உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. எங்கும் மணலே நிறைந்திருக்கும் பாலைவனத்தில் செல்லும் பாதை எது? அதன் எல்லை எங்கே இருக்கிறது? அந்தப் பாதையில் சென்ற அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அறிவர். வாழ்க்கையும் அந்த மணல் பாதைபோல்தான். அதில் நாம் செல்லும் பாதைக்கு வழிகாட்டி, செல்ல வேண்டிய எல்லைக்கு அழைத்துச் செல்கிறார் ஓஷோ. வழிகாட்டியை முழுமையாக நம்பினால்தான் பயணத்தை முழுமையாக ரசிக்க முடியும் என்கிறார். வாழ்வின் மறுபுறம் மறைந்துள்ள மகிழ்ச்சியைக் காண்பதற்கான சூஃபி தத்துவம் எளிய முறையில் […]

Read more

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் ஒன்று, ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 356, விலை 210ரூ. உலகில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகமும் கிரேக்க அறிஞர் பிதாகோரஸ் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அதற்கான எளிய காரணம், வழக்கமான வகையைச் சேர்ந்த கல்வியாளராக அவர் இருக்கவில்லை. அவர் நிஜமான தேடல் கொண்டிருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் பயணத்திலேயே கழித்தார். ஞானத்தின் ஒளிக்கீற்று எங்காவது ஒரு மனிதரிடம் சற்றே தென்பட்டாலும் அங்கு சென்று அவரிடம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும் என்று எண்ணினார். […]

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. அமெரிக்காவில் ஓஷோ தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை, அரசியல்வாதிகளை நடுங்க வைத்த அவரது உரை, மக்களை மாற்றிய அவரது சிந்தனைகள், அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு தனது சொற்பொழிவுகளில் பதில் அடி கொடுத்து, அதற்கான கேள்விகள், பதில்கள் என்று ஓஷோவிற்கே உரிய கடுமையான அதே சமயம் நகைச்சுவையான பேச்சினை உள்ளடக்கியது இந்நூல். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. புராதன இசையைத்தான் சப்தமில்லாத சப்தம் என்கிறார் ஓஷோ. அது நம்மைச் சூழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. அதைக் கேட்டுணரும் முயற்சிதான் தியானம் என்கிறார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —– சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள், சுப்ரபாரதி மணியன், விஜயா பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. இன்பச் சுற்றுலா உள்ளிட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு. சின்னஞ்சிறுகதைகள் மூலம் மாணவர்களுக்கு ஆதிவாசிகள். […]

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. இருபத்தோராம் வயதில் ஞானம் பெற்ற ஆன்மிக அறிஞர் ஓஷோ, சிறப்பு டைனமிக் தியான முறைகளை அறிமுகப்படுத்தியவர். அவர் சீடர்கள் மத்தியிலும், தம்மைச் சந்திக்க வந்தவர்கள் நடுவிலும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகள் 650 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உன்னதமான ஜந்து ஜென் கதைகள் மற்றும் சீடர்கள் கேட்ட கேள்விகளின் துணையுடன், தியானம் என்றால் என்ன என்பதற்கான தெளிவான விளக்கங்களை ஓஷோ இந்த நூலில் விளக்குகிறார். மனதின் செயல்பாடுகள் பற்றியும், அதை ஆராய்ந்து […]

Read more

சப்தமில்லா சப்தம்

சப்தமில்லா சப்தம் (ஜென் கதைகள் குறித்த உரைகள்), ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. ஐந்து அற்புதமான ஜென் கதைகளின் மூலம் வெளிப்படும் ஓஷோவின் வாக்குகளே சப்தமில்லாமல் நம் இதயத்தை ஊடுருவிச் சென்று பலவித சப்தங்களை நம்முள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. ‘மனித அனுபவத்தில் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையிலான பாசம் கருணைக்கு நெருக்கமானது. மக்கள் அதை அன்பு என்கிறார்கள். அதை அப்படி அழைக்கலாகாது. அன்பைவிடவும் அது கருணைக்கு நெருக்கமானதாகக் காணப்படுகிறது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் தாயாகவே […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம் (கௌதம புத்தரின் பிரக்ஞா பரமிதா இதய சூத்திரம்), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 448, விலை 350ரூ. இந்நூலில் பத்து தலைப்புகளில் கூறப்பட்டுள்ளவற்றை ஓரிரு பத்திகளில் விளக்கிவிட முடியாது. பக்கத்திற்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்து, திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் நூல். ‘நான் ஒரு புத்தர்’ என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்கட்டும். மேலும் இந்த ‘நான்’ என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ‘நான்’ மற்றும் புத்தநிலை ஆகிய இரண்டும் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. வெளிச்சம் உள்ளே வரும்போது இருட்டானது […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம், ஓஷோ, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகப் புகழ்பெற்ற ஆன்மிகக் குருவாகத் திகழ்ந்தவர் ஓஷோ. மனித குலத்தின் விழிப்புணர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னைக் கொண்டறிதலும், தியானமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். அவரது இதய சூத்திரம் என்ற நூலைத் தமிழில் சுவாமி சின்மானந்த் மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிக அன்பர்களின் இதயம் கவரும் நூல். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- குருசேத்திரக் குடும்பங்கள், ஜோதிர்லதா கிரிஜா, பூம்புகார் பதிப்பகம், விலை 145ரு. இருவேறு பொருளாதார நிலையில் வாழும் இரு குடும்பங்களின் வாழ்வை […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 260ரூ. இன்றைய சமுதாயம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிமுறைகளைச் சொன்னவர். நமது விரைவு வாழ்க்கையை நெறிப்படுத்த தியான முறையைத் தந்தவர் ஓஷோ. முப்பது ஆண்டுகளாக அவர் ஆற்றிய சொற்பொழிவு, எண்ணற்ற புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் இந்த திடீர் இடியோசையும் ஒன்று. இதை சுவாமி சியாமானந்த் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எதற்காகவும் உன் வாழ்க்கையை தியாகம் செய்யாதே. வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய். வாழ்க்கைதான் இறுதி இலக்கு. அது எந்த நாட்டை விடவும் […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 416, விலை 260ரூ. தூங்கிக் கொண்டிருப்பவர்களின் மனக் கதவுகளைத் திடீரென்று திறக்க, இந்த இடியோசை தேவைப்படுகிறது. உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் விழிப்புணர்வு அடைந்தவர்களாக ஆகிவிட்டாலே போதும். ஏனெனில் உண்மை என்பது இங்கே ஏற்கெனவே இருக்கிறது. ஓஷோவைப் பொறுத்தவரையில் எல்லா மாற்றங்களுமே தனி மனிதனிடம் ஏற்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஓஷோவின் இந்த நூல் வார்த்தைகளுக்கு அப்பால், உள்ளத்திற்கு அப்பால், எல்லா புரிதர்களுக்கும் அப்பால் […]

Read more
1 2 3 4