொள்வோம் – திரைபடத் தணிக்கை முறை என்ற […]

Read more

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி, கலைமாமணி வி. ராமமூர்த்தி, வி.ஆர். பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் 40 ஆண்டு காலம் அனுபவம் உள்ள பத்திரிகையாளர் கலைமாமணி வி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆருடனும், ஜெயலலிதாவுடனும் நெருங்கிப் பழகியவர். தனது 40 ஆண்டு அனுபவங்களை இப்புத்தகத்தில் சவைபட எழுதியிருக்கிறார். மைசூரில், பி.ஆர். பந்துலுவின் கங்காகவுரி படப்பிடிப்பு நடந்தபோது, அரிவாள் கத்தியுடன் வந்து கன்னடர்கள் கலாட்டா செய்தனர். ஜெயலலிதா அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்து நின்று, அவர்களை விரட்டி அடித்த அந்த சம்பவத்தைப் படிக்கிறபோது, சின்ன வயதிலேயே ஜெயலலிதாவிடம் வீரலட்சுமி குடிகொண்டிருந்ததை […]

Read more

பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும்

பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும், மு. இரமேஷ், இராசகுணா பதிப்பகம், பக். 175, விலை 130ரூ. மேலைத் திறனாய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி திறனாய்வு நூல்களைப் படைத்துவரும் நூலாசிரியரின் இன்னொரு திறனாய்வுப் படைப்புதான் இது. அகம், புறம் பற்றிய கருத்துருவாக்கத்தில் இணைவும் இயைபும் என்ற தலைப்பில் அடையாள அரசியல் பேசப்படுகிறது. புறானனூற்றை முன்வைத்து தொல் தமிழ் சமூகங்களும் சமயச் சொல்லாடல்களும் எப்படி இருந்தன என்பதை விளக்கியுள்ளார். அகமரபில் முருகன் பற்றிய விளக்கங்கள், அதாவது சங்க இலக்கியங்களில் முருகன் தொடர்பான குறிப்புகள் பல, சிந்துவெளிப் […]

Read more

சாவித்திரி கலைகளின் ஓவியம்

சாவித்திரி கலைகளின் ஓவியம், மு.ஞா.செ. இன்பா, தோழமை வெளியீடு, சென்னை, பக். 272, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரி, தன்னைப் பற்றி ஒரு சுயசரிதை நூல் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதுபோல உள்ளது இந்நூல். சாவித்திரியின் மரணப்படுக்கையில் தொடங்கி, பின்னர் பின்னோக்கிச் சென்று அவருடைய வாழ்க்கையை ஃப்ளாஷ்பேக் பாணியில் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் திரைக்கதையைப் போல பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாவித்திரியின் தேச பக்தி, தயாள குணம், வெகுளித்தனம், வெளிப்படையான பேச்சு, நிர்வாத் திறன், நடிப்புத் திறன், இயக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு […]

Read more

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம்

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பாசிரியர் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256, விலை 170ரூ. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவைப் போற்றும்விதமாக உருவாகியுள்ள நூல். எனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவே வைத்துக் கொள்ள நான் முயலுகிறேன்’ என்று சொன்னார் ஜெயகாந்தன். அவர் தன்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள், அவர் அளித்த நேர்காணல்கள், ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள், ஜெயகாந்தன் மணிவிழா மலரில் ஜெயகாந்தனின் துணைவியார் எழுதிய கட்டுரை, ஜெயகாந்தன் எழுதிய ‘ஒரு பிடி சோறு’ சிறுகதை, பிரபல ஓவியர்கள் வரைந்த ஜெயகாந்தனின் […]

Read more

நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள்

நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள், முனைவர் பி. சாந்தன், மணிமேகலைப் பிரசரம், பக். 288, விலை 120ரூ. மனிதர்கள் உள்பட பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழத் தேவை பிராணவாயு. இதைத் தருவது பச்சையம் உள்ள மரங்களே. எனவே, ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தாவர வளத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், சுமார் 1000 வகையான தாவரச் சிற்றினங்களை கண்டறிந்துள்ளதோடு, மூலிகைப் பண்ணை, உலர் […]

Read more

தேசம் மறந்த ஆளுமைகள்

தேசம் மறந்த ஆளுமைகள், ராபியா குமாரன், தூண்டில் பதிப்பகம், திருச்சி, விலை 100ரூ. 200 ஆண்டுகளுக்குமேல் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாடு, எத்தனை தியாகங்களைப் புரிந்து இந்த சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறது என்பதை இந்நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக முஸ்லிம்கள் இப்போராட்டத்திற்கு எப்படி முன்னோடிகளாக விளங்கினார்கள் என்பதைப் புள்ளி விபரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். ‘தேசம் மறைந்த அரசர்’ என்ற முதல் கட்டுரையில் இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பஹதூர் ஷாவும், அவரது குடும்பத்தினரும் 1850-களில் ஆங்கிலேயரால் எப்படியெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்திகள் […]

Read more
1 547 548 549 550 551 841