உலகத் தமிழ்க் கவிதைகள் எமது மொழி பெயர் உலகினுள்

உலகத் தமிழ்க் கவிதைகள் எமது மொழி பெயர் உலகினுள், தொகுப்பு செல்வா கனநாயகம், நூல் உரிமை தமிழ் இலக்கியத் தோட்டம், விகடன் வெளியீடு, பக். 288, விலை 250ரூ. உலகம் முழுவதும் உள்ள 78 தமிழ்க் கவிஞர்களின் இலங்கை, இந்தியா மற்றவை நாடுகளில் வாழும் தமிழர்களின் கவிதைகளை மிக நறுக்காகத் தேர்வு செய்து, அற்புதமானவை, மற்றவர்களுக்கு முன்னுதாரமாக ஒரு நூலை விகடன் பிரசுரம் வாயிலாக வெளியிட்டுள்ளது தமிழ் இலக்கியத் தோட்டம். கவிஞர்களின் பட்டியலை இறுதி செய்வது பெரும் பணி. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கவிஞரின் […]

Read more

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க, பி.ஆர். ஜெயராஜன், ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ், சேலம், பக். 144, விலை 75ரூ. நமது வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் சில பழமொழிகளுக்கான விளக்கங்கள், பிறருக்குத் தொந்தரவு கொடுக்காமல் எவ்வாறு செயல்படுவது, ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், பொதுத் துறையில் பணியிலிருக்கும் அரசு ஊழியரின் அசாதாரண செயல்கள், மனைவியின் மொழியைக் கணவர் புரிந்து கொள்வது எப்படி, மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காப்பதற்கான சட்டங்களின் அவசியம், கடன் அட்டை வங்கியிலிருந்து அனுப்பப்படும்போது, அந்த அட்டை அடங்கிய உறை நன்கு மூடி […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 500, விலை 200ரூ. இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகரான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரிடமும் இருந்தது. அவர்களுள் மகாகவி பாரதியார் முதன்மையானவர். விவேகானந்தரும் பாரதியாரும் நேரில் சந்தித்ததில்லை என்றபோதும், இவ்விருவரின் சிந்தனையும் கருத்துகளும் ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இருவரும் ஆன்மிக அடிப்படையில்தான் இந்தத் தேசம் உயர்வடையும் என்ற நம்பிக்கையை வலுவாக முன்வைத்தவர்கள். பாரதியாரின் கவிதைகள் பேசப்படும் அளவுக்கு அவரது இதழியல் பணிகள் […]

Read more

நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு

நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு, டாக்டர் அ. கலாநிதி, வெற்றி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.கலாநிதி, தமது நியூசிலாந்து சுற்றுப்பயண அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகம் இது. நியூசிலாந்து நாட்டில் பார்க்க வேண்டிய இடங்களையும், அந்த நாட்டின் சிறப்புகளையும் நூலாசிரியர் சிறப்பாக வர்ணித்து இருப்பதால், நாமும் அங்கு இருப்பது போன்ற பிரமை உண்டாகிறது. புத்தகம் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்டு இருப்பதால், புத்தகத்தின் சிறப்பு மேலும் உயருகிறது. நியூசிலாந்துக்கு செல்ல இருப்பவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி. செல்ல இயலாதவர்களுக்க […]

Read more

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள், தி இந்து தமிழ், சென்னை, விலை 250ரூ. தமிழ் சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் இது. யுடிவி நிறுவனத்தின் தென்னகப் பிரிவுத் தலைவரான கோ. தனஞ்செயன், இதை எழுதியுள்ளார். படத்தயாரிப்பு, பட விநியோகம் மற்றும் திரைப்படத்துறையின் சகல பிரிவுகளில் நேரடி அனுபவம் உடையவர் இவர். தமிழில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்படங்கள் வெளிவந்துள்ளன. திரையில் பார்த்த படங்களைத்தவிர, முக்கியமான பழைய படங்களையும் டிவிடி மூலம் பார்த்தவர். படங்களின் வெற்றி தோல்வி பற்றி பல கோணங்களில் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இந்தப் […]

Read more

மொழிபெயர்ப்புச் செம்மல் நா. தர்மராஜன் 80

மொழிபெயர்ப்புச் செம்மல் நா. தர்மராஜன் 80, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 240, விலை 200ரூ. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற்பெயர்த்தல் வேண்டும் என்றார் பாரதி. அந்தப் பணியை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு உழைத்து வருபவர் நா. தர்மராஜன். மூச்சுவிடுவது, சாப்பிடுவதைப்போல மொழிபெயர்ப்பும் ஓர் உடலியல் தேவை என்பதைப்போல – கடமை என்பதைப்போல எடுத்துக்கொண்டேன் என்று சொல்லும் அவர், பிற மொழிகளில் இருந்து தமிழுக்குக் கொண்டு சேர்த்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை நூறை நெருங்குகிறது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற உலகப் […]

Read more

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 308, விலை 260ரூ. நெல்சன் மண்டேலாவை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் என்றோ, ஒரு போராளி என்றோ ஒரு சில வார்த்தைகளில் கூறிவிட முடியாது. நிற வெறியை எதிர்த்து தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களுக்காகப் பெரும் போராட்டமே நடத்தி, அதில் வெற்றியும் கண்டு, அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிய ஒரு மாமனிதர், ஒரு தியாகி. மண்டேலா சிறையில் இருந்தபோது அவரால் […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2)

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 992, விலை 600ரூ. தலைப்புக்கேற்ற நூல் அல்ல. ரகசியம் என்று கூறிவிட்டு, பல ரகசியங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறார் தத்துவ ஞானி ஓஷோ. பெட்டைக் கோழியானது அதன் முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொரிக்க முடிகிறது. ஏனெனில், அதன் இதயம் எப்போதும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஒரு முக்கியமான மந்திரச்சொல் என்று கூறும் ஓஷோ, இந்த மந்திரச் சொல்லின் ரகசியத்தைக் கதைப் பின்னலுடன் காது கொடுத்து […]

Read more

கி.பி.1800இல் கொங்குநாடு

கி.பி.1800இல் கொங்குநாடு, புலவர் செ. இராசு, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், சேலம், பக். 352, விலை 195ரூ. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனி ஆட்சி நிலவிய காலத்தில் தமிழகம், ஆந்திரம், கேரளம், மைசூர் ப.கதிகள் எப்படி இருந்தன என்பதை பிரான்சிஸ் புக்கானன் என்பவர் அளித்த நிலைக் குறிப்புகள் வழியாக விளக்குகின்றனர் நூலாசிரியர்கள். டாக்டர் புக்கானன் சென்னையிலிருந்து கோவை வரையிலும், மைசூரிலிருந்து கரூர் வரையிலும் குறுக்கும் நெடுக்குமாக மேற்கொண்ட கள ஆய்வில் நேரடியாகக் கண்ட தகவல்களின் பதிவு மட்டுமின்றி, அந்த இடத்தின் அதற்கு […]

Read more

நீதி நூல் களஞ்சியம்

நீதி நூல் களஞ்சியம் (22 நூல்கள் உரையுடன்), உரையாசிரியர்கள் பத்மதேவன், தமிழ்ப்பிரியன், கொற்றவை வெளியீடு, சென்னை, பக். 1056, வலை 720ரூ. ஒழுக்கம், நீதி, அறம், பண்பாடு பணிவுடைமை என்பதெல்லாம் என்ன? அவை என்ன விலை? எங்கே கிடைக்கும்? என்று கேட்கும் இன்றைய இளயை சமுதாயத்திற்கு தேவையான தொகுப்பு இந்நூல். மனித வாழ்க்கையைச் செம்மைபடுத்தும் நீதிநெறிக் கருத்துகளை நம் சங்கப் புலவர்கள் வாரி வழங்கியுள்ளனர். ஆனால், அதைப் படிப்போரும், அதன்வழி நடப்போரும் அருகிவிட்ட காலம் இது. நீதிநூல்கள் – அற நூல்கள் அனைத்தும் ஒரே […]

Read more
1 610 611 612 613 614 841