திருக்குறளில் உயிர்ச்சூழல்
திருக்குறளில் உயிர்ச்சூழல், க.சி. அகமுடைநம்பி, மீனாட்சி புத்தக நிலையம், பக். 217, விலை 160ரூ. அற நூலாகிய திருக்குறளில் ‘உயிர்ச்சூழல்’ பற்றிய சிந்தனைகள் நிறைந்திருப்பதை வெளியில் கொண்டு வந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்குறள் ஆய்வுலகில் இது புதிய முயற்சியும்கூட. அனைத்து உயிர்களும் தத்தம் சூழல்கள் கெடாமல் அல்லது கெடுக்கப்படாமல், இயல்பான முறையில் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்ற சூழலையே ‘உயிர்ச்சூழல்’ என்று வரையறுக்கிறார் பதிப்பாசிரியர். புதிய ஆய்வுக் களத்தை திறந்து வைத்திருக்கும் நூல். நன்றி: குமுதம், 28/12/2016.
Read more